பாகிஸ்தான்: இம்ரான் கான் பிரதமர் பதவி இழந்தார்

பாகிஸ்தான்: இம்ரான் கான் பிரதமர் பதவி இழந்தார்

2 mins read
6e5ccbd4-15cc-44d1-b8b2-373bbc80657a
பாகிஸ்­தா­னில் நம்­பிக்கை வாக்­கெடுப்­பில் தோற்று பதவி இழந்த முதல் பிர­தமர் இம்­ரான்­தான். 1947 முதல் பதவி வகித்துள்ள 29 பிரதமர்களில் இது வரை ஒருவர்கூட ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடித்ததில்லை. படம்: ஏஎஃப்பி -

பாகிஸ்­தான் பிர­த­ம­ராக பதவி வகித்த உல­கப் புகழ்­பெற்ற கிரிக்­கெட் வீர­ரான இம்­ரான் கானின் கடைசி அர­சி­யல் பந்து வீச்­சு­ம் எடு­ப­ட­வில்லை.

பிர­த­மர் இம்­ரான் கான் மீது நம்­பிக்கை இல்லை என்று சொல்லி எதிர்க்­கட்­சி­கள் தாக்­கல் செய்த தீர்­மா­னத்­தின் மீது நேற்று அதி காலையில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­ட­தில் அதி­க­மான உறுப்­பி­னர்கள் அதா­வது மொத்­தம் 342 பேரைக் கொண்ட மன்­றத்­தில் 174 பேர் நம்­பிக்கை இல்லை என்று வாக்கு அளித்­த­னர்.

அதை அடுத்து இம்­ரான் கான் பதவி இழந்­தார். உட­னேயே அவர் தன் அதி­கா­ர­பூர்வ இருப்­பி­டத்தைக் காலி செய்­து­விட்டு வெளி­யே­றி­விட்­டார். இருந்­தா­லும் அவ­ரு­டைய ஆத­ர­வா­ளர்­கள் அமை­தி­யான முறை­யில் ஆரப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டு­வ­ரு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

பாகிஸ்­தா­னில் 2018ல் நடந்த பொதுத்­தேர்­த­லில் எந்­தக் கட்சிக்கும் பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை.

இருந்­தா­லும் இம்­ரான் கான் தலை­மை­யி­லான பாகிஸ்­தான் தெரீக்-இ-இன்­சாப் கட்சி (பிடிஐ) தனிப்­பெ­ரும் கட்­சி­யாக உரு­வெடுத்­தது. இதை­ய­டுத்து பிற கட்­சி­களின் ஆத­ர­வு­டன் இம்­ரான் கான் பிர­த­ம­ரா­னார்.

ஊழலை ஒழிப்­பேன், பொரு­ளி­யலை சரி­செய்­வேன் என்று இம்­ரான் கான் உறுதி கூறி­ய­போ­தி­லும் ஆட்­சிக்கு வந்த சில ஆண்­டு­களி­லேயே பாகிஸ்­தா­னில் பண­வீக்­கம் வெளி­நாட்­டுக் கடன் சுமை அதி கரிப்பு கார­ண­மாக அவ­ருக்கு ஆதரவு குறை­யத் தொடங்­கி­ய­தாகத் தக­வல்­கள் வெளி­யா­யின.

பாகிஸ்­தா­னின் சக்­தி­வாய்ந்த உளவு அமைப்­பின் புதிய தலை­வர் நிய­ம­னத்­தில் கையெ­ழுத்­திட கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் இம்­ரான் கான் மறுத்­து­விட்­டார். என்­றா­லும்­கூட ராணுவ உய­ரதி­கா­ரி­களுக்கும் இம்­ரானுக்கும் இடையே எந்­த­வித முரண்­பாடு­களும் இல்லை எனத் தகவல்கள் வெளிவந்தன.

இந்தச் சூழ்­நி­லை­யில் இம்­ரான் அர­சுக்கு ஆத­ர­வ­ளித்து வந்த முத்­தா­ஹிதா குவாமி இயக்­கம்-பாகிஸ்­தான் (எம்க்­யூ­எம்-பி) கட்­சி­யின் இரண்டு அமைச்­சர்­கள் அண்­மை­யில் பதவி வில­கி­னர். 342 இடங்­களைக்கொண்ட மன்­றத்­தில் ஆளும் கூட்­ட­ணி­யின் பலம் 165 ஆகக் குறைந்­தது. எதிர்த்­த­ரப்­பினர் நம்­பிக்கை இல்லா தீர்­மா­னத்தைத் தாக்­கல் செய்­த­னர்.

இம்­ரான் கானை எதிர்க்­கும் கூட்­டணி­யில் முன்னாள் பிர­த­மர் நவாஸ் ஷெரிப்­பின் பிஎம்­எல்-என் கட்சி (84 உறுப்­பி­னர்­கள்), பிலா­வால் புட்டோ- சர்­தா­ரி­யின் பிபிபி கட்சி (56 இடங்­கள்) ஆகி­யவை முக்­கிய கட்­சி­கள். தீர்­மா­னத்­தின் மீதான வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­விருந்த நிலை­யில் இம்­ரான்­ கான் பரிந்­து­ரையை ஏற்று நாடாளு­மன்றத்தை அதி­பர் கலைத்­தார்.

இந்த உத்­த­ரவை எதிர்த்து பாகிஸ்­தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்­வந்து வழக்­குப்­ப­திவு செய்து நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்­தின் மீதான வாக்­கெ­டுப்பு 9ஆம் தேதி நடத்­தப்­பட வேண்­டும் என உத்­த­ர­விட்­டது. இந்­நி­லை­யில் இம்­ரான் கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற நாய­கர் ஆசாத் குவை­சர், துணை நாய­கர் காசிம் சூரி ஆகி­யோர் திடீ­ரென்று பதவி வில­கி­னர்.

என்­றா­லும் இடைக்­கால மன்ற நாய­கரை நிய­மித்து நம்­பிக்கை இல்லா வாக்­கெ­டுப்பை நடத்தி எதிர்க்­கட்­சி­கள் இம்­ரானை வீட்டுக்கு அனுப்­பி­விட்­டன.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்­தான் நாடா­ளு­மன்­றம் இன்று பிற்­ப­க­லில் கூடும் என்­றும் பாகிஸ்­தான் முஸ்­லிம் லீக் நவாஸ் கட்­சி­யின் தலை­வ­ரான ஷெபாஸ் ஷெரிப் விரை­வில் நாட்­டின் புதிய பிர­த­ம­ராக அறி­விக்­கப்­ப­ட­லாம் என்­றும் நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன.