சிங்கப்பூர் எல்லைகள் இன்று திறப்பு; உற்சாகத்தில் பயணிகள்

3 mins read
411fef6c-1553-4898-905d-f1fa3f25f9d7
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு முன்பு நேற்று இரவு மலேசியா செல்வதற்காகக் காத்திருந்த பயணிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தொற்று கார­ண­மாக மூடப்­பட்­டி­ருந்த சிங்­கப்­பூர் எல்­லை­கள் இன்று முதல் அனைத்து லகப் பய­ணி­க­ளுக்­குத் திறக்­கப்படு­கின்றன. ஏறக்­கு­றைய இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு எல்­லை­கள் திறக்­கப்­படுவதால் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வெளி­நாடு செல்­வோ­ரும் சிங்­கப்­பூ­ருக்கு வரு­வ­தற்­கா­கக் காத்­தி­ருப்­போ­ரும் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர்.

இம்­மா­தம் 24ஆம் தேதி மக் ­க­ளி­டம் நேர­டி­யாக உரை­யாற்­றிய பிர­த­மர் லீ சின் லூங், கொவிட்-19 சூழ்­நிலை கட்­டுக்­குள் இருப்­ப­தால் எல்­லை தாண்­டிய பய­ணக் கட்­டுப் பாடு­கள் தளர்த்­தப்­படும் என்று அறி­வித்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து தளர்­வு­க­ளு­டன் எல்­லை­கள் திறக்­கப்­படும் அறி­விப்பு வெளி­யா­னது.

இதன் தொடர்­பில் பேசிய போக்கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், பய­ணங்­கள் மிக­வும் வச­தி­யாக இருக்க நடைமுறை­கள் மாற்றி­ய­மைக்­கப்­படுகின்­றன என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

அதன்­படி இன்று முதல் எந்த நாட்­ட­வ­ரும் எந்த வட்­டா­ரத்­தைச் சேர்ந்­த­வரும் முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டி­ருந்­தால் சிங்­கப்­பூ­ருக்குள் நுழைய அனு­ம­திக்­கப்­ப­டு­வர்­கள். இவர்­கள் தனி­மை­ப் படுத்திக் கொள்ளவோ சிங்­கப்­பூ­ருக்கு வந்த பிறகு கொவிட்-19 சோத­னை செய்ய வேண்­டி­ய தேவையோ இருக்­காது.

சிங்­கப்­பூருக்குள் நுழை­வ­தற்கு முன் அனு­ம­தி­யும் ரத்து செய்­யப்­ப­டு­கிறது. தடுப்­பூசி போட்­டுக் கொண்­டோ­ருக்­கான சிறப்பு விடி­எல் பாதை­களும் அகற்­றப்­ப­டு­கின்­றன. ஆனால் விமா­னம் அல்­லது கடல் வழி­யாக வரும் பய­ணி­கள் சிங்­கப்­பூர் வரு­வ­தற்கு இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு தொற்று இல்லை என்­ப­தை உறுதிப்படுத்தும் கொவிட்-19 சோத­னையை செய்­தி­ருக்க வேண்­டும்.

உல­கின் சில பகு­தி­களில் கிருமித்தொற்று அதி­க­மாக இருப்­பதே இதற்கு கார­ணம் என்று சுகா­தார அமைச்­சரை சுட்­டிக்­காட்டி திரு ஈஸ்­வ­ரன் கூறி­யி­ருந்­தார்.

புதிய விதி­மு­றை­கள் இந்­தி­யா­வுக்­குப் பொருந்­தும்.

மலே­சி­யா­வும் இன்று முதல் தனது எல்­லை­களை முழு­மை­யாக திறக்­கிறது. மலே­சிய சுகா­தார அமைச்­ச­ரான கைரி ஜமா­லு­தீன், சிங்­கப்­பூர் பயணிகளை ஆவ­லு­டன் வர­வேற்­ப­தாக கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து விமா­னம், தரை வழி­யாக ஜோகூர் கடற்­பா­லம் அல்­லது 2வது பாலம் வழி­யாக வரும் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்கொண்ட பய­ணி­க­ளுக்கு வரு­கை­யின்­போது கொவிட்-19 சோதனை, தனிமை உத்­த­ரவு இருக்­காது என்று அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர், மலே­சிய குடி­மக்­க­ளுக்கு பய­ணக் காப்­பு­றுதி தேவை­யில்லை. இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான ஏற்­பா­டு­க­ளின்கீழ் இது இடம்­பெ­று­கிறது.

சிங்­கப்­பூ­ருக்­கான சில விதி முறை­கள் மற்ற நாடு­க­ளை­விட வேறு­ப­டு­வ­தால் கவ­னித்து பாது­காப்­பாக, முகக்­க­வ­சம் அணிந்து பய­ணம் செய்­யுங்­கள் என்று கூறிய திரு கைரி ஜமா­லு­தீன், வாங்க, ஒன்­றா­கச் சாப்­பி­டு­வோம் என்று அழைப்பு விடுத்­தார்.

இதற்கிடையே ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி, சிங்கப்பூரு டனான இரண்டு தரைவழி எல்லைகள் வழியாக முதல் வாரத்தில் 400,000 பேர் பயணம் செய்வார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

ஜோகூர் பாரு­வைச் சேர்ந்த உற்­பத்தி துறை ஊழி­ய­ரான ஆர் புஷ்பா தேவி, 57, புதிய மாற்­றம் குறித்து பெரு­ம­கிழ்ச்சி அடை­வ­தா­கத் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

இது­வரை விடி­எல்­லில் ஒரு­முறை மட்­டும் சொந்த வீட்­டுக்­குத் திரும்­பி­யி­ருப்பதா­கக் கூறிய அவர், விரை­வில் மலே­சி­யா­வுக்­குச் செல்­லத் திட்­ட­மி­டு­தா­கக் கூறி­னார். அதே போல குளு­வாங்­கைச் சேர்ந்த சிஸ் கோ அதி­காரி கார்த்­திக் மனோ­க­ரன், 32, இந்த மாற்­றத்­திற்­காக தாம் நீண்ட நாள் காத்­தி­ருந்­த­தா­கக் கூறி­னார்.

சுற்­றுலா செல்­வ­தைப் பொழு­து­போக்­கா­கக் கொண்­டுள்ள ரேணுகா நட­ரா­சன், 33, "மலே­சிய உணவு ருசித்து வெகு­நாட்­கள் ஆகிவிட்­ட­தால் விரை­வில் அங்கு செல்ல திட்­ட­மி­டு­கி­றேன்," என்­றார்.

இதற்கு முன்பு சிங்­கப்­பூ­ரின் எல்­லை­கள் குறிப்­பிட்ட நாடு­க­ளுக்கு­கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளின் கீழ் திறக்­கப்­பட்­டி­ருந்­தன.

கூடு­தல் செய்தி:

கி.ஜனார்த்­த­னன்.