செந்தோசா-பிரானி பெருந்திட்டம் மறுஆய்வு

செந்தோசா-பிரானி பெருந்திட்டம் மறுஆய்வு

3 mins read

சுற்றுப்பயணத் துறையில் கொவிட்-19 ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் புதிய வாய்ப்புகள் குறித்தும் ஆராய்கிறது

சிங்­கப்­பூ­ரில் பெரி­தும் விரும்­பப்­படும் சுற்றுலாத்தல­மான செந்­தோசா இவ்­வாண்டு தனது 50வது ஆண்­டு­நி­றை­வைக் கொண்­டா­டி­வரும் நிலை­யில், கொவிட்-19 பர­வல் கார­ண­மா­கத் தனது நீண்­ட­கா­லத் திட்­டங்­களை அது மறு­ஆய்வு செய்து வரு­கிறது.

கடந்த 2019ஆம் ஆண்­டில் செந்­தோசா-பிரானி பெருந்­திட்­டம் அறி­விக்­கப்­பட்­டது. அடுத்த 20, 30 ஆண்­டு­களில் அவ்­விரு தீவு­களை­யும் மிக­வும் விரும்­பப்­படும் சுற்­று­லாத் தலங்­க­ளாக மேம்­ப­டுத்த அத்­திட்­டம் வழி­காட்­டு­கிறது.

புதிய நடை­மு­றைப் போக்­கு­களைப் புரிந்­து­கொள்­ள­வும் கொவிட்-19 தொற்­றால் உரு­வாகி இருக்­க­வல்ல புதிய, நீடித்து நிலைக்­கத்­தக்க சுற்­றுப்­ப­யண வாய்ப்­பு­களை ஆய்­வு­செய்­ய­வும் சாத்­தி­யக்­கூறு ஆய்­வு­களை மேற்­கொண்டு வரு­வ­தாக செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கத்­தின் பேச்­சாளர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் சுற்­றுப்­ப­ய­ணத் துறையை விரைந்து மீட்­டெ­டுக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரும் நிலை­யில் இந்த மறு­ஆய்வு இடம்­பெ­று­கிறது. சுற்­றுப்­ப­ய­ணத் துறைக்கு ஆத­ர­வ­ளிக்க ஏறத்­தாழ $500 மில்­லி­யனை ஒதுக்கி இருப்­ப­தாக அர­சாங்­கம் கடந்த வாரம் அறி­வித்­திருந்தது.

சுற்­றுப்­ப­ய­ணத் துறை­யில் கொவிட்-19 பர­வல் ஏற்­ப­டுத்­திய தாக்­கம் குறித்து ஆராய்­வ­தற்­குக் கடந்த பிப்­ர­வரி 25ஆம் தேதி செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கம் ஒப்­பந்­தப்­புள்ளி கோரி­யி­ருந்­தது. இம்­மா­தம் 5ஆம் தேதி­யு­டன் அதற்­கான காலக்­கெடு முடிந்த நிலை­யில், அதற்கு ஏழு விண்­ணப்­பங்­கள் வந்­துள்­ளன.

செந்­தோசா-பிரானி பெருந்­திட்­டத்­தின்­கீழ் வரும் மேம்­பா­டு­கள் கட்­டம் கட்­ட­மாக மேற்­கொள்­ளப்­படும் என்று அந்­தப் பேச்­சா­ளர் தெரி­வித்­தார். முத­லில் அங்­குள்ள சில பகு­தி­க­ளுக்­குப் புத்­து­யி­ரூட்­டப்­படும் என்­றும் அவ்­விரு தீவு­களின் மற்ற பகு­தி­க­ளுக்­கான திட்­டங்­கள் மெரு­கூட்­டப்­படும் என்­றும் அவர் விளக்­கி­னார்.

கூடு­தல் விவ­ரங்­கள் பின்­னர் வெளி­யி­டப்­படும்.

இந்­தப் பெருந்­திட்­டத்­தின்­படி, இப்­போது துறை­முக முனை­ய­மாக இருக்­கும் புலாவ் பிரானி தீவும் அதனை ஒட்­டி­யுள்ள செந்­தோ­சா­வும் வாட்­டர்­ஃபி­ரன்ட், வைப்­ரன்ட் கிளஸ்­டர், ஐலண்ட் ஹார்ட், பீச்­ஃபி­ரன்ட், ரிட்ஜ்­லைன் என ஐந்து மண்­ட­லங்­க­ளா­கப் பிரிக்­கப்­படும்.

ரிட்ஜ்­லைன், பீச்­ஃபி­ரன்ட் மண்­ட­லங்­க­ளுக்­கான பணி­கள் முன்­கூட்­டியே தொடங்­கப்­ப­ட­லாம் எனத் தெரி­கிறது.

பீச்­ஃபி­ரன்ட் மற்­றும் இம்­பியா பகு­தி­க­ளுக்­கான கருத்­தி­யல் சார்ந்த திட்­ட­மி­டல் சேவை­களை வழங்க விரும்­பும் உள்­ளூர், அனைத்­து­லக நிறு­வ­னங்­கள் அதன் தொடர்­பில் இம்­மா­தம் 19ஆம் தேதிக்­குள் விண்­ணப்­பம் செய்­ய­லாம். அதன்­பின், அந்தச்­ சே­வை­க­ளுக்கு ஐந்து நிறு­வ­னங்­கள்­வரை தேர்வு செய்­யப்­ப­ட­லாம்.

செந்­தோசா-பிரானி பெருந்­திட்ட மறு­ஆய்வு தொடர்­பான பரந்த திட்­டங்­கள் குறித்து விவ­ரித்த கேபி­எம்ஜி நிறு­வ­னத்­தின் பங்­காளி திரு கியோம் சாஷே, கொவிட்-19 கார­ண­மாக பய­னீட்­டா­ளர்­க­ளின் முன்­னு­ரி­மை­களும் நடத்­தைப் போக்­கும் மாறி­யி­ருக்­க­லாம் என்­ப­தால் இந்த மறு­ஆய்வு சரி­யான நேரத்­தில் எடுக்­கப்­பட்­டு உள்ள முடிவு எனக் குறிப்­பிட்­டார். எடுத்­துக்­காட்­டாக, நெருக்­கம் அதி­க­முள்ள இடங்­களை சுற்­றுப்­ப­ய­ணி­கள் விரும்­பா­மல் போக­லாம் என்­றார் அவர்.

கொரோனா தொற்று மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் வளர்ச்­சியை முடுக்­கி­விட்­டுள்ள நிலை­யில், மின்­னி­லக்­கத் தீர்­வு­க­ளைப் பயன்­படுத்தி சுற்­றுப்­ப­யண அனு­ப­வத்தை எவ்­வாறு மேம்­ப­டுத்­த­லாம் என்று ஆராய்­வ­தற்­கான வாய்ப்­பை­யும் இந்த மறு­ஆய்வு வழங்­கும் என்று திரு சாஷே கூறி­னார்.

எல்­லை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்டு வரு­வ­தால் உள்­ளூர் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளைத் தக்­க­வைப்­பது குறித்­தும் ஆரா­யப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

பசு­மை­யான நாடாக உரு­மாற சிங்­கப்­பூர் பெரு­மு­யற்சி எடுத்­து­வரும் நிலை­யில், நீடித்து நிலைக்­கத்­தக்க பல அம்­சங்­களை பெருந்­திட்­டத்­தில் உள்­ள­டக்­க­வும் இந்த மறு­ஆய்வு வழி­வ­குக்­கும் என்­றார் திரு சாஷே.

அவ்­வ­கை­யில், எதிர்­கால வளர்ச்­சித் திட்­டங்­க­ளுக்கு வழி­காட்­டக்­கூ­டிய சூழ­லி­யல் ஆய்­வு­களை செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கம் மேற்­கொண்டு வரு­கிறது.