வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

1 mins read

வெளி­நா­டு­வாழ் இந்­தி­யர்­கள் தாங்­கள் வசிக்­கும் நாடு­களில் இருந்தே வாக்­க­ளிக்க ஏது­வாக, வெளி­நா­டு­வாழ் இந்­திய வாக்­கா­ளர்­க­ளா­க தங்­க­ளைப் பதி­வு­செய்­து­கொள்­ளும்­படி ஆணை­யம் வலி­யு­றுத்தி இருக்­கிறது.

இப்­போது 1.26 கோடி இந்­தி­யர்­கள் வெளி­நா­டு­களில் வசித்து வரு­கின்­ற­னர். அவர்­களில் குறைந்­தது 60-65 விழுக்­காட்­டி­னர் இந்­தி­யா­வில் நடக்­கும் தேர்­தல்­களில் வாக்­களிக்­கத் தகு­தி­பெற்று இருக்­க­லாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆனால், கிட்­டத்­தட்ட 100,000 பேர் மட்­டுமே இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யத்­தில் வெளி­நா­டு­வாழ் இந்­திய வாக்­கா­ளர்­க­ளா­கப் பதி­வு­செய்­து­கொண்­டுள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது. அவர்­களில் பெரும்­பாலோர் கேரளா, தெலுங்­கானா, ஆந்­திரா ஆகிய மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். குஜ­ராத், பஞ்­சாப்­பைச் சேர்ந்­த­வர்­களும் வெளி­நாடு­வாழ் வாக்­கா­ளர்­க­ளா­கத் தங்­கள் பெய­ரைப் பதி­வு­செய்­துள்­ள­னர்.

வெளி­நா­டு­வாழ் இந்­தி­யர்­கள் இணை­யத்­தில் கிடைக்­கும் 6A படி­வத்­தைப் பயன்­ப­டுத்தி, தங்­க­ளது தொகு­தி­க­ளுக்­கான வாக்­கா­ளர்­களா­கப் பெயர்ப்­ப­திவு செய்­து­கொள்­ளலாம். சம்­பந்­தப்­பட்ட வாக்­குச்­சாவடிக்­கான வாக்­கா­ளர் பட்­டி­ய­லின் இறு­தி­யில் அவர்­க­ளது பெயர்­கள் சேர்க்­கப்­பட்­டு­வி­டும்.

இந்­நி­லை­யில், வெளி­நா­டு­வாழ் இந்­தி­யர்­க­ளுக்கு மின்­னணு முறை­யில் அனுப்­பப்­படும் அஞ்­சல் வாக்­குச்­சீட்டு முறையை அறி­மு­கப்­ப­டுத்­து­வது குறித்­துப் பரி­சீ­லித்து வரு­வதாகத் தலைமைத் தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இம்­மா­தம் 9-19ஆம் தேதி­களில் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் சுஷில் சந்­திரா தலை­மை­யி­லான பேரா­ளர் குழு தென்­னாப்­பி­ரிக்­கா,­மொரி­ஷி­ய­ஸ் நாடுகளுக்குச் சென்­றது.

அப்­போது, அவ்­விரு நாடு­களின் தேர்­தல் ஆணை­யங்­க­ளு­ட­னும் பல சந்­திப்­பு­களை அக்­குழு நடத்­தி­யது. அங்­குள்ள வெளி­நாடு­வாழ் இந்­தியச் சமூ­கங்­களு­ட­னும் அக்­குழுவினர் கலந்­துரையாடினர்.