தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய சேவையாளர்களுக்கு $100 அனுகூலத் தொகை

2 mins read
b5aa3c13-1196-4264-b486-a5027acabbef
மாஜு முகாமில் நடைபெற்ற படைத் திரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராணுவ வீரர்களுடன் பேசிய தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது (நடுவில்).படம்: சாவ்பாவ் -

தேசிய சேவை தொடங்கி இவ்­வாண்­டு­டன் 55 ஆண்­டு­கள் ஆகின்­றன.

இதை ஒட்டி சிங்­கப்­பூர்

ஆயு­தப்­ப­டை­கள், உள்­து­றைக் குழு ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த கடந்­த­கால, தற்­போ­தைய ஆயத்­த­நிலை தேசிய சேவை யாளர்­க­ளுக்கு $100 மதிப்­புள்ள மின்­னி­லக்க வழங்­கீ­டு­கள் வழங்­கப்­படும்.

அதோடு ஓராண்­டுக்கு 'சாஃப்ரா' அல்­லது 'ஹோம்­டீம்­என்­எஸ்' இல­வச உறுப்­

பி­யத்தையும் அவர்கள் பெறுவர்.

என்­எஸ்55 அங்­கீ­கா­ரத் திட்­டம் என்ற வடி­வில் அவர்­க­ளுக்கு இவை வழங்­கப்­ப­டுகின்றன. சிங்­கப்­பூரைத் தற்­காப்­ப­தி­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் வாழ்வைத் தொடர்­வதை உறு­திப்­ப­டுத்­து

­வ­தி­லும் தேசிய சேவை­யா­ளர்­கள் ஆற்­றும் உயிர்­நா­டி­யான பணிக்கு நன்­றி­கூ­றும் வகை­யில் இந்­தத் திட்­டம் இடம்­பெ­று­கிறது.

தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது நேற்று இந்த விவ­ரங்­களை அறி­வித்­தார். ஏறக்­கு­றைய ஒரு மில்­லி­யன் தேசிய சேவை­யா­ளர்­

க­ளுக்கு ஜூன் நடுப்­ப­குதி முதல் கடி­தம் அனுப்பப்படும். அதில் இவை சம்­பந்­த­மான பல விவ­ரங்­கள் இருக்­கும்.

மாஜு முகா­மில் நடந்த படைத் திரட்டு நிகழ்ச்சி ஒன்­றுக்கு திரு ஸாக்கி வரு­கை­ய­ளித்­தார். அதை­யொட்டி அவர் செய்­தி­யா­ளர்­

க­ளி­டம் பேசி­னார்.

அப்­போது அவர், என்­எஸ்55 ஓராண்டு காலம் இயக்­கம் தொடங்­கு­வது பற்றி குறிப்­பிட்­டார்.

உக்­ரே­னில் ரஷ்யா படை­யெ­டுத்து இருக்­கும் நிலை­யில், தேசிய சேவை எந்த அள­வுக்கு முக்­கி­யம் என்­பதை அவர் விளக்­கிக் கூறி­னார்.

''உக்­ரே­னி­யர்­க­ளைப் பாருங்­கள், ரஷ்­யப் படை­யி­ன­ருக்கு அவர்­கள் கொடுக்­கும் எதிர்ப்பை கவ­னி­யுங்­கள். இது சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் ஒரு பாடம்,'' என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

"இத்­த­கைய ஒரு மன­நி­லையை ஒரே­நா­ளில் ஏற்­ப­டுத்­தி­விட முடி­யாது.

"தேசிய சேவை தொடங்­கப்­பட்டு 55 ஆண்­டு­கள் ஆகின்­றன. நேரம் வரும்­போது, தேவை ஏற்­

ப­டும்­போது சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் நாட்டைத் தற்­காக்க ஆயத்­த­மாக இருப்­பார்­கள் என்று நான் நம்­பு­கிறேன்," என்று திரு ஸாக்கி கூறி­னார்.