தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆயுதம், ஆயுதம், ஆயுதங்கள்தான் தேவை; நேட்டோவை விடாமல் நெருக்கும் உக்ரேன்

2 mins read
eaf5e738-9966-441c-b874-34bd36adb154
உக்ரேன் தலை நகருக்கு வடமேற்கே இருக்கும் பரோடி யான்கா என்ற நகரில் ரஷ்ய தாக்கு தலுக்கு இலக்கான வீடுகளும் உடைமை களும். படம்: ஏஎஃப்பி -

உக்­ரே­னின் நான்கு நகர்­களில் செயல்­பட்டு வந்த நான்கு எரி­பொருள் கிடங்­கு­களை ஏவுகணை­ க­ளைப் பாய்ச்சி அழித்­து­விட்­ட­தாக ரஷ்ய தற்­காப்பு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அந்­தக் கிடங்­கு­கள் உக்­ரே­னிய படை­யி­ன­ருக்குப் பொருள்­களை வழங்­கு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அமைச்சு கூறி­யது.

அதே­வே­ளை­யில், தங்­க­ளுக்கு ஆயு­தங்­கள்­தான் தேவை என்று நேட்டோ நாடு­க­ளுக்கு உக்­ரே­னிய வெளி­யு­றவு அமைச்­சர் டிமிட்ரி குலேபா திரும்­பத் திரும்ப வேண்டு­கோள் விடுத்­தார்.

"நேட்டோ நாடு­க­ளி­டம் நாங்­கள் மூன்றே மூன்­று­தான் கேட்­கி­றோம். ஆயு­தங்­கள், ஆயு­தங்­கள், ஆயு­தங்­கள்­தான் வேண்­டும்," என்று பிரசல்ஸ் நகரில் நேட்டோ வெளி­யு­றவு அமைச்­சர்­க­ளு­டன் கூடிய கூட்­டத்­திற்கு முன்­ன­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் திரு குலேபா கூறி­னார். தயக்­க­மின்றி உக்­ரே­னுக்கு ஆயு­தங்­களை நேட்டோ வழங்க வேண்­டும் என்றாரவர்.

இந்­நி­லை­யில், உக்­ரே­னில் ரஷ்யா மேற்­கொண்டு வரும் தாக்கு ­த­லுக்கு 5,000க்கும் மேற்­பட்ட குடி­மக்­கள் கொல்­லப்­பட்டுவிட்­டார்­கள் என்­றும் அவர்­களில் 210 பேர் சிறார்­கள் என்­றும் ரஷ்ய முற்­று­கைக்கு உட்­பட்டு இருக்­கும் உக்­ரே­னின் மரி­ய­போல் நக­ரின் மேயர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, ஐநா மனித உரிமை மன்­றத்­தில் இருந்து ரஷ்யாவை விலக்­கி­வைக்­கு­மாறு கோரும் தீர்­மா­னத்­தின் மீது ஐநா பொதுப் பேரவை நேற்று வாக்­க­ளிக்க இருந்­தது.

அந்த மன்­றத்­தில் இருந்து ரஷ்­யாவை விலக்கிவைக்க வேண்டும் என்று அமெ­ரிக்கா முழு­மூச்­சாக முயன்று வரு­கிறது.

அந்த மன்­றத்­தில் 47 நாடு­கள் உள்­ளன. மூன்­றில் ஒரு பங்கு பெரும்­பான்மை கிடைத்­தால் ஒரு நாட்டை நீக்­கி­வி­ட­லாம்.

உக்­ரே­னில் ரஷ்யா மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்டு வரு­வ­தா­கக் கூறி அந்த நாட்­டுக்­கும் ரஷ்ய நிறு­வ­னங்­களுக்­கும் தனிப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் எதி­ரான தடை­களை அமெ­ரிக்கா மேலும் தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது.

இவ்­வே­ளை­யில், உக்­ரே­னில் தொடர்ந்து தாக்­கு­தலை நடத்த சிரியா நாட்­டி­ன­ரை­யும் கூலிப்­ப­டை­யி­ன­ரை­யும் ரஷ்யா உக்­ரே­னுக்­குள் அனுப்­பு­வ­தாக மேற்­கத்­திய அதி­கா­ரி­கள் கூறு­கி­றார்­கள்.

உக்­ரேன் போர் நீண்ட காலம் நீடிக்­கும் வாய்ப்பு இருந்­தா­லும் கடை­சி­யில் அதில் ரஷ்யா தோற்­கும் என்­றும் உக்­ரேன் வெற்றி பெறும் என்­றும் தான் கணிப்­ப­தாக அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.