கழிவு மறுசுழற்சி 13 விழுக்காடாக நீடிப்பு

கழிவு மறுசுழற்சி 13 விழுக்காடாக நீடிப்பு

2 mins read
431ce9c9-5399-4393-942c-56a41f849a05
'துவாஸ் நெக்சஸ்' திட்டம் குறித்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவிடம் (இடமிருந்து 2வது) விளக்குகிறார் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் செயற்பொறியாளர் ஆல்பர்ட் சியெங். உடன் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2021ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடும்பங்கள் 1.82 மில்லியன் டன் கழிவுகளைக் கொட்டின

சிங்­கப்­பூ­ரில் கடந்த 2020ஆம் ஆண்­டைப் போலவே, 2021ஆம் ஆண்­டி­லும் உள்­ளூர் அள­வி­லான கழிவு மறு­சு­ழற்சி விகி­தம் 13 விழுக்­கா­டாக நீடித்­தது.

குடும்­பங்­கள் அதிக அள­வில் கழி­வு­க­ளைக் கொட்­டி­ய­போ­தும், பத்­தாண்­டு­களில் ஆகக் குறை­வான இந்த மறு­சு­ழற்சி நிலை தொடர்ந்­தது.

வரு­டாந்­திர கழிவு, மறு­சு­ழற்சிப் புள்­ளி­வி­வ­ரங்­களை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று வெளி­யிட்­டது. அதன்­படி, சென்ற ஆண்­டில் சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் 1.82 மில்­லி­யன் டன் கழி­வு­களை உரு­வாக்­கின. முந்­திய 2020ஆம் ஆண்­டில் இந்த அளவு 1.77 மில்­லி­யன் டன்­னாக இருந்­தது.

இவ்­விரு ஆண்­டி­லும் 13% கழிவு­கள் மறு­சு­ழற்சி செய்­யப்­பட்­டன. இவ்­வி­கி­தம் கடந்த 2017-2019 கால­கட்­டத்­தில் 17 முதல் 19 விழுக்­காட்­டிற்­குள் இருந்­தது.

நீடித்து நிலைக்­கத்­தக்க சிங்­கப்­பூர் திட்­டத்­தின்­கீழ், வரும் 2030ஆம் ஆண்­டு­வாக்­கில் மறு­சு­ழற்சி விகி­தத்தை 30 விழுக்­காடாக உயர்த்துவதே இலக்கு.

நீல­நிற மறு­சு­ழற்­சிக் குப்­பைத்­தொட்­டி­கள் மாசு­ப­டுத்­தப்­ப­டு­வதே இந்த இலக்கை எட்­டு­வ­தில் முக்­கி­யத் தடை­யாக விளங்­கு­கிறது.

குறிப்­பாக உணவு, பானக் கழிவு­களிலிருந்து ஏற்­படும் கசிவு, மின்­க­ழி­வு­கள், 'ஸ்டை­ரோ­ஃபோம்' எனும் மெத்­துப்­பொ­ருள் போன்­ற­வற்­றால் நீல­நி­றக் குப்­பைத்­தொட்டி­களில் போடப்­படும் குப்­பை­களில் கிட்­டத்­தட்ட 40% குப்­பை­களை மறு­சு­ழற்சி செய்ய முடி­வ­தில்லை என்று வாரி­யம் தெரி­வித்­தது.

"ஆடை­கள், மென்­பொம்­மை­கள் போன்றவற்றை நீல­நி­றக் குப்­பைத் தொட்­டியில் போடக்­கூடாது. ஆனால், அவற்­றை­யும் அதில் போடு­கின்­ற­னர். மாறாக, நல்ல நிலை­யில் இருப்­பின் அவற்றை நன்­கொ­டை­யாக அளிக்­க­லாம்," என்று வாரி­யம் குறிப்­பிட்­டது.

அத்­து­டன், மறு­சு­ழற்­சிக் குப்­பைத்­தொட்­டிக்­குள் போடு­முன் பல­ரும் அவ்­வ­கைக் கழி­வு­களை அல­சு­வ­தில்லை. அது, நீல­நி­றக் குப்­பை­களை மேலும் மாசு­ப­டுத்தி, அப்­பொ­ருள்­களை மறு­சு­ழற்சி செய்­யத்­த­கா­த­தாக ஆக்­கி­வி­டு­கிறது.

சரி­யான மறு­சு­ழற்சி நடை­முறை­களை மக்­க­ளுக்­குத் தெரி­யப்­படுத்­தும் வித­மாக, எந்­தெந்­தப் பொருள்­களை நீல­நிற மறு­சு­ழற்­சிக் குப்­பைத் தொட்­டி­களில் போட­லாம், எவற்­றைப் போடக்­கூ­டாது எனும் விவ­ரங்­களை வாரி­யம் தனது 'ரீசைக்­கிள் ரைட்' இணை­யப்­பக்­கத்­தில் விவ­ர­மா­கக் குறிப்­பிட்­டு உள்­ளது.

இந்நிலையில், கொவிட்-19 தொற்­றுக்­கு­முன் 2019ஆம் ஆண்­டில் மறு­சு­ழற்சி விகி­தம் 59 விழுக்­கா­டாக இருந்­த­தை நீடித்த நிலைத்தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ சுட்டினார்.

"வரும் 2030ஆம் ஆண்­டிற்­குள் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து குப்பை நிரப்­பும் நிலத்­திற்­குச் செல்­லும் குப்­பை­யின் அளவை 30% குறைக்க வேண்­டும் எனும் நமது இலக்கை அடைய, நாம் அதி­கம் நீடித்து நிலைக்­கத்­தக்க வகை­யில் நமது பய­னீட்டு, உற்­பத்தி நடை­மு­றை­களைக் கொண்­டி­ருக்க வேண்­டும்," என்­றார் திரு­வாட்டி ஃபூ.

நேற்று நடை­பெற்ற 2022 சிங்­கப்­பூர் அனைத்­து­லக நீர் வாரம் மற்­றும் சிங்­கப்­பூர் தூய சுற்­றுக்­சூ­ழல் உச்­ச­நிலை மாநாட்­டின் தொடக்க நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­போது அமைச்­சர் ஃபூ இவ்­வாறு பேசி­னார்.