இனி வரம்பு இன்றி ஒன்றுகூடலாம்

இனி வரம்பு இன்றி ஒன்றுகூடலாம்

3 mins read

கொவிட்-19: ஏப்ரல் 26 முதல் பாதுகாப்பு இடைவெளி அகற்றம்; ஊழியர் அனைவரும் வேலையிடம் திரும்பலாம்

சிங்­கப்­பூ­ரில் வரும் 26ஆம் தேதி முதல் எஞ்­சிய கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களில் பெரும்­பா­லா­னவை அக­லு­கின்­றன. மக்­கள் ஒன்­று­கூடி உற­வா­டு­வ­தற்கான அளவு வரம்பு இனி இருக்­காது.

அதே­போல, வேலை இடங்­க­ளி­லும் ஊழி­யர்­க­ளுக்கு வரம்பு இருக்­காது.

இரண்டு ஆண்­டு­களில் முதன்­மு­த­லாக சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வ­ரம் ஆரஞ்சு நிறத்­தில் இருந்து மஞ்சள் நிறத்­திற்கு இறங்கி இருக்­கிறது.

சிங்கப்பூர், 2020 பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஆரஞ்சு நிலையில் இருந்து வருகிறது.

கட்டுப்பாடுகள் பெரிய அளவில் அகற்றப் படுவதாக சுகாதார அமைச்சு நேற்று அறி வித்தது. கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக்குழுக் கூட்டத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த குழுவின் இணைத் தலை­வரான­ சுகாதார அமைச்­சர் ஓங் யி காங், சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 பய­ணத்­தில் இது முக்­கி­ய­மான ஒரு மைல்­கல் என்றார்.

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­களில் இருந்து கிடைக்­கும் பாது­காப்பு மங்கி வரு­கிறது. இந்த நிலை­யில் வரும் மாதங்­களில் புதிய தொற்று தலை­தூக்­க­லாம் என்ற ஆபத்­தும் இருக்­கிறது.

புதிய உரு­மா­றிய கிருமி தொற்­றக்­கூடும் என்­ப­தும் மற்­றொரு கவலை தரும் ஆபத்­தும் உள்ளது என்று அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பு­வதற்கு இது­வரை இல்­லாத அள­வுக்கு பெரும் மாற்­றங்­கள் நேற்று அறி­விக்­கப்­பட்­டன. அதன்­படி, சேஃப் என்ட்ரி, டிரேஸ்­டு­கெ­தர் ஆகி­ய­வற்­றின் பய­னீடு பெரும்­பாலான இடங்­களில் இனி இருக்­காது. இருந்­தா­லும் இரவு நேரக் கேளிக்கை நிலை­யங்­களில், பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் இவை அவ­சி­யம்.

உண­வ­கங்­கள், உண­வங்­காடி நிலை யங்கள் போன்ற உணவு, பான நிலை­யங்­களி­லும் டிரேஸ்­டு­கெ­தர், சேஃப் என்ட்ரி இன்­ன­மும் தேவைப்­படும்.

குடும்­ப வருகையாளர்­களுக்­கான வரம்பும் அகற்­றப்­படும். வீட்­டுத் திரு­ம­ணங்­கள், ஈமச் சடங்­கு­கள் போன்­றவற்­றுக்­கும் இது பொருந்­தும். தனிப்­பட்­ட­வர்­கள், குழுக்­களுக்கு இடை­யில் பாது­காப்பு இடை­வெளி நிபந்தனையும் இனி தேவைப்­ப­டாது என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

ஊழி­யர்­கள் அனை­வ­ரும் அடுத்த செவ்­வாய் முதல் வேலை­யி­டத்­திற்­குத் திரும்­ப­லாம். வேலை­யி­டங்­களில் அவர்­கள் நேரடி­யாக மற்­ற­வர்­க­ளு­டன் அணுக்க தொடர்­பில் இல்­லா­த­போது முகக்­க­வ­சத்தை அணிய வேண்­டிய தேவை­யும் இல்லை.

இருந்­தா­லும் வேலை­யி­டங்­களில் ஊழி­யர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் சமூக பொறுப்­பு­டன் நடந்­து­கொண்டு முகக்­க­வ­சம் அணி­யா­த­போது பொருத்­த­மான அள­வுக்கு பாது­காப்பு இடை­வெ­ளியைக் கடைப்­பி­டித்து வர­வேண்­டும் என ஆலோ­சனை தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

புதிய மாற்­றங்­கள் நடப்­புக்கு வரு­கிறது என்­றா­லும் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாட்டை கைக்­கொள்­ளும்­படி முத­லாளி களுக்கு அமைச்சு ஊக்­க­மூட்டியது.

இருந்­தா­லும் வேலை­யி­டங்­கள் தவிர இதர உட்­புற இடங்­களில் முகக்­க­வ­சம் இன்­ன­மும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய நிகழ்ச்­சி­களில் இவ்­வளவு பேர்­தான் கலந்து­கொள்ள வேண்டும் என்ற வரம்­பும் இனி மேல் இருக்­காது.

இப்­போ­தைய மாற்­றங்­க­ளை­யும் சேர்த்து பார்க்­கை­யில் சிங்­கப்­பூ­ரின் பாது­காப்பு நிபந்­த­னை­களில் கிட்­டத்­தட்ட அனைத்­தும் அகற்­றப்­பட்­டு­விட்­டன. உட்­புற இடங்­களில் முகக்கவசங்­களை அணி­ய­வேண்­டும் என்ற விதி­முறை மட்­டுமே தொட­ரும் என்று அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

இந்நிலையில், தொடர்ந்து விழிப்­புடன் இருந்து வரும்­படி சிங்­கப்­பூ­ரர்­களை பணிக்­குழு வலி­யுறுத்­தி­யது. தொற்று இன்­ன­மும் முழு­மை­யாக ஒடுங்­கி­வி­ட­வில்லை என்­பதை அது சுட்­டிக்­காட்­டி­யது.

இத­னி­டையே, நேற்­றைய கொவிட்-19 அமைச்­சு­கள் நிலைப் பணிக்­குழு கூட்­டத்­தில் அமெரிக்காவில் இருந்தபடி காணொளி வழி பேசிய நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், இந்த மாற்­றங்­கள் மிகக் குறிப்­பிடத்­தக்க முன்­னேற்­றங்­கள் என்றார்.

கொவிட்-19 கிரு­மியை ஒடுக்­கு­வ­தில் பங்­காற்­றிய அனை­வ­ருக்­கும் நன்றி கூறிய திரு வோங், கிருமி இன்­ன­மும் முற்­றி­லும் ஒடுங்­கி­வி­ட­வில்லை என்­பதை நினை­வூட்­டி­னார்.

புதிய உரு­மா­றிய கிருமி தலை­காட்­டும். அது எப்­படி இருக்­கும் என்­பது யாருக்­கும் தெரி­யாது. தேவை ஏற்­படும் பட்­சத்­தில் கட்­டுப்­பா­டு­களைக் கடு­மை­யாக்க வேண்டி இருக்­க­லாம் என்றார் திரு வோங்.