இலங்கை எரிபொருள் விநியோக நிலையங்களில் ராணுவம்

இலங்கை எரிபொருள் விநியோக நிலையங்களில் ராணுவம்

1 mins read
30f05678-eeff-42af-8d4e-d70101f01fcc
வீட்டுச் சமையலுக்குத் தேவையான மண்ணெண்ணெய் வாங்க தலைநகர் கொழும்புவில் உள்ள எரிபொருள் விநியோக நிலையம் ஒன்றில் ஏராளமான பொது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு காத்திருந்தபோது மூன்று முதியோர் மாண்டனர்.படம்: ராய்ட்டர்ஸ் -

எரி­பொ­ரு­ளை­யும் வீட்டு சமை­ய­லுக்­குத் தேவைப்­படும் மண்­ணெண்ெ­ணய்­யை­யும் வாங்க இலங்கை மக்­கள் அலை­மோ­து­கின்­ற­னர். அவர்­கள் அதற்­காக நீண்­ட­நே­ரம் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

மண்­ணெண்­ணெய் வாங்­கக் காத்­தி­ருந்­த­போது மூன்று முதி­யோர் மாண்­ட­தைத் தொடர்ந்து நாடு முழு­வ­தும் உள்ள நூற்­றுக்­க­ணக்­கான எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­களில் நேற்று முதல் ராணு­வப் படை­யி­னர் நிறுத்­தப்­பட்­ட­னர். இதற்­கான உத்­த­ரவை இலங்கை அரசு பிறப்­பித்­துள்­ளது.

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் விலை­கள் திடீ­ரென்று ஏற்­றப்­பட்­ட­தைத் தொடர்ந்­தும் அத்­த­கை­ய பொருள்­க­ளுக்­குப் பற்­றாக்­குறை ஏற்­பட்டு வரு­வ­தைத் தொடர்ந்­தும் மக்­கள் பதற்­ற­ம­டைந்­துள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி கூறு­கிறது.

வரி­சை­யைக் கட்­டுப்­ப­டுத்தி எரி­பொ­ருள் விநி­யோ­கம் சீராக நடை­பெ­று­வ­தைக் கண்­கா­ணிக்­கும் பணி­யில் ராணு­வத்­தி­னர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

ஒவ்­வொரு நிலை­யத்­தி­லும் தலா இரு வீரர்­கள் வீதம் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக ராணு­வப் படை­யின் பேச்­சா­ளர் நிலந்தா பிரே­ம­ரத்ன தெரி­வித்­தார்.

இது பொது­மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­கான நட­வ­டிக்கை என்று அர­சாங்­கப் பேச்­சா­ளர் ரமேஷ் பத்­தி­ரண கூறி­னார்.

இலங்­கை­யின் அந்­நி­யச் செலா வணிக் கையி­ருப்பு, வர­லாற்­றில் இல்­லாத அள­வுக்­குக் குறைந்து விட்­ட­தால் இறக்­கு­ம­திக்­குப் பணம் செலுத்த அந்த நாடு திண்­டாடி வரு­கிறது. அதனால், உதவி கேட்டு பல நாடு­க­ளை­யும் இலங்கை அணுகி வரு­கிறது.