விதி தளர்ந்தும் விலகாத முகக்கவசம்

விதி தளர்ந்தும் விலகாத முகக்கவசம்

2 mins read
46c31d38-4a54-44dd-8d33-ab4d86e13448
முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்றபோதும் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் நேற்று பலரும் முகக்கவசத்துடன் நடமாடியதைக் காண முடிந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கி. ஜனார்த்­த­னன்

ஆ. விஷ்ணு வர்தினி

கொவிட்-19 அபா­யம் இன்­னும் அக­ல­வில்லை, அத­னால் முன்­னெச்­ச­ரிக்­கை­யைத் தொடர்­வதே நல்­லது என்­பதை வெளிப்­பு­றங்­களில் நட­மா­டியோரின் முகக்­க­வ­சத்தால் மூடப்பட்ட முகங்­கள் காட்­டின.

நேற்று முதல் வெளிப்­பு­றங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மல்ல என்று இம்­மா­தம் 24ஆம் தேதி நாட்டு மக்­க­ளி­டம் நேரடி உரை­யாற்­றி­ய­போது பிர­த­மர் லீ சியன் லூங் அறி­வித்­தார்.

இருப்­பி­னும், சுற்­றி­யி­ருப்­போ­ரின் நல­னுக்­காக முகக்­க­வ­சம் அணி­வது நல்­லது என்று லிட்­டில் இந்­தி­யா­விற்கு வந்­தி­ருந்த பல­ரும் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­த­னர்.

"எனக்கு ஒரு வய­தில் மக­னும் வய­தான பெற்­றோ­ரும் உள்­ள­னர். அவர்­களை கொரோனா தொற்­றும் அபா­யம் அதி­கம். அத­னால் அவர்­க­ளின் பாது­காப்பு கருதி, வெளியே செல்­லும்போது தொடர்ந்து முகக்­க­வ­சம் அணி­வேன்," என்­றார் தாதி­யா­கப் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி சிந்து சுசீலா, 31.

கூட்டம் மிகுதியாக இருக்கும் தேக்கா போன்ற இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது என்றார் வணிகரான சுசீலா கேசவன், 45.

கடந்த ஈராண்டுகளாக முகக்கவசம் அணிந்து வருவதால் சிலருக்கு அது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

"இப்பழக்கத்தைச் சட்டெனக் கை விடுவது கடினம். ஓரிரு வாரங்களுக்குப் பின் நிலைமை சீரானால் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லத் தயங்க மாட்டேன்," என்றார் திரு தீபக் ஜேசன், 39.

தமிழ் முரசு லிட்­டில் இந்­தி­யா­வில் நேற்று கண்­ட­வர்­களில் ஒரு சிலரே முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை. அவர்­களில் இயந்­தி­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ள­ரான கவு­சர் ஷேக்­கும் ஒரு­வர்.

"முகக்­க­வ­சம் அணிந்­தால் மூச்சு முட்­டு­கிறது. சிங்­கப்­பூ­ரில் பலரும் தடுப்­பூசி போட்­டு­விட்­ட­னர். அத­னால் நம்­பிக்­கை­யோடு முகக்­க­வ­சத்தை அகற்­ற­லாம்," என்­றார் 25 வய­தான ஷேக்.

உண­வ­கங்­களில் நேற்று முதல் ஒரே குழு­வாக பத்­துப் பேர் சேர்ந்து உண்­ணும் வகை­யில் விதி தளர்த்­தப்­பட்­டு இருப்­ப­தைப் பல­ரும் வர­வேற்­ற­னர்.

"வெகுநாள்களுக்குப்பின் இரண்டு குடும்பங்கள் ஒன்றாக உண்ணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயமாக உறவினர்களுடன் சேர்ந்து வருவோம்," என்றனர் பனானா லீஃப் அப்போலோ உணவகத்தில் நேற்று நண்பகல் உணவருந்திய ராமச்சந்திரன் மாதவன் - கோவிந்தராஜு சியாமளா இணையர்.