இந்தியாவில் கொவிட்-19 காரணமாக ஈராண்டு காலம் முடங்கி இருந்த அனைத்துலக விமானச் சேவை நேற்று மீண்டும் தொடங்கின. உலக சேவைகளைத் தொடங்க ஏதுவாக விமான நிறுவனங்களும் விமான நிலையங்களும் ஆயத்தமாயின.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய சுற்றுலாத் துறை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கநிலைக்குத் திரும்பி வருகிறது.
இந்தக் கோடையில் 40 நாடுகளைச் சேர்ந்த 60 விமான நிறுவனங்கள் இந்தியாவிற்கும் இந்தியாவில் இருந்தும் 1,783 சேவைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்கு னர் அலுவலகம் தெரிவித்தது.
அந்தச் சேவைகளை அந்நிறு வனங்கள் மார்ச் 27 முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை வழங்கும். இந்தியாவைச் சேர்ந்த ஆறு விமான நிறுவனங்கள் வாரம் ஒன்றுக்கு மொத்தம் 1,466 அனைத்துலக சேவைகளை நடத்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

