ஒரு மில்லியனைத் தாண்டியது

ஒரு மில்லியனைத் தாண்டியது

2 mins read
2697e91c-bb77-42dd-917b-3f1bc5a66f92
சாங்கி விமான நிலையம் வழியாக இந்த ஆண்டு ஜூனில் 5.12 மில்லியன் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். . - படம்: சாவ் பாவ்

ஈராண்டுகளுக்குப்பின் சாங்கி விமான நிலையம் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது.

கடந்த மாதம் சாங்கி விமா­னம் வழி­யாக ஏறத்­தாழ 1.14 மில்­லி­யன் பேர் பய­ணம் செய்­தனர்.

கொவிட்-19 பர­வத் தொடங்­கி­ய­தால் எல்­லை­கள் மூடப்­பட்டு இ­ருந்த ஈராண்­டுகளுக்குப் பிறகு பய­ணி­கள் எண்­ணிக்கை ஒரு மில்­லி­ய­னைத் தாண்­டி­யி­ருப்­பது இதுவே முதன்­முறை. ஆயினும், 2019 மார்ச் மாதத்தை ஒப்­பு­நோக்க இந்த எண்­ணிக்கை 20.3%தான்.

அதே நேரத்­தில், ஓராண்­டுக்கு­முன் பதி­வான பய­ணி­கள் எண்­ணிக்­கை­யை­விட இது ஆறு மடங்­கிற்­கு­மேல் அதி­கம் என்­பது சாங்கி விமான நிலையத்தின் மீட்சி சூடு­பி­டிக்­கத் தொடங்­கி­யிருப்பதைக் காட்டுகிறது.

சாங்கி விமான நிலை­யத்­தில் கடந்த மாதம் மொத்­தம் 13,200 விமானங்கள் வந்து சென்றன. இது, 2020 மார்ச் மாதத்­தை­விட 62.9% அதி­கம். ஆயினும், விமா­னங்­கள் கையாண்ட சரக்­கு­க­ளின் அளவு 3.18% குறைந்து, 152,000 டன்­னாகப் பதி­வா­னது. கொவிட்-19 நில­வரம் மற்­றும் புவி­சார் அர­சி­யல் பிரச்­சி­னை­க­ளால் விநி­யோ­கத் தொட­ரில் ஏற்­பட்ட இடை­யூ­று­களே இதற்­குக் கார­ணம் என்று சாங்கி விமான நிலை­யக் குழு­மம் குறிப்­பிட்­டது.

ஒட்­டு­மொத்­தத்­தில், இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் சாங்கி விமான நிலை­யம் 2.56 மில்­லி­யன் பய­ணி­க­ளைக் கையாண்­டுள்­ளது. கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­பி­ருந்த அள­வில் இது 15.6%தான்.

ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா, மலே­சியா, தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­க­ளுக்கு அதி­க­மானோர் சென்று வந்­த­னர்.

ஏப்­ரல் 1ஆம் தேதி நில­வ­ரப்­படி, 81 விமா­னப் போக்­கு­வ­ரத்து நிறு­வனங்­கள் சாங்கி விமா­னம் நிலை­யம் வழி­யாக வாரத்­திற்கு 2,800 விமா­னங்­களை இயக்­கின. இப்­போதைக்கு அவ்­வி­மான நிலை­யம், சரக்கு மற்­றும் பய­ணி­கள் விமா­னங்­கள் மூலமாக 47 நாடு­க­ளைச் சேர்ந்த 121 நக­ரங்­க­ளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலை­யக் குழு­மம் நேற்று வெளி­யிட்ட தனது 'சாங்கி ஜர்­னீஸ்' மாதாந்­திர மின்­சஞ்­சி­கை­யில் இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­க­ளைக் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பயணிகள் அனை­வ­ருக்­கும் இம்­மா­தம் 1ஆம் தேதி­யில் இருந்து சிங்­கப்­பூர் தனது கத­வு­க­ளைத் திறந்­து­விட்­டி­ருப்­ப­தால் வரும் மாதங்­களில் விமா­னப் பய­ணத் துறை மேலும் மீட்­சி­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

விமா­னப் பய­ணி­கள் எண்­ணிக்­கை­யைப் பொறுத்­த­மட்­டில், இந்த­ ஆண்டு இறு­திக்­குள் கொவிட்-19 தொற்­றுக்­குள் முன்­பி­ருந்த நிலை­யில் பாதியை எட்ட சிங்­கப்­பூர் விரும்­பு­கிறது.