ரஷ்யா: தக்க பதிலடி கொடுப்போம்

ரஷ்யா: தக்க பதிலடி கொடுப்போம்

2 mins read
c79c2cfb-f5d6-4c62-adf1-d949313ea923
உக்ரேனில் ஏவுகணை உற்பத்தி செய்யும் ஆலையை ரஷ்யப் படையினர் ஏவுகணை கொண்டு தகர்த்தனர்.படம்: ஏஎஃப்பி -

உக்­ரேன் தலை­ந­கர் கியவ்­வுக்கு அரு­கில் ராணு­வத் தளங்­களை ஏவு­க­ணை­க­ள் கொண்டு

தகர்த்­தி­­ருப்­ப­தாக ரஷ்யத் தற்­காப்பு அமைச்சு நேற்று தெரி­

வித்­தது.

தனது ராணு­வத்தை உக்­ரேன் குறி­வைத்­துத் தாக்­கு­வ­தால் அதற்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யில் கியவ் நக­ரம் மீது மேலும் பல தாக்­கு­தல்­கள் நடத்­தப்­ப­டு­வது நிச்­ச­யம் என்று ரஷ்யா

சூளு­ரைத்­தது.

உக்­ரே­னின் மரி­ய­போல்

நக­ரைத் தனது படை­கள் சுற்­றி­

வ­ளைத்­தி­ருப்­ப­தா­க­வும் அங்­குள்ள இலி­யிச் எஃகு ஆலையை அவை கைப்­பற்­றி­யி­ருப்­ப­தா­க­வும் ரஷ்யத் தற்­காப்பு அமைச்சு கூறி­யது.

கியவ் நக­ரில் நேற்று பல வெடிப்­புச் சத்­தங்­கள் கேட்­ட­தாக செய்­தி­யா­ளர்­கள் கூறி­னர்.

கடந்த சில வாரங்களாக கியவ் நகரை நோக்­கிச் சென்று

கொண்­டி­ருந்த ரஷ்­யப் படை­கள்

இம்­மா­தத் தொடக்­கத்­தில்

அங்­கி­ருந்து பின்­வாங்­கின.

உக்­ரே­னின் கிழக்கு, தெற்­குப் பகு­தி­களில் கவ­னம் செலுத்த வியூ­கம் வகுப்­ப­தாக ரஷ்யா தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், பல நாள்­க­ளுக்­குப் பிறகு கியவ் நகர் மீது

நேற்­று­தான் முதல்­மு­றை­யாக ரஷ்யா மிகக் கடு­மை­யான

தாக்­கு­தல்­களை நடத்­தி­யது.

கருங்­க­ட­லில் ரஷ்­யா­வின் பிர­தான போர்க்கப்­ப­லான 'மோஸ்க்வா' மூழ்­க­டிக்­கப்­பட்­டதை அடுத்து கியவ் நகரை ரஷ்யா மீண்­டும் தாக்­கத் தொடங்­கி­யுள்­ளது. தனது ஏவு­க­ணை­யைக் கொண்டு ரஷ்­யப் போர்க்­கப்­பலை மூழ்­க­டித்­த­தாக உக்­ரேன் தெரி­வித்­தது. இதை­ய­டுத்து, நேற்று முன்­தின இரவு முழு­வ­தும் கியவ் நகரை நோக்கி ரஷ்யா ஏவு­கணை மழை பொழிந்­தது.

அதில் உக்­ரே­னிய ராணு­வத்­துக்­காக ஏவு­க­ணை­களை உற்­பத்தி செய்த ஆலை ஒன்று அழிக்­கப்­பட்­ட­தாக ரஷ்யா தெரி­வித்­தது.

"ரஷ்யா மீது உக்­ரேன் நடத்­தும் ஒவ்­வொரு தாக்­கு­த­லுக்­கும் தக்க பதி­லடி கொடுக்­கப்­படும். எங்­கள் தாக்­கு­த­லின் தீவி­ரம் அதி­க­ரிக்­கும்," என்று ரஷ்யா கூறி­யது.

ரஷ்ய கிரா­மம் மீது உக்­ரே­னிய ராணு­வத்­துக்­குச் சொந்­த­மான ஹெலி­காப்­டர் தாக்­கு­தல் நடத்­தி ­ய­தா­க­வும் அதை ரஷ்­யப் படை­

யி­னர் சுட்டு வீழ்த்­தி­ய­தா­க­வும் ரஷ்யத் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, பிடி­பட்ட ரஷ்ய ராணுவ வீரர்­களை உக்­ரேன் ரஷ்­யா­வி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளது.

அவர்­க­ளுக்­குப் பதி­லாக ரஷ்யா பிடித்து வைத்­தி­ருந்த தனது வீரர்­களை உக்­ரேன் பெற்­றுக்­

கொண்­டது.

மிகப் பதற்­ற­மிக்க சூழ­லில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் போரில் பிடி­பட்ட வீரர்­களைச் சொந்த நாட்­டி­டம் ஒப்­ப­டைக்க இரு­நா­டு­களும் இணங்­கி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

ரஷ்யா கைப்­பற்­றிய கெர்­சோன் நக­ரில் இது நிகழ்ந்­த­தாக

உக்­ரே­னியத் தற்­காப்பு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.