வாழை இலை விருந்து

வாழை இலை விருந்து

1 mins read
5cbc5004-e6cf-46bf-850f-a933980d499a
ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் பலநோக்கு மண்டபத்தில், பாதுகாப்பு இடைவெளியுடன், தனித்தனி மேசை ஏற்பாடுகளுடன் தமிழ்ப் புத்தாண்டு விருந்துண்டு மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள். இவர்கள் பிறகு இந்திய மரபுடைமை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கி. ஜனார்த்­த­னன்

சித்­தி­ரைப் புத்­தாண்­டை­யொட்டி, வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சுமார் 100 பேர் நேற்று லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள ஸ்ரீ வீர­மா­கா­ளி­யம்­மன் ஆலயத்­தில் விருந்­த­ளித்து சிறப்­பிக்­கப்­பட்­ட­னர். 'பிபிடி லாட்ஜ் 1பி', 'ஏவரி லாட்ஜ்', 'டாவ்­பேவ் எஃப்சிடி' ஆகிய மூன்று தங்­கு­வி­டு­தி­க­ளைச் சேர்ந்த அந்த ஊழி­யர்­கள் ஆல­யத்­தின் பலநோக்கு மண்­ட­பத்­தில் வாழை இலை­யில் அறு­சுவை உணவு உண்டு களித்­த­னர்.

கொவிட்-19 கார­ண­மாக 2020 முதல் தங்­கு­வி­டு­தி­க­ளி­லேயே அடை­பட்டுக் கிடக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இப்­போது சில நிபந் தனை­க­ளு­டன் வெளி­யில் சென்­று­வர அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக் கொண்டு '18 ஸ்டெப்ஸ்' என்ற சமூ­க சேவைக் குழு அந்த ஊழி­யர்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்த வாழை இலை விருந்­துக்கு ஏற்­பாடு செய்­தது.

"சிங்­கப்­பூ­ரின் முன்­னேற்­றத்­தில் முக்­கிய பங்­காற்­றும் இவர்­க­ளுக்கு புத்­தாண்டு உணர்­வைத் தந்து அவர்­களை மகிழ்­விப்­பதை எங்­க­ளது கட­மை­யா­கக் கருதி இதைச் செய்­தோம்," என்று விருந்­துக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்த '18 ஸ்டெப்ஸ்'' இணை நிறு­வ­னர் தேவ­ராஜ் நம்­பி­ரா­ஜன் தமிழ் முர­சி­டம் கூறி­னார்.

விருந்­துண்டு மகிழ்ந்த தமிழ்­நாடு, திரு­வா­ரூர் மாவட்­டத்­தைச் சேர்ந்த மணி­கண்­டன் என்­ப­வர் மூன்­றாண்­டு­க­ளுக்­குப் பிறகு இன்று­தான் வாழை­யி­லை­யில் வயி­ராற சாப்­பிட்­டேன் என்­றார்.

ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தைச் சேர்ந்த கணே­சன் பால­பி­ரி­யன், 39, என்ற கட்­டு­மா­னத் துறை ஊழி­யர் "திரு­மண விருந்­தில் கலந்­து­கொண்ட மகிழ்ச்சி எனக்கு ஏற்­பட்­டது," என்று கூறி­னார்.