இலங்கையில் மின்சாரத்தை சேமிப்பதற்காக தெரு விளக்குள் அணைக்கப்படுகின்றன.
கடும் பொருளியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தைகள் இருளில் மூழ்கியதால் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதையடுத்து பங்கு வர்த்தகம் உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டது.
சுமார் 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எரிபொருள் இறக்குமதி செய்ய போதுமான பணமில்லை. இதனால் நேற்றுக் காலை வரை 13 மணி நேரமாக இலங்கை இருளில் தத்தளித்தது.
செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தி அமைச்சர் பவித்ர வன்னியராச்சி, "நாடு முழுவதும் தெரு விளக்குகளை நிறுத்த அதிகாரி களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது," என்றார்.
மின்சாரத்தை ஓரளவாவது சேமிக்கும் முயற்சியாக இலங்கை அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த நிலையில் 500 மில்லியன் டாலர் (S$676 மில்லியன் ) மதிப்புள்ள டீசலை அண்டை நாடான இந்தியாவிடமிருந்து இலங்கை கடன் வாங்கி உள்ளது.
இந்தக் கப்பல் சனிக்கிழமை அன்று இலங்கை வந்து சேரும் என தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் வன்னியராச்சி தெரிவித்தார்.
"டீசல் கப்பல் வந்ததும் சிறிது சுமை குறையும். ஆனால் மே மாதம் வரை மின்வெட்டு தொடரும்," என்று அவர் தெரி வித்தார்.
"தற்போது எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஹைட்ரோ மின்சாரத் திட்டங்களுக்கான தண்ணீரும் நீர்த்தேக்கங்களில் அடிமட்டத்ைத் தொட்டுவிட்டன," என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே பேருந்து மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு டீசல் முக்கிய எரிபொருளாக இருப்ப தால் வியாழன் அன்று நாடு முழு வதும் டீசல் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது.

