பொருளியல் வளர்ச்சி, சமுதாயப் பலன் வேண்டும்

பொருளியல் வளர்ச்சி, சமுதாயப் பலன் வேண்டும்

3 mins read
b1183ff2-6650-4d7b-9d0e-0c5466200e42
டைசன் நிறுவனத்தின் சர் ஜேம்ஸ் டைசனுடன் பிரதமர் லீ.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அனைத்­து­லக அள­வில் காணப்­படும் நில­வ­ரங்­க­ளுக்கு ஏற்ப சிங்கப்­பூர் தன்னை மாற்­றிக்­கொண்டு பொரு­ளி­யல் வளர்ச்­சிக்­குப் பங்­காற்ற வேண்­டும். அதே சம­யம், சமு­தா­யம் பலன் அடை­வ­தை­யும் நாடு உறு­திப்­படுத்­திட வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் தனது புதிய அனைத்­து­லக தலை­மை­ய­கத்தை நிறு­வி­யி­ருக்­கும் டைசன் நிறு­வனம் நேற்று அதைச் சிறப்­பிக்­கும் விழாவை நடத்­தி­யது. அதில் பிர­த­மர் லீ கலந்­து­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரில் அடுத்த நான்கு ஆண்­டு­க­ளுக்கு டைசன் நிறு­வனம் $1.5 பில்­லி­யன் முத­லீடு செய்­ய­வுள்­ளது. அத்­து­டன் அதன் ஆய்வு, மேம்­பாட்­டுக் குழு­வில் மேலும் 250க்கும் மேற்­பட்ட பொறி­யா­ளர்­கள், விஞ்­ஞா­னி­கள் ஆகி­யோரை நிறு­வ­னம் சேர்க்­க­வுள்­ளது.

இத­னால், இங்­குள்ள ஊழி­யர்­க­ளுக்கு உற்­சா­கம் தரக்­கூ­டிய வேலை வாய்ப்­பு­கள் காத்­தி­ருப்­ப­தாக திரு லீ குறிப்­பிட்­டார். மேலும், அனைத்­து­ல­கச் சந்­தைக்­காக புதிய பொருள்­க­ளை­த் தயா­ரிக்­கும் சாத்­தி­யம் சிங்­கப்­பூ­ருக்கு இருக்­கும் என்­றார். சிறிய நாடாக இருப்­ப­தால், முத­லீ­டு­களில் போட்­டித்­தன்மை, புவி­சார் அர­சி­யல் நெருக்­க­டி­கள், விநி­யோ­கத் தொடர்­கள் போன்ற அம்­சங்­களில் அனைத்­து­லக ரீதி­யாக ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது சிங்­கப்­பூருக்­குச் சவா­லாக இருக்­க­லாம்.

ஆனால், போட்­டித்­தன்மை மிக்­க­தாக சிங்­கப்­பூர் தன்னை மாற்­றிக்­கொள்ள முடி­யும், மாற்­றிக்­கொள்ள வேண்­டும் என்­றார் திரு லீ. இதன் மூல­மாக சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் வளர்ச்சி காணும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

இந்த வளர்ச்சி, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­தா­க­வும் சமு­தா­யத்­தின் அனைத்­துப் பிரி­வி­ன­ருக்­கும் பலன் அளிப்­ப­தா­க­வும் இருப்­பதை சிங்­கப்­பூர் உறு­திப்­படுத்­தும் என்­றும் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

எல்­லை­க­ளைத் திறப்­பது, வர்த்­தகத் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது என்று மட்­டும் இல்­லாமல், பிற­ரு­டன் இணைப்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளும் இயல்பு சிங்­கப்­பூர் மக்­க­ளின் பண்­பி­லும் இருக்க வேண்­டும் என்­றார்.

"புதிய யோச­னை­க­ளை­யும் திற­னா­ளர்­க­ளை­யும் வர­வேற்­பது, மற்­ற­வர்­க­ளி­ட­மி­ருந்து கற்­றுக்­கொள்ள எந்­நே­ர­மும் தயா­ராக இருப்­பது, மாற்­றங்­களை ஏற்­றுக்­கொள்­ளவோ முன்­னேற்­றம் காணவோ தயங்­கா­மல் இருப்­பது போன்­றவை நம் சமு­தா­யத்­தின் நெறி­மு­றை­க­ளாக இருக்க வேண்­டும்," என்று அவர் சுட்­டி­னார்.

வெவ்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து தலை­சி­றந்த விஞ்­ஞா­னி­கள், வடி­வ­மைப்­பா­ளர்­கள், பொறி­யாளர்­கள் ஆகி­யோரை வர­வ­ழைத்து பல­த­ரப்­பட்ட யோச­னை­க­ளை­யும் கலா­சா­ரங்­க­ளை­யும் ஏற்­றுக்­கொண்டு, சிங்­கப்­பூ­ருக்­கென ஒரு தனி பாணியை ஏற்­ப­டுத்­தி­ய­தன் மூலம் நாடு கட்­ட­மைக்­கப்­பட்­டது.

எனி­னும், வெளி­நாட்­ட­வர் சிங்­கப்­பூர் வந்து வேலை செய்ய வேண்­டாம் என்று வேலி போடத் தூண்­டும் ஒவ்­வொருவர் எண்­ண­மும் நம்­மையே பின்­னா­ளில் பாதிக்­கும் என்­றார் திரு லீ.

பொரு­ளி­யல் வளர்ச்சி காணாது, வேலை வாய்ப்­பு­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அதி­கம் இல்­லாத நிலை ஏற்­பட்­டால் நாட்­டின் நீண்­ட­கால வாய்ப்­பு­களும் அபாய நிலைக்­குத் தள்­ளப்­படும் என்­றார் அவர்.

தொழில்­துறை பங்­கா­ளி­கள், ஆய்­வா­ளர்­கள், அர­சாங்க அமைப்பு­கள் போன்ற வெவ்­வேறு தரப்­பி­ன­ரு­டன் சிங்­கப்­பூர் இணைந்து புத்­தாக்க கலா­சா­ரம் ஒன்­றைத் தொடர்ந்து உரு­வாக்க வேண்­டும் என்று குறிப்­பிட்­டார்.

குறிப்­பாக அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் ஆகிய பிரி­வு­களில் திற­னா­ளர்­களை வர­வேற்­க­வும் உரு­வாக்­க­வும் சிங்­கப்­பூர் தொடர்ந்து பாடு­படும் என்­றார்.

கிட்­டத்­தட்ட 110,000 சதுர அடி பரப்­ப­ளவு உள்ள தேசிய நினை­வுச் சின்­ன­மான செயிண்ட் ஜேம்ஸ் பவர் ஸ்டே­ஷ­னில் டைசன் நிறு­வ­னத்­தின் புதிய தலை­மை­யகம் அமைந்­துள்­ளது.

மேலும் செய்தி - பக்­கம் 2