ஒரே சத்தம்: இரைச்சல் மிகுந்த நகர்களில் ஐந்து இந்தியாவில்

ஒரே சத்தம்: இரைச்சல் மிகுந்த நகர்களில் ஐந்து இந்தியாவில்

2 mins read

உல­கில் சகித்­துக்­கொள்ள முடி யாத அள­வுக்கு இரைச்­சல் மிக்க நக­ரங்­க­ளின் பட்­டி­ய­லை ஐநா சுற்­றுச்­சூ­ழல் அமைப்பு வெளி­யிட்டு உள்ளது. 'வரு­டாந்­திர முன்­னணி அறிக்கை 2022' என்ற அந்த அறிக்­கை­யில் இடம்­பெற்றுள்ள இரைச்­சல்­மிக்க நகர்­களில் ஐந்து இந்­திய நகர்­கள் இருக்கின்றன.

உல­கி­லேயே பங்­ளா­தேஷ் தலை­ந­கர் டாக்­கா­வில்­தான் இரைச்­சல் அதி­கம் (119 டெசி­பல்) என்று அறிக்கை குறிப்­பிடு­கிறது.

இந்­தி­யா­வின் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் உள்ள மொரோ­தா­பாத் நக­ரம் இரண்­டா­வது இடத்­தில் (114 டெசி­பல்) உள்­ளது.

பாகிஸ்­த­ானின் இஸ்­லா­மா­பாத் நக­ரத்­தில் இரைச்­ச­லின் அளவு 105 டெசி­பல் என்று அந்த அறிக்கை குறிப்­பி­டு­கிறது.

இந்­தி­யா­வைச் சேர்ந்த புது­டெல்லி, கோல்­கத்தா, அசன்­சால், ஜெய்­ப்பூர் ஆகிய இதர நான்கு நகர்­களும் பட்­டி­ய­லில் இரைச்­சல்­மிக்க நகர்­க­ளாக உள்ளன.

உல­கி­லேயே ஆக அதிக இரைச்­சல்­மிக்க 15 நகர்­களில் மூன்று நகர்­கள் அதா­வது மொரோ தா­பாத், கோல்­கத்தா, அசன்­சால் ஆகி­யவை இந்­தி­யா­வில் உள்­ளன.

இந்த 15 நகர்­கள் பட்­டி­ய­லில் 10வது நகராக அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் (95 டெசி­பல்) இடம் பெற்று இருக்­கிறது.

உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளின்­படி இரைச்­ச­லைப் பொறுத்­த­வரை 55 டெசி­பல் என்­பது வெளிப்­புற குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் அனு­ம­திக்­கத்­தக்க அள­வா­கும்.

வர்த்­தக வட்­டா­ரங்­கள், போக்கு­வ­ரத்து வட்­டா­ரங்­களில் இந்த அளவு 70 டெசி­பல் வரை இருக்­க­லாம். இந்த அள­வுக்கு மேலாக இரைச்­சல் உள்ள இடங்­களில் தொடர்ந்து அதிக காலத்­திற்கு ஒரு­வர் இருந்து வந்­தால் அவ­ருக்குக் காது கேளாத பிரச்சினை ஏற்­படும் வாய்ப்பு அதிகம் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது.