இலங்கை: ஊரடங்கு மீறல், ஆர்ப்பாட்டம், பலர் கைது

இலங்கை: ஊரடங்கு மீறல், ஆர்ப்பாட்டம், பலர் கைது

2 mins read

இலங்­கை­யில் விலை­வாசி கட்டுக்­கடங்­கா­மல் போய்­விட்­டது. அந்­நிய செலா­வணி நெருக்­கடி ஏற்­பட்­டு­விட்­டது. இதற்கு அந்த நாட்­டின் அதி­பர்­தான் கார­ணம். ஆகை­யால் அவர் பதவி விலக வேண்­டும் என்று மக்­கள் ஆர்ப்­பாட்­டம் நடத்தி வரும் நிலை­யில், இலங்கை அரசு சமூக ஊட­கங்­க­ளுக்குத் தடை விதித்­து­விட்­டது.

கடந்த சனிக்­கி­ழமை மாலை முதல் இன்று திங்­கட்­கி­ழமை காலை வரை ஊர­டங்­கும் போடப்­பட்டு இருக்­கிறது. ஆனால் தடையை­யும் மீறி நேற்று எதிர்த்­தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல­ரும் தலை­ந­கர் கொழும்பில் இருக்­கும் சுதந்­திரச் சதுக்­கத்தை நோக்கி ஊர்­வ­ல­மா­கச் சென்­ற­னர்.

அவர்­களை ஆயு­தப்­ப­டை­யி­னர் தடுத்து நிறுத்­தி­னர். கண்டி நகரில் மாணவர்கள் ஊரடங்கை மீறி நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் காவல் துறை கண்ணீர்ப்புகையை அடித்து கலைத்ததாக தகவல்கள் கூறின.

தற்­காப்பு அமைச்­சின் கோரிக் ­கையின் பேரில் சமூக ஊடகத் தளங்­க­ளுக்குத் தற்­காலி­க­மாக தடை­வி­திக்­கும்­படி அத்­த­கைய சேவை­களை வழங்­கு­வோர் கேட்டுக்­கொள்­ளப்­பட்­ட­தாக 'அடர்­டெ­ரானா' என்ற தனி­யார் இணையத்தளம் தெரி­வித்­தது.

பொரு­ளி­யல் நெருக்­க­டிக்கு எதி­ராக அமை­தி­யான முறை­யில் ஆர்ப்­பாட்­டம் நடத்த கொழும்பில் கூடும்­படி சமூக ஊட­கத்­தைப் பயன்­ப­டுத்தி மக்­களுக்கு இளை­ஞர்­கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலை­யில், சமூக ஊட­கங்­கள் முடக்­கப்­பட்டன. பிற்பகலில் அவை பயன்பாட்டுக்கு வந்ததாக அரசு அறிவித்தது.

குடி­மக்­கள் ஆர்ப்­பாட்­டத்தை அடுத்து வெள்­ளிக்­கி­ழமை பின்­னேரத்­தில் அர­சாங்­கம் அவ­ச­ர­நிலையை அறி­வித்­தது.

அந்த அவ­ச­ர­நிலைப் பிர­க­ட­னம் அதி­பர் ராஜ­பக்­சே­வுக்கு அதிக அதி­கா­ரங்­களை வழங்­கு­ம்.

சட்­டங்­களைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­க­வும், மக்­களைத் தடுத்து வைக்­க­வும், சொத்­து­களை முடக்­க­வும் அப்பிர­க­ட­னம் அதி­பருக்கு அதி­கா­ரம் வழங்­கு­கிறது.

இலங்கையில் கடுமையான பொருளியல் நெருக்கடி நிலவுகிறது. உணவு, எரிபொருளுக்குப் பெரும் பஞ்சம் நிலவுகிறது. விலைவாசி 19 விழுக்காடு அதிகரித்துவிட்டது.

அதிபர் ராஜபக்சேவும் அர சாங்கத்தில் பதவி வகிக்கும் அவருடைய குடும்பத்தாரும் விலக வேண்டும் என்று வீதிகளில் இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கிவிட்டனர்.

இவ்வேளையில், நாட்டின் தலைநகர் பகுதியில் ஊரடங்கை மீறியதற்காக சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணி வரை 664 பேரைக் கைதுசெய்து உள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்க அண்மைய வாரங்களில் அந்த நாட்டின் நாணய மதிப்பு குறைக்கப்பட்டது. வட்டி விகிதம் ஏறியது. அவசியமற்ற இறக்குமதி களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பங்குச் சந்தை வியாபாரம் ஏறக்குறைய நின்றுபோய் இருக்கிறது.