இந்தியாவிலும் மாற்றங்கள்: ஏப்ரலில் வழக்கநிலை திரும்ப ஏற்பாடு

இந்தியாவிலும் மாற்றங்கள்: ஏப்ரலில் வழக்கநிலை திரும்ப ஏற்பாடு

2 mins read

இந்­திய அர­சாங்­கம் கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் அனைத்­தை­யும் மார்ச் 31 முதல் விலக்­கிக் கொள்­வ­தாக அறி­வித்து உள்­ளது.

எல்லா நாடு­க­ளை­யும்போல இந்­தி­யா­வை­யும் கொரோனா கிரு­மித்­தொற்று பாடாய்­ப்ப­டுத்­தி­விட்­டது. நாள் ஒன்­றுக்கு 300,000க்கும் மேற்­பட்­டோர் பாதிப்படையும் அள­வுக்கு நிலைமை மோச­ம­டைந்து இருந்­தது. மூன்­று­கட்­ட கிரு­மிப் பர­வ­லில் பல மில்­லி­யன் மக்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர். 500,000க்கும் மேற்­பட்­டோர் மாண்­ட­னர்.

இருப்­பி­னும் கடந்த ஒரு மாத கால­மாக இந்­தி­யா­வில் தொற்­றுப் பர­வல் கணி­ச­மா­கக் குறைந்து வரு­கிறது. அதற்குத் தடுப்­பூசி முக்­கிய கார­ண­மா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

தின­மும் தொற்­றால் பாதிக்­கப்­

ப­டு­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து 2,000க்குக் கீழ் பதி­வாகி வரு­கிறது. புதன்கி­ழமை 1,778 பேரும் நேற்று 1,938 பேரும் பாதிக்­கப்­பட்­ட­னர். 67 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

கிரு­மிப் பர­வல் கார­ண­மாக கடந்த ஈராண்­டு­க­ளாக அனைத்­து­லக எல்­லை­களை மூடு­வது தொடர்­பான அறி­விப்பை ஒவ்­வொரு மாத­மும் இந்­திய அர­சாங்­கம் வெளி­யிட்டு வந்­தது. அதன் தொடர்ச்சி யாக, இந்த மாத அறி­விப்­புக்­காக நிலை­மையை மறு­ப­ரி­சீ­லனை செய்த அர­சாங்­கம், கட்­டுப்­பா­டு­கள் எல்லா வற்றையும் விலக்­கிக்கொள்ள முடிவு செய்­தது.

இது தொடர்­பாக மத்­திய உள்­துறை செய­லா­ளர் அஜய்­கு­மார் பல்லா, இந்­தி­யா­வின் அனைத்து மாநி­லங்­க­ளுக்கும் ஒரு சுற்­ற­றிக்கை அனுப்­பி­யுள்­ளார்.

கொவிட்-19 தொடர்­பில் அறி­விக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் அனைத்­தும் மார்ச் 31 முதல் முற்­றா­கத் தளர்த்­தப்­ப­டு­வ­தா­க­வும்

ஏப்­ரல் 1 முதல் எல்­லாம் வழக்­க­

நி­லைக்கு திரும்ப ஏற்­பாடு செய்ய வேண்­டும் என்­றும் மாநில முதல்­வர்­களை அவர் கேட்­டுக்­கொண்டு உள்­ளார். குறிப்­பாக, சமூக, பொரு­ளி­யல் மீட்பு நட­வ­டிக்­கை­களை மீண்­டும் முடுக்­கி­வி­டு­மாறு அவர் அந்த சுற்­ற­றிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை தேசிய பேரி­டர் மேலாண்மை ஆணை­யமே நிர்­வ­கித்து வந்­தது. இனி கட்­டுப்­பா­டு­கள் தேவை­யில்லை என்று அந்த ஆணை­ய­மும் உள்­துறை அமைச்­சும் முடிவு செய்து அதற்­கான அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளன. இருப்­பி­னும் பொது

வெளி­யில் முகக்­க­வ­சம் அணி­வ­தும் சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்­று­வ­தும் தளர்த்­தப்­ப­டாது என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. மாநில அர­சு­கள் தங்­க­ளது நிலை­மைக்­கேற்ப இதில் மாற்­றம் செய்­து­கொள்­ள­லாம் என­வும் சுற்­ற­றிக்­கை­யில் கூறப்­பட்டு உள்­ளது.

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படு வதால் ஏப்­ரல் 1 முதல் பேருந்­து­கள், ரயில்­களில் முழு அள­வில் பயணி கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள். திரு­ம­ணம், இறு­திச்­ச­டங்கு உள்­ளிட்ட நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள் வோருக்கு விதிக்­கப்­பட்ட கட்­டுப் பாடு­கள் நீக்­கப்­பட்டு, எத்­தனை பேர் வேண்­டு­மா­னா­லும் பங்­கேற்­க­லாம் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. பொதுக் கூட்­டங்­கள், திரை­ய­ரங்­கு­க­ளி­லும் முழு­மை­யான எண்­ணிக்­கை­யில் மக்­கள் அனு மதிக்­கப்­ப­டு­வர்.

அதே­நே­ரம் எந்த மாநி­லத்­திலா வது திடீர் என்று தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்­தால் கட்­டுப்­பா­டு­களை விதிக்­கும் பொறுப்பு அந்­தந்த மாநில அர­சு­க­ளுக்­குத் தரப்­பட்டுள்­ள­தாக மத்­திய அரசு அறி­வித்துள்­ளது. இதன்­மூ­லம் இந்­தி­யா­வி­லும் இயல்பு நிலை முற்­றாக மீளக்­கூ­டும்.