பயண வருகை அட்டை தேவையில்லை

பயண வருகை அட்டை தேவையில்லை

2 mins read

சிங்கப்பூருக்குத் தரைவழிப் பயணம் மேற்கொள்வோருக்குக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்படுகிறது

கொவிட்-19க்கு எதி­ராக முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள சிங்­கப்­பூர் குடி­மக்­கள், சிங்கப்பூர் நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால அனு­மதி அட்­டையை வைத்­தி­ருப்­பவர்கள் ஆகி­யோர் இனி தரை­வழி சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொள்­ளும்­போது எஸ்ஜி பயண வருகை அட்­டையை சமர்ப்­பிக்­கத் தேவை­யில்லை என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தக் கட்­டுப்­பாட்­டுத் தளர்வு நாளை முதல் நடப்­புக்கு வரும்.

எனி­னும், கடல் அல்­லது ஆகாயம்­வழி சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொள்­வோர் தொடர்ந்து எஸ்ஜி பயண வருகை அட்­டையை நிரப்பி சமர்ப்­பிக்­க­வேண்­டும்.

மலே­சி­யா­வை­யும் சிங்­கப்­பூ­ரை­யும் தரை­வழி இணைக்­கும் உட்­லண்ட்ஸ், துவாஸ் சோத­னைச் சாவ­டி­களில் உள்ள போக்­கு­வ­ரத்து அள­வைக் கருத்­தில்­கொண்டு இந்­தக் கட்­டுப்­பாட்­டைத் தளர்த்த முடி­வெ­டுத்­த­தாக குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

குறிப்­பாக வேலை, படிப்பு போன்ற கார­ணங்­க­ளுக்­காக அன்­றா­டம் தரை­வழி சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொள்­வோ­ருக்கு இந்­தக் கட்­டுப்­பாட்­டுத் தளர்வு பெரி­தும் உத­வும் என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

இதற்­குத் தகு­தி­பெற சிங்­கப்­பூ­ருக்­குத் தரை­வ­ழிப் பய­ணம் மேற்­கொள்­ப­வர்­கள், அதற்கு முன்பு ஏழு நாள்­க­ளுக்­குள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பிரி­வில் இடம்­பெ­றும் நாடு­க­ளுக்கோ பகு­தி­க­ளுக்கோ பய­ணம் மேற்­கொண்­டி­ருக்­கக்­கூடாது.

ஒரு­வர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கும் சாத்­தி­யம் அதி­கம் இருப்­ப­தாக சிங்­கப்­பூர் வகைப்­ப­டுத்­தும் நாடு­கள் அந்­தப் பிரி­வில் இடம்­பெ­றும். தற்­போது எந்த நாடும் அதில் இடம்­பெ­ற­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­ட­வர்­கள் 'டிரேஸ்­டு­கெ­தர்' அல்­லது 'ஹெல்த்­ஹப்' செய­லி­க­ளின்­வழி அதை உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும்.

வெளி­நா­டு­களில் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­வர்­கள், முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வு­டன் அந்த விவ­ரங்­களை சுகாதார அமைச்­சின் பதி­வ­கத்­தில் பதி­வு­செய்­ய­வேண்­டும். சிங்­கப்­பூ­ருக்கு வரு­வ­தற்­கு­முன் தடுப்­பூசி விவ­ரங்­க­ளைச் சரி­பார்க்­கும் குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யத்­தின் தளத்­தில் தங்­க­ளின் மின்­னி­லக்க தடுப்­பூசி ஆவ­ணத்தை சமர்ப்­பித்து அவ்­வாறு செய்­ய­லாம்.

மின்­னி­லக்க ஆவ­ணத்­தைச் சமர்ப்­பிக்­க­ மு­டி­யா­த­வர்­கள் அல்­லது அது இல்­லா­த­வர்­கள் குடி­நுழைவு சோத­னைச் சாவ­டி­களில் அதி­கா­ரி­க­ளி­டம் தங்­க­ளின் காகித ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பிக்­க­வேண்­டும்.

கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லைக் கையாள 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி­யன்று எஸ்ஜி பயண வருகை அட்டை முறை நடை­மு­றைப்­படுத்தப்­பட்­டது.