இலங்கையில் மருந்துப் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சைகள் நிறுத்திவைப்பு; இந்தியா உதவிக்கரம்

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சைகள் நிறுத்திவைப்பு; இந்தியா உதவிக்கரம்

2 mins read

மருந்­துப்­பொ­ருள்­கள் மற்­றும் மருத்­து­வச் சாத­னங்­கள் பற்­றாக்­கு­றை­யால் முன்­னர் திட்­ட­மிட்­டி­ருந்த அனைத்து அறுவை சிகிச்­சை­க­ளை­யும் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைப்­ப­தாக இலங்­கை­யின் பேரா­தனை போதனை மருத்­து­வ­மனை நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது.

அவ­ச­ர­கால மற்­றும் உயிர்­காப்ப அறுவை சிகிச்­சை­க­ளுக்­குத் தேவை­யான மருத்­து­வச் சாத­னங்­க­ளை­யும் மருந்­துப் பொருள்­க­ளை­யும் சேமிக்க வேண்டி, இம்­மு­டிவு எடுக்­கப்­பட்­ட­தாக பேரா­தனை மருத்­து­வ­ம­னை­யின் இயக்­கு­நர் டாக்­டர் எச்.எம்.அர்­ஜுன தில­க­ரத்ன தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இரு­நாள் அதி­கா­ர­பூர்வ பய­ண­மாக இலங்கை சென்­றி­ருந்த இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­க­ரின் காது­களுக்கு இத்­த­க­வல் எட்­டி­யது.

அதன்­பின், "மருந்து மற்­றும் மருத்­து­வச் சாத­னங்­கள் பற்­றாக்­குறை கார­ண­மாக அறுவை சிகிச்­சை­கள் நிறுத்தி வைக்­கப்­பட்ட செய்­தி­ய­றிந்து வேத­னை­ய­டைந்­தேன். இவ்­வி­வ­கா­ரத்­தில் இலங்­கைக்கு எந்த வழி­யில் இந்­தியா உதவ முடி­யும் என்­பதை ஆரா­யும்­படி இந்­தி­யத் தூதர் கோபால் பாக்லே­யைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளேன்," என்று திரு ஜெய்­சங்­கர் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

இந்­நி­லை­யில், மருந்­துப்­பொ­ருள்­களும் மருத்­து­வச் சாத­னங்­களும் போதிய அள­வில் இருப்­பதை உறு­திப்­ப­டுத்த சுகா­தார அமைச்­சின் மருத்­துவ விநி­யோ­கப் பிரிவு தேவை­யான ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­விட்­ட­தால் அறுவை சிகிச்­சை­களை நிறுத்தி­வைக்­கும் அறி­விப்பை உட­ன­டி­யாக மீட்­டுக்­கொள்­வ­தாக டாக்­டர் தில­க­ரத்ன நேற்று தெரி­வித்­தார்.

இத­னை­ய­டுத்து, நேற்று முதல் பேரா­தனை மருத்­து­வ­ம­னை­யில் அறுவை சிகிச்­சை­கள் வழக்­கம்­போல் மீண்­டும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

சீனா­வி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்டு இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைப்பு

இதற்­கி­டையே, இந்­தி­யா­விற்­கும் இலங்­கைக்­கும் இடையே உள்ள சிறு­தீ­வு­களில் காற்­றா­லை­களை அமைக்­கும் ஒப்­பந்­தத்தை சீன நிறு­வ­னத்­தி­டம் இருந்து திரும்­பப் பெற்ற இலங்கை அரசு, அதனை இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைத்­தது.

இலங்­கை­யில் சீனா வலு­வா­கக் காலூன்ற முயன்று வரு­வ­தற்கு இந்­தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரி­வித்து வரு­கிறது.

முன்னதாக, இலங்­கைக்­கும் இந்­தி­யா­விற்­கும் இடை­யி­லுள்ள பாக் நீரி­ணைப் பகு­தி­யில் இருக்­கும் சிறிய தீவு­களில் காற்­றா­லை­களை அமைக்­க 2019ஆம் ஆண்டு ஒரு சீன நிறு­வனத்­துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

ஆனால், இந்­தி­யக் கடலோரத்தை ஒட்டி அதற்­கான பணி­க­ளைச் சீன நிறு­வ­னம் மேற்­கொண்­ட­தற்கு இந்­தியா எதிர்ப்பு தெரி­வித்­தது. அத­னால், காற்­றா­லை­களை அமைக்­கும் பணி தொடங்­கப்­ப­டவே இல்லை. பின்­னர் அந்­தத் திட்­டம் கைவி­டப்­பட்­டது.

இந்­நி­லை­யில், அமைச்­சர் ஜெய்­சங்­கர் இலங்கை சென்ற நிலை­யில், இரு நாடு­க­ளுக்கு இடையே ஆறு புரிந்­து­ணர்­வுக் குறிப்­பு­கள் கையெ­ழுத்­தா­கின. அவற்றில், நயி­னா­தீவு, அன­லை­தீவு, நெடுந்­தீவு ஆகிய தீவு­களில் மூன்று காற்­றா­லை­களை அமைக்கும் ஒப்பந்தமும் அடங்கும்.

இத்திட்டத்திற்கு இந்தியா நிதி ஆதரவு வழங்கும். சீனாவுடன் முன்னர் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, காற்றாலைகளை அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கி நிதியாதரவு வழங்கவிருந்தது.

கடந்த வாரம், காற்­றா­லை­களை அமைக்­கும் ஒப்­பந்­தம் தொடர்­பில் இலங்­கை­யின் நிலைப்­பாடு குறித்து அதி­ருப்தி தெரி­வித்த இலங்­கைக்­கான சீனத் தூதர், அது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரித்திருந்தார்.