தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கம்பிவட ஊர்திகள் மோதலில் மூவர் மரணம்; 20 மணி நேரமாக பலர் சிக்கித் தவிப்பு

1 mins read
00770b9e-cc9d-434f-8918-d9a198b802c1
கம்பிவட ஊர்தியிலிருந்து வெளியேறி, தொங்கியபடி இருக்கும் ஆடவர். படம்: டுவிட்டர்/சோனாலி குப்தா -

இந்­தி­யா­வின் ஜார்க்­கண்ட் மாநி­லத்­தில் நடுவானில் கம்­பி­வட ஊர்­தி­கள் (கேபிள் கார்) மோதிக்­கொண்ட விபத்­தில் குறைந்­தது மூவர் உயிர் இ­ழந்­த­னர்; பலர் காய­முற்றனர்.

தியோகர் மாவட்­டம், திரி­கூட மலைப்­ப­கு­தி­யில் பாபா வைத்­தி­ய­நாத் கோவி­லுக்கு அருகே நேற்று முன்­தி­னம் இவ்­வி­பத்து நிகழ்ந்­தது.

விபத்­தை­ய­டுத்து குறைந்­தது 12 ஊர்­தி­களில் 48 பேர் சிக்­கிக் கொண்­ட­னர். அவர்­களை மீட்­கும் பணி­யில் இந்­திய விமா­னப் படை­யின் இரண்டு ஹெலி­காப்­டர்­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன. தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யைச் சேர்ந்த ஒரு குழு­வி­ன­ரும் நிகழ்­வி­டத்­திற்கு அனுப்­பப்­பட்­ட­னர். உள்­ளூர்­வா­சி­களும் மீட்­புப் பணி­களுக்­கு உதவினர்.

நேற்று மாலை நில­வ­ரப்­படி, அவர்­களில் 27 பேர் மீட்­கப்­பட்­டு­விட்­ட­னர். மீட்பு நட­வ­டிக்­கை­யின்­போது ஒரு­வர் ஹெலி­காப்­ட­ரில் இருந்து விழுந்து மாண்டுபோனார்.

தொழில்­நுட்­பக் கோளாறு கார­ண­மா­கக் கம்­பி­வட ஊர்­தி­கள் மோதல் நிகழ்ந்­தி­ருக்­க­லாம் என்று அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

விபத்­தைத் தொடர்ந்து, கம்­பி­வட ஊர்தி சேவையை வழங்கி வந்த நிறு­வன மேலா­ள­ரும் அதன் ஊழி­யர்­களும் அங்­கி­ருந்து தப்­பி­ ஓ­டி­விட்­ட­னர்.

கம்­பி­வட ஊர்­தி­யில் 20 மணி நேரத்­திற்கு மேலாக சிக்­கிக்­கொண்­ட­பின் மீட்­கப்­பட்ட பீகா­ரைச் சேர்ந்த சைலேந்­திர குமார் யாதவ் கூறு­கை­யில், "உயிர் பிழைக்க மாட்­டேன் என்று பல­முறை நினைத்­தேன். இது மறு­பி­றப்­பு­போல் இருக்­கிறது," என்­றார்.

இரவு முழு­வ­தும் விழித்­தி­ருந்­த­தா­கக் கூறிய அவர், தண்­ணீர்­கூட கிடைக்­க­வில்லை என்­றார்.