சிங்கப்பூருக்கும் பிறநாடுகளுக்கும் இடையிலான விமானச் சேவைகளின் எண்ணிக்கை, கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்ததில் 38 விழுக்காட்டை கடந்த வாரத்தில் எட்டியுள்ளது.
ஒரு மாதத்துக்கு முன்பு 29 விழுக்காட்டை விட அந்த விகிதம் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (ஏப்ரல் 18) அன்று தெரிவித்தது.
குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமானச் சேவைகள் கணிசமாக கூடியுள்ளதாக ஆணையம் கூறியது.
மேலும், சாங்கி விமான நிலையத்தில் வந்துசெல்லும் பயணிகளின் எண்ணிக்கை, கொவிட்-19 பரவலுக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையில் 31 விழுக்காட்டை கடந்த வாரத்தில் எட்டியுள்ளது.
ஒரு மாதத்துக்கு முன்பு, சாங்கி விமான நிலையப் பயணிகள் எண்ணிக்கை கொவிட்-19 பரவலுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையில் 18 விழுக்காடாக இருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த வாரத்தில் சிங்கப்பூர் வழியாக 400,000 பயணிகள் சென்றனர் என்று ஆணையம் கூறியது.
ஏப்ரல் மாதத்தில் பயணிகள் போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி சிங்கப்பூர் எல்லைகள் மீண்டும் முழுமையாகத் திறக்கப்பட்டதை அடுத்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலுக்கு முந்தைய பயணிகள் எண்ணிக்கையில் பாதி அளவை இவ்வாண்டு இறுதிக்குள் எட்டும் இலக்கை நோக்கி சிங்கப்பூர் சரியாக சென்றுகொண்டிருக்கிறது என்பதை இந்த வளர்ச்சி காட்டுகிறது என்று ஆணையம் கூறியது.