உக்ரேனில் குழந்தைகள், பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு: ஐநா வலியுறுத்து

உக்ரேனில் குழந்தைகள், பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு: ஐநா வலியுறுத்து

2 mins read
b2a69051-0251-49b3-a418-49ba49ae2d49
ரஷ்யப் படையெடுப்பை அடுத்து, உக்ரேனின் டோன்பாஸ் பகுதியை விட்டு ரயில்மூலம் வெளியேறும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

உக்­ரேன் மீதான படை­யெ­டுப்­பின்­போது அந்­நாட்­டுப் பெண்­கள் மீது ரஷ்­யப் படை­யி­னர் தொடுத்த வன்­முறை குறித்து விசா­ரணை தேவை என்­றும் குழந்­தை­க­ளுக்கு அதிக பாது­காப்பு தேவை என்­றும் ஐநா உய­ர­தி­கா­ரி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

"பாலி­யல் வன்­கொ­டு­மை­களும் குற்­றங்­களும் இடம்­பெ­று­வ­தாக அதிக அள­வில் கூக்­கு­ரல்­கள் ஒலிக்­கின்­றன. இத்­த­கைய குற்­றச்­சாட்­டு­கள் சுதந்­தி­ர­மாக விசா­ரிக்­கப்­பட்டு, நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டும்," என்று ஐநா பெண்­கள் அமைப்­பின் இயக்­கு­நர் சிமா பகோஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

ரஷ்­யப் படை­யெ­டுப்பு கார­ண­மாக உக்­ரே­னில் 4.8 மில்­லி­யன் குழந்­தை­கள் தங்­க­ளது வீடு­களில் இருந்து இடம்­பெ­யர்ந்­து­விட்­ட­தாக யூனி­செஃப் அமைப்பு தெரி­வித்­து உள்­ளது. அங்கு இன்­னும் 3.2 மில்லி­யன் குழந்­தை­கள் தங்­க­ளது வீடு­களில் இருக்­க­லாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்ள நிலை­யில், அவர்­களில் பாதிப் பேர் போதிய உணவு கிடைக்­காத அபாய நிலை­யில் இருக்­க­லாம் என்­றும் அவ்­வ­மைப்பு கூறி­யது.

இத­னி­டையே, உக்­ரே­னின் தென்­து­றை­முக நக­ரான மரி­ய­போலில் சண்டை கார­ண­மாக 10,000க்கும் மேற்­பட்­டோர் மாண்­டு­ விட்­ட­தாக அந்­ந­க­ரின் மேயர் வடிம் பாய்­சென்கோ தெரி­வித்­துள்­ளார். தெருக்­களில் மனித உடல்­கள் 'தரை­வி­ரிப்பு' போன்று கிடப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அந்­ந­க­ரில் இன்­னும் 120,000 பேர் இருப்­ப­தா­க­வும் அவர்­க­ளுக்கு உட­ன­டி­யாக உணவு, நீர், மருந்துப்­பொ­ருள்­கள் ஆகி­யவை தேவைப்­படு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில், மரி­ய­போல் நகர முற்­று­கை­யின்­போது ரஷ்யா வேதிப்­பொ­ருள் அடங்­கிய ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­லாம் என்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. அதன் உறு­தித்­தன்­மையை ஆராய்ந்து வரு­வதாக உக்­ரேன் தற்­காப்பு துணை அமைச்­சர் ஹன்னா மலி­யர் கூறி­ உள்­ளார்.

புட்­டின் எச்­ச­ரிக்கை

இதற்­கி­டையே, ரஷ்­யா­வைத் தனி­மைப்­ப­டுத்த மேற்­கத்­திய நாடு­கள் மேற்­கொள்­ளும் முயற்­சி­கள் தோல்வி­யில் முடி­ய­லாம் என்று ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் எச்­ச­ரித்­திருக்கிறார்.

கடி­ன­மான சூழ்­நி­லை­க­ளி­லும் ரஷ்­யா­வால் உச்­சம் தொட முடி­யும் என்­ப­தற்கு சோவி­யத் ஒன்­றி­யத்­தின் விண்­வெ­ளிச் சாத­னை­களே சான்று என அவர் குறிப்­பிட்­டார்.

"இன்­றைய நவீன உல­கில் எந்த ஒரு நாட்­டை­யும், அதி­லும் ரஷ்யா போன்ற ஒரு பெரிய நாட்­டைத் தனி­மைப்­ப­டுத்­து­வது என்­பது முடி­யாத செயல்," என்­றார் அதி­பர் புட்டின்.

அமெ­ரிக்­கா­வும் அதன் நட்பு நாடு­களும் ரஷ்­யாவை முடக்­கும் வகை­யில் பொரு­ளி­யல் தடை­களை விதித்­துள்­ளதை அடுத்து, இனி ஒரு­போ­தும் மேற்­கத்­திய நாடு­களைச் சார்ந்­தி­ருக்­கப்போவ­தில்லை என்று ரஷ்யா தெரி­வித்­துள்­ளது.