பயணம்: சிங்கப்பூர்- மலேசியா இணக்கம்

பயணம்: சிங்கப்பூர்- மலேசியா இணக்கம்

2 mins read

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையில் பய­ணங்­களை முழு­மை­யா­கத் தொடங்க ஏது­வாக செயல்­பட இரு நாடு­களும் ஒப்­புக்­கொண்டு இருக்­கின்­றன.

முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­க­ளுக்­குத் தரை, விமானப் பய­ணங்­களை முழு­மை­யா­கத் தொடங்கு­வதன் தொடர்­பில் தாங்­கள் உட­ன­டி­யா­கச் செயல்­பட முடி­யும் என்று இரு நாடு­க­ளின் சுகா­தார அமைச்­சர்­கள் கூறியுள்­ள­னர்.

தடுப்­பூசி போட்­டுக்கொண்­டோ­ருக்கு தரை, விமா­னப் பயணங்­களை முற்­றி­லும் தொடங்­கு­வ­தற்கு இரு நாடு­களும் செயல்­பட இது தக்க தருணம் என்று சிங்­கப்­பூ­ரின் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று ஃபேஸ்புக்கில் தெரி­வித்­தார்.

மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீனும் டுவிட்­ட­ரில் நேற்று இதனை குறிப்பிட்டார். திரு ஓங், நேற்று முதல் வரும் வெள்ளிக்­கி­ழமை வரை மலே­சிய பய­ணம் மேற்­கொண்டு இருக்­கி­றார்.

அவ­ரு­டன் சுகா­தார அமைச்­சின் மூத்த அதி­கா­ரி­களும் சென்று இருக்­கி­றார்­கள். திரு ஓங், மலே­சிய சுகா­தார அமைச்­சரை சந்­தித்­தார். பிறகு பல விவரங்களை அவர் தெரிவித்தார்.

"நாங்­கள் இரு­வ­ரும் பய­னுள்ள முறையில் மனம் திறந்து விவா­தித்­தோம். சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் அரு­மை­யான, நீண்ட நெடுங்­கால இருதரப்பு உறவை அனு­ப­வித்து வரு­கின்­றன.

"இரு நாட்டு மக்­க­ளுக்­கும் இடை­யில் பல தொடர்­பு­களும் உற­வும் உள்­ளன. ஆனால் இவை கொவிட்-19 கார­ண­மாக பாதிப்­புக்கு உள்­ளா­கி­விட்­டன," என்று திரு ஓங் குறிப்­பிட்­டார். கொரோனா சூழ்­நிலை நிலைப்­பட்டுள்ளது. இரு நாடு­களி­லும் சூழ்­நிலை மேம்­பட்டு வரு­கிறது.

"ஆகை­யால் விமா­னம், தரைப் பயணங்­களை மீண்­டும் தொடங்­கு­வ­தற்கு ஏதுவாக இப்­போது நாம் செயல்­பட வேண்­டும்," என்று திரு ஓங் கூறினார்.

தடுப்­பூசி போட்­டுக்கொண்­டோ­ருக்­கான விமான, தரைப் பய­ணங்­கள் மீண்டும் தொடங்­கி­னால் இரு நாட்டு மக்­க­ளுக்கும் இடை­யில் தொடர்­பு­கள் மறு­ப­டி­யும் பல­மடை­யும் என்று அவர் தெரிவித்தார்.

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­க­ளுக்கு ஏப்­ரல் 1 முதல் தன் எல்லை ­க­ளைத் திறந்­து­விட மலே­சியா ஆயத்­த­மாகி வரு­கிறது. சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யாவும் கடந்த நவம்­ப­ரில் தரை, விமா­னப் பய­ணங்­களை தொடங்­கின. என்­றா­லும் பய­ணி­க­ளுக்கு வரம்பு விதிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் முற்­றி­லும் தடுப்­பூசி போட்டுக்­கொண்ட சுற்­றுப்பய­ணி­க­ளுக்குத் தன் எல்­லை­களை மேலும் திறந்­து­விட திட்­ட­மி­டு­வ­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சர் எஸ் ஈஸ்­வ­ரன் இம்­மா­தத் தொடக்கத்­தில் அறிவித்தார்.

இப்­போது 32 நாடு­களில் இருந்து முற்றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­களை சிங்­கப்­பூர் அனு­ம­திக்­கிறது. அப்­படி சிங்­கப்­பூர் வரு­வோர், தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ளவேண்­டாம்.