இலங்கை: முதல் பலியை அடுத்து நிலவரம் மோசம்

இலங்கை: முதல் பலியை அடுத்து நிலவரம் மோசம்

2 mins read
4a051ed3-849b-40fd-bbb9-837e9069c162
இலங்கை தலைநகர் கொழும்பில் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பொருளியல் நெருக்கடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இலங்கை முழுவதும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. படம்: இபிஏ -

இலங்­கை­யில் உணவு, எரி­பொ­ருள் பற்­றாக்­கு­றையை எதிர்த்து தொடர்ந்து ஆர்ப்­பாட்­டம் நடந்து வரு­கிறது. அந்த நாட்­டின் அதி­பர் பதவி விலக வேண்­டும் என்று கோரிக்கை விடுத்து மக்­கள் ஆர்ப்­ப­ரித்து வரு­கி­றார்­கள்.

இந்த நிலை­யில், ரம்­புக்­கனா என்ற மத்­திய நக­ரில் செவ்வாய்க் கிழமை நடந்த ஆர்ப்­பாட்­டத்­தின்­போது வன்­செ­யல் வெடித்­தது. ஒரு­வர் கொல்­லப்­பட்­டார். இதர 13 பேர் காய­ம­டைந்­த­னர். அவர்­களில் மூன்று பேரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்ளது.

இதை அடுத்து அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரு­கிறது. "உடனே பத­வியில் இருந்து விலகுங்­கள்," என்று 'சமாஜி ஜனா பல­வே­கயா' என்ற முக்­கிய எதிர்க்­கட்­சி­யின் நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஹர்ஷா டி சில்வா டுவிட்­டரில் கோரிக்கை விடுத்­தார்.

இந்நிலையில், மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர சாங்கத்திற்கான தங்கள் ஆதரவை நேற்று மீட்டுக்கொண்டனர்.

இலங்கை பெரும் கடன் சுமை­யில் சிக்­கி­விட்­டது. அந்­நியச் செலா வணி கையி­ருப்பு இல்­லா­த­தால் எரி­பொ­ருள் முத­லா­ன­வற்றை இறக்கு­மதி செய்ய முடி­ய­வில்லை.

விலை­வாசி விண்ணை முட்­டும் அள­வுக்கு கூடி­விட்­டது. இவற்­றுக்கு அதி­பரே பொறுப்பு என்றும் அவர் பதவி விலக வேண்­டும் என்றும் கோரி தொடர் ஆர்ப்­பாட்­டங்­கள் நடந்து வரு­கின்­றன.

ரம்­புக்­க­னா­வில் காவல்­துறை அதி­கா­ரி­கள் துப்­பாக்கிப் பிர­யோ­கம் நடத்­தி­ய­தில் முதன் முதலாக உயிர் பலி ஏற்பட்டது.

இது பற்றி கருத்து கூறிய அதி­ப­ரின் சகோ­த­ர­ரான பிர­த­மர் மகிந்த ராஜ­பக்சே, அந்­தச் சம்­ப­வத்தை அறிந்து மிக­வும் மன­மு­டைந்து போய்­விட்­ட­தாக டுவிட்­ட­ரில் கூறி­னார். வன்­செ­யல்­களில் ஈடு­பட வேண்­டாம் என்று அவர் மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.