பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதால் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் விவாதம் தொடங்காமலேயே ஏப்ரல் 3ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இம்ரான் கான் கடைசி பந்து இருக்கும் வரை ஆடுவார் என்று பாகிஸ்தானிய அமைச்சர் ஒருவர் குறிப் பிட்டுள்ளார். திரு இம்ரான் கான் தலைமையிலான கூட்டணியிலிருந்து முக்கிய கட்சி ஒன்று விலகி எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இம்ரான் ஆட்சி கவிழ்ந்தால் பாகிஸ்தான் முஸ்லிம் லீகின் (பிஎம்எல்-என்) தலைவர் ஷாபாஸ் ஷரீப் பிரதமராகலாம் எனக் கூறப்படு கிறது.
பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி ஆட்டம்
1 mins read

