மொழியோடு புத்தாக்கச் சிந்தனையையும் வளர்க்கும் தமிழ் மொழி விழா

மொழியோடு புத்தாக்கச் சிந்தனையையும் வளர்க்கும் தமிழ் மொழி விழா

2 mins read

புத்­தாக்­கத்­தைக் கருப்­பொ­ரு­ளாகக் கொண்ட இவ்­வாண்­டின் தமிழ் மொழி விழா, புதிய சிந்­தனை, தொழில்­நுட்­பம் வாயி­லாக அன்­றாட வாழ்­வில் தமிழ் மொழிப் புழக்­கத்தை ஊக்­குவிக்கிறது.

மாதங்கி இளங்­கோ­வன்

இன்று தொடங்­கும் தமிழ் மொழி விழா, மே 1 வரை நடை­பெ­றும். 44 அமைப்­பு­கள் 44 நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்­துள்­ளன.

மொழி, இலக்­கி­யம், கலை, கலா­சா­ரம் தொடர்­பான இந்­ நிகழ்ச்­சி­கள் பெரும்­பா­லும் ஸூம், இன்ஸ்­ட­கி­ராம், யூடி­யூப் போன்ற சமூக வலைத் தளங்­கள் வழி­யாக நடை­பெற உள்­ளன. அதி­கா­ர­பூர்வ திறப்பு விழா நாளை இரவு 9 மணி அள­வில் வசந்­தம் ஒளி­வ­ழி­யில் நடக்­க­ விருக்கிறது. மக்­கு­லம் கலைக்­கூ­டம், பெயர் பெற்ற கவி­ஞர் ­க­ளான பார­தி­யார், பார­தி­தா­சன், முத்­து­சு­வாமி தீட்­சித்­தர், ஊத்­துக்­காடு வெங்­கட சுப்­பை­யர், அரு­ணா­ச­லக் கவி­ரா­யர் ஆகி­ய­வர்­க­ளின் கவி­தைகளை­யும் குத்­தாட்­டத்­தை­யும் இணைத்து கலை நிகழ்ச்சி படைக்­கிறது.

சிங்­கைத் தமிழ்ச் சங்­கம், ஃபேஸ்­புக் தளத்­தில் 'ஒரு காமிக் கதை சொல்­லட்டா' என்­னும் கேலிச்­சித்­தி­ரம் தயா­ரிக்­கும் போட்டி ஒன்றை 12 முதல் 21 வயது வரை­யி­லா­ன­வர்­க­ளுக்கு ஏற்­பாடு செய்துள்ளது.

இறு­திச்சுற்­றுக்­குத் தேர்வு பெறும் மூன்று போட்­டி­யா­ளர்­கள் கேலிச்­சித்­தி­ரக் காணொளி தயா­ரிப்­பர். இவ்­வாண்டு மாறு­பட்ட சிந்­த­னை­யைத் தூண்­டும் பல நிகழ்ச்­சி­கள்­ மா­தம் முழு­வ­தும் இடம்­பெறு­கின்­றன.

இளை­யர்­க­ளின் தமிழ் மொழித் திறனை மெரு­கூட்­டும் வகை­யில் பல்­வேறு நிகழ்ச்­சி­களும் போட்டிகளும் அமைந்­தி­ருப்­ப­தோடு அவை இளை­யர்­ களாலே ஏற்­பாடு செய்­யப்பட்­டுள்­ள­தும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்­சி­கள் குறித்த மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு காண்க: இன்ஸ்­ட­கி­ராம்- @TamilLang Festival, facebook.com/Tamil LanguageCouncilSingapore, வளர்தமிழ் இயக்கத்தின் இணையப் பக்கம் www.tamil.org.sg ஆகியவற்றை நாடலாம்.