தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை அமைச்சரவை விலகல்; புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

1 mins read

கடும் பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர்த்து மற்ற 26 அமைச்சர்களும் பதவி விலகினர்.

எரி­பொ­ருள், உண­வுப்­பொ­ருள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் கடும் விலை­யேற்­றத்­தைச் சந்­தித்­தன. இத­னால், பெரும் துன்­பத்­திற்­குள்­ளான மக்­கள் அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இதையடுத்து, இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அத்துடன், நேற்றுக் காலை 6 மணிவரை 36 மணி நேரத்திற்கு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, நாட்டின் நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்தனர்.

அதனை ஏற்­றுக்­கொண்ட அதிபர் கோத்­த­பாய ராஜபக்சே, அனைத்­துக் கட்சி அமைச்­ச­ர­வையை அமைக்க அழைப்பு விடுத்­தார். நாட்­டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளி­யல் நெருக்­கடி­யைத் தீர்க்க அனைத்­துக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் உதவ வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

இத­னைத் தொடர்ந்து, புதி­தாக நான்கு அமைச்­சர்­களை அவர் நியமித்தார்.

முன்பு தம் சகோ­த­ரர் பசில் ராஜ­பக்சே வச­மி­ருந்த நிதி­ய­மைச்­சர் பொறுப்பை அலி சப்­ரி­யி­டம் அதிபர் ஒப்­ப­டைத்­தார். வெளி­யு­றவு அமைச்­ச­ராக ஜி.எல்.பெய்­ரிஸ், கல்வி அமைச்­ச­ராக தினேஷ் குண­வர்­தன, நெடுஞ்­சா­லைத்­துறை அமைச்­ச­ராக ஜான்ஸ்­டன் ஃபெர்னாண்டோ ஆகி­யோர் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.

ஆனால், அதி­ப­ராக கோத்­த­பா­ய ராஜபக்சேயும் பிர­த­ம­ராக மகிந்­த ராஜபக்சேயும் நீடிக்­கும் நிலை­யில், புதிய அமைச்­ச­ரவை நிய­ம­னம் அர்த்­த­மற்ற நட­வ­டிக்கை என்­றும் இத­னால் மாற்­றமேதும் விளையப்போவ­தில்லை என்­றும் இலங்கை மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.