சிங்கப்பூரில் கொவிட்-19 சூழ்நிலை பற்றிய புதிய நிலவரங்களை பிரதமர் லீ சியன் லூங் இன்று முற்பகல் 11 மணிக்குத் தொலைக் காட்சி வழி தெரியப்படுத்துவார். திரு லீ நேற்று இதனை ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
''ஓமிக்ரான் தொற்று குறைகிறது. சிங்கப்பூரில் கொவிட்-19 சூழ்நிலை மேம்படுகிறது.
"கொரோனா கிருமியுடன் சேர்ந்து வாழ்வதைப் படிப்படியாக சிங்கப்பூரர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
''சிங்கப்பூர் சூழ்நிலை பற்றியும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் நாளை (இன்று) முற்பகல் 11 மணிக்கு நேரடியாக நான் உரையாற்றுவேன்,'' என்று திரு லீ நேற்று கூறினார். இங்கு 2020ல் கொரோனா கிருமி தலைகாட்டியது முதல் திரு லீ இத்துடன் ஒன்ப தாவது முறையாக கொவிட்-19 தொடர்பில் உரையாற்றுகிறார்.
பிரதமர் உரையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையத்தளம், ஃபேஸ்புக் பக்கம், யூடியூப் ஆகிய வற்றில் நேரடியாகக் காணலாம். பிரதமரின் ஃபேஸ்புக் பக்கத்திலும் மீடியாகார்ப் ஒளிவழிகளிலும் பொதுமக்கள் பிரதமரின் உரையை நேரடியாகக் காணமுடியும்.

