சிங்கப்பூர் முஸ்லிம்களுக்குப் பிரதமர் லீ பாராட்டு

சிங்கப்பூர் முஸ்லிம்களுக்குப் பிரதமர் லீ பாராட்டு

1 mins read
155d80f4-be51-457a-aaa6-94536e1f894e
அங் மோ கியோ அல் முத்தக்கின் பள்ளிவாசலில் நேற்றிரவு நடந்த நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் (வலமிருந்து) முஃப்தி டாக்டர் நஸிருதின் முகம்மது நசிர், முயிஸ் தலைவர் சாட் அப்துல் ரஹ்மான், பிரதமர் லீ சியன் லூங், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, முயிஸ் பயிற்சிக் கழகத்தின் தலைவர் டாக்டர் அல்பக்ரி அகமது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 பர­வல் கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூர் முஸ்­லிம் சமூ­கம் தனது மீள்­தி­றனை வெளிப்­ப­டுத்­தி­யது என்று பிர­த­மர் லீ சியன் லூங் புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

சவால்­மிக்க இரண்டு ஆண்­டு­களுக்­குப் பிறகு இங்­குள்ள பள்ளி­வா­சல்­களில் வழக்­க­மான சில நட­வ­டிக்­கை­கள் திரும்­பி­யுள்­ள­தால் இவ்­வாண்டு ரம­லான் மாதம் முஸ்­லிம்­க­ளுக்­குச் சிறப்­பா­னது என்று திரு லீ தெரி­வித்­தார். அல் முத்­தக்­கின் பள்­ளி­வா­ச­லில் நேற்­றி­ரவு நடந்த நோன்­புத் துறப்பு நிகழ்­வில் பிர­த­மர் லீ கலந்­து­கொண்­டார்.

தனது முயற்­சி­க­ளுக்­காக முஸ்­லிம் சமூ­கத்­தி­ன­ருக்கு நன்றி கூறிக்­கொண்ட பிர­த­மர் லீ, சிங்­கப்­பூ­ரின் இன, சமய நல்­லி­ணத்­தைக் காக்க நம்­பிக்­கைத் தலை­வர்­கள் எடுத்து­வரும் நட­வ­டிக்­கை­களை­யும் பாராட்­டி­னார்.

அதி­க­மான முஸ்­லிம்­கள் இப்­போது பள்­ளி­வா­சல் செல்ல முடி­யும் எனக் குறிப்­பிட்ட அவர், வெள்­ளிக்­கி­ழமை மற்­றும் இர­வு­நேரத் தொழு­கை­கள் கிட்­டத்­தட்ட வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­யுள்­ள­தா­க­வும் சொன்­னார்.

இங்­குள்ள முஸ்­லிம்­கள் தேசிய வழி­காட்டுதல்களுக்கு இணங்க தங்­க­ளது நடை­மு­றை­களை மாற்­றிக்­கொண்­ட­தன்­மூ­லம் பொதுச் சுகா­தா­ரச் சவால்­க­ளைப் புரிந்­து­கொண்­ட­தாக திரு லீ சொன்­னார்.

"பிணைப்­பு­ட­னும் ஒற்­று­மை­யு­ட­னும் ஒரே மக்­க­ளாக இருந்து, நமது பல்­லின, பல சமய நல்­லி­ணக்­கத்தை வலுப்­ப­டுத்­தும் முயற்­சி­க­ளைத் தொடர்­வோம் என நம்­பு­கி­றேன். அதன்­மூ­லமே எதிர்­கா­லத்­தி­லும் சிங்­கப்­பூர் செழிப்புற்று, வெற்றி­க­ர­மான நாடா­கத் திகழ முடி­யும்," என்று பிர­த­மர் லீ கூறி­னார்.