தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனடாவில் இந்திய நாட்டு மாணவர் சுட்டுக்கொலை

2 mins read
3481b2dc-0227-4d5b-9507-a5d2caaf8e49
கார்த்திக் வாசுதேவ் கடந்த ஜனவரியில்தான் கனடா சென்றார். படம்: கவுரவாவாசுதேவ் டுவிட்டர் -

கன­டா­வில் 21 வயது இந்­திய மாண­வர் ஒரு­வர் சுட்­டுக் கொல்­லப்­பட்ட சம்­ப­வம் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறது.

டொரோண்டோ நகர சுரங்க ரயில் நிலை­யத்­தின் நுழை­வா­யிலில் அவரை மர்ம நபர்­கள் சுட்­ட­தாக அந்­ந­கர காவல்­துறை தெரி­வித்­தது.

உத்­த­ரப்­ பி­ர­தே­சத்­தில் காஸி­யா­பாத்­தைச் சேர்ந்த கார்த்­திக் வாசு­தேவ் என அவர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளார்.

சென்ற வியா­ழக்­கி­ழமை மாலை செயின்ட ஜேம்ஸ் டவு­னில் கிளென் ரோட்­டில் உள்ள ரயில் நிலை­யத் திற்கு அவர் சென்று கொண்­டி­ருந் தார். அப்­போது அவரை சிலர் சுட்ட தாகத் தெரி­கிறது.

"உட­ன­டி­யாக முத­லு­த­வி­ வழங்­கப்­பட்­டது. பின்­னர் மருத்­துவ மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அவர் அங்கு உயி­ரி­ழந்­தார்," என்று டொேராண்டோ காவல்­து­றை­யின் அறிக்கை தெரி­வித்­தது.

அப்­பாவி மாண­வர் கார்த்­திக் வாசு­தேவ் துப்­பாக்­கிச் சூட்­டில் உயி­ரி­ழந்­தது அதிர்ச்­சி­ய­ளிக்­கிறது என்று அங்­குள்ள இந்­திய தூத­ர­கம் டுவிட்­ட­ரில் வெளி­யிட்ட அறி­விப்­பில் தெரி­வித்­தது.

"மாண­வ­ரின் குடும்­பத்­து­டன் தொடர்பு கொண்­டுள்­ளோம். உடலை இந்­தி­யா­வுக்கு எடுத்­துச் செல்ல ஆன அைனத்து உத­வி­களும் செய்­யப்­படும்," என்று அது கூறி­யது.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் கார்த்­திக் வாசு­தேவ் டோரோண்­டா­வுக்­குச் சென்­றார். செனகா கல்­லூ­ரி­யில் நிர்­வா­க­வி­யல் துறை­யில் படித்து வந்த அவர் பகுதி நேர­மாக உண­வவம் ஒன்றில் பணி­யாற்­றி­வந்­தார்.

கன­டா­வுக்­குப் போவது கார்த்­திக்­கின் கன­வாக இருந்­தது என்று என்­டி­டி­விக்கு அளித்த பேட்­டி­யில் அவ­ரது தந்தை ஜிதேஷ் வாசு­தேவ் தெரி­வித்­துள்­ளார்.

"கவ­லைப்­ப­டா­தீங்க, கனடா மிக­வும் பாது­காப்­பா­னது என்று என்­னி­டம் அடிக்­கடி சொல்­வான்." என்­றார் அவர்.

"என் மகனை இன்று இழந்­து­விட்­டேன். எனக்கு நீதி வேண்­டும். என் மகன் அங்கு சென்று இரண்டு மாதங்­களே ஆகிறது.

"அவன் ஒழுங்­கா­கப் படித்­துக் கொண்­டி­ருந்­தான். எனது மக­னுக்கு என்ன நேர்ந்­தது என்­பது தெரிய வேண்­டும். சுட்­ட­வர்­க­ளின் நோக்­கம் என்ன," என்று துய­ரத்­து­டன் ஜிதேஷ் புலம்­பி­னார்.

இதற்­கி­டையே இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர், மாண­வர் உயி­ரி­ழந்­த­தற்கு தமது இரங்­கலை வெளி­யிட்­டுள்­ளார்.

டுவிட்­டர் பதி­வில் மாண­வ­ரின் குடும்­பத்­துக்கு அவர் ஆழ்ந்த அனு­தா­பங்­களைத் தெரி­வித்­துக் கொண்­டார். இந்­திய மாண­வர் ஏன் சுடப்­பட்­டார் என்­ப­தற்­கான கார­ணம் உட­ன­டி­யா­கத் தெரி­ய­வில்லை. டொரோண்டோ காவல்­துறை, கண்­கா­ணிப்­புக் கேம­ராவை ஆராய்ந்து மர்ம நபர்­க­ளைத் தேடி வரு­கிறது.