புதிய பிரதமரைத் தேர்வு செய்யவுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றம்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) கூடி புதிய பிரதமரைத் தேர்வு செய்யவுள்ளது.

இந்நிலையில் முன்னைய அரசாங்கத்தை அமைத்த பாகிஸ்தான் தெஹரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக முடிவு செய்தனர்.

நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் முன்னைய பிரதமர் இம்ரான் கான் தோல்வி அடைந்ததை அடுத்து அவர் பதவியை விட்டு அகற்றப்பட்டார்.

அதைத் தொடர்ந்து பரந்துபட்ட எதிர்த்தரப்பு கூட்டணி ஒன்று பதவி ஏற்கவுள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவர் திரு ஷெபாஸ் ஷரிஃப்பை அக்கட்சியும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் சேர்ந்து பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளன.

அவர் முன்னைய பிரதமர் நவாஸ் ஷரிஃப்பின் சகோதரர் ஆவார்.

முன்னைய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூட் குரேஷியை திரு இம்ரான் கானின் கட்சி முன்மொழியப்பட்டுள்ளது.

ஆனால் திரு ஷெபாஸ் ஷரிஃப்தான் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவார் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

காலஞ்சென்ற முன்னைய பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவால் புட்டோ வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பு ஏற்பார் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!