சமய நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் சமயங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் பல இன சமயத்தினர் புனித ரமலான் மாத நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற நோன்புத் துறப்பு விருந்தில் இல்லவாசிகள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்டோர் ஒன்றுகூடினர்.
இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனைகள் செய்யப்பட்ட பிறகு அனைவரும் நோன்புத் துறப்பில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 80 பேர் வட்ட மேசைகளில் அமர்ந்து உணவுப் பெட்டிகளில் பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயண மிஷன் தனது மேம்பட்ட இணையத்தளத்தை வெளியிட்டது.
செய்தி: கி. ஜனார்த்தனன்

