ராஜபக்சே சகோதரர்களுக்கு இடையே நீயா நானா மோதல்

ராஜபக்சே சகோதரர்களுக்கு இடையே நீயா நானா மோதல்

2 mins read

இலங்கை அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­விற்­கும் அவ­ரின் சகோ­த­ர­ரும் பிர­த­ம­ரு­மான மகிந்த ராஜ­பக்­சே­விற்­கும் இடையே உர­சல் நில­வு­வ­தாக இலங்கை ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

அதி­ப­ரின் செய­ல­தி­கா­ரத்­தைப் பறித்து, நாடா­ளு­மன்­றத்­திற்கு அதிக அதி­கா­ரத்தை வழங்­கும் வகை­யில், 19வது சட்­டத்­தி­ருத்­தத்தில் திருத்தம் முன்­மொ­ழிய பிர­த­மர் மகிந்த தயா­ராகி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடும் பொரு­ளி­யல் நெருக்­கடி­யில் இலங்கை சிக்­கித் தவிக்­கும் வேளை­யில், கடந்த பல வாரங்­களா­கவே அர­சாங்­கத்­திற்­கும் அதன் கூட்­ட­ணிக் கட்­சி­களுக்­கும் இடையே கருத்து வேறு­பாடு நில­வு­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது என்று 'டெய்லி மிரர்' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கூட்­ட­ணி­யில் இடம்­பெற்றுள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் பலர் இப்­போது எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்ந்­துள்­ள­னர். அவர்­களில் ஒரு­சா­ரார் பிர­த­மர் பதவி விலக வேண்­டும் என்­றும் இன்­னொரு சாரார் அதி­பர்­தான் பதவி விலக வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­ன­ராம்.

அண்­மைய அமைச்­ச­ரவை நிய­ம­னங்­கள் முழுக்க முழுக்க அதி­ப­ரின் தேர்வு என்­றும் அதன் தொடர்­பில் தம்­மு­டன் ஆலோ­சனை நடத்­த­வில்லை என்­ப­தால் அமைச்­ச­ர­வைப் பத­வி­யேற்பு விழா­வில் பிர­த­மர் மகிந்த கலந்­து­கொள்­ள­வில்லை என்­றும் அர­சியல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

மூத்த அமைச்­சர்­கள் சிலரைப் புதிய அமைச்­ச­ர­வை­யில் சேர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்று பிர­தமர் மகிந்த விரும்­பி­ய­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால், இளைய, புதிய அமைச்­ச­ர­வை­தான் வேண்­டும் என்று அதி­பர் கோத்­த­பாய வற்­பு­றுத்­தி­ய­தா­க­வும் அது போராட்­டக்­கா­ரர்­களை அமை­திப்­ப­டுத்தி, நாட்­டைப் பழைய நிலைக்­குக் கொண்­டு­செல்­லும் என்று அவர் நம்­பி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், முக்­கிய எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்­கள் சக்தி, அதி­ப­ரின் செய­ல­தி­கா­ரத்தை ரத்து செய்­வ­தற்­கான தீர்­மா­னத்தை நாடா­ளுமன்ற நாய­க­ரி­டம் நேற்று சமர்ப்­பித்­தது. 20வது சட்­டத்­திருத்­தத்தை ரத்து செய்­ய­வும் 19வது சட்­டத்­தி­ருத்­தத்­தில் திருத்­தம் செய்­ய­வும் அத்­தீர்­மா­னத்தில் கோரப்பட்டுள்ளதாக எதிர்க்­கட்சித் தலை­வர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­துள்­ளார்.