அமெரிக்க பிரமுகர்கள் வருகை: உக்ரேனுக்கு ஊக்கம்

அமெரிக்க பிரமுகர்கள் வருகை: உக்ரேனுக்கு ஊக்கம்

2 mins read

உக்­ரேன் மீது ரஷ்யா தொடுத்­துள்ள போர் மூன்­றா­வது மாத­மாக நீடிக்­கிறது. இந்த நிலை­யில் அமெ­ரிக்க உயர்மட்ட பிர­மு­கர்­கள் உக்­ரே­னுக்கு அளித்துள்ள வருகை அந்த நாட்டிற்­குப் புதிய உற்­சா­கத்­தைக் கொடுத்­து உள்­ளது.

உக்­ரே­னின் கிழக்­குப் பகு­தி­யில் ரஷ்யா தாக்­கு­தலை அதி­க­மாக்­கி­வரும் ஒரு நிலை­யில், அமெரிக்­கா­வின் வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கன், தற்­காப்பு அமைச்­சர் லாயிட் ஆஸ்­டின் இரு­வரும் உக்­ரேன் தலை­ந­க­ருக்கு வருகை அளித்­த­னர்.

உக்­ரேன் போர் கடந்த பிப்­ர­வரி­யில் தொடங்­கி­யது முதல் இப்­போ­து­தான் முதன் முத­லாக அமெ­ரிக்க அமைச்­சர்­கள் உக்­ரேனுக்கு வருகை அளித்­த­னர்.

அவர்­கள் உக்­ரேன் அதி­பர் ஸெலன்ஸ்கியுடன் பேச்சு நடத்­தி­னர். "உக்­ரேன் போரில் ரஷ்யா தோற்­கிறது. உக்­ரேன் வெற்­றியை நோக்கி முன்­னே­று­கிறது," என்று பிறகு அமெ­ரிக்­கக் குழு­வி­னர் தெரி­வித்­த­னர். அந்த வரு­கை­யின் விளை­வாக உக்­ரே­னுக்­கு 165 மில்லின் டாலர் புதிய ராணுவ உத­விக்கு உத்­தரவாதம் கிடைத்­தது.

வரும் நாள்களில் உக்­ரே­னுக்­கான அமெ­ரிக்­கத் தூதர் மீண்­டும் உக்­ரேன் திரும்­பு­வார் என்­றும் உறுதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. கியவ் நகரில் அமெ­ரிக்­கத் தூத­ர­கம் மீண்­டும் திறக்­கப்­படும் என்­றும் அறி­விக்­கப்பட்­டுள்­ளது.

உக்­ரே­னுக்­கான அமெ­ரிக்­கத் தூத­ராக திரு­வாட்டி பிரிட்­கெட் பிரிங்கை நிய­மிக்க அதி­பர் பைடன் திட்டமிடு­கி­றார்.

இந்­தப் பதவி ஓராண்­டுக்­கும் அதிக காலம் காலி­யா­கவே இருந்து வரு­கிறது.

இத­னி­டையே, உக்­ரே­னின் துறை­முக நக­ரான மரி­ய­போ­லில் ரஷ்யப் படை­யி­னர் தரை, ஆகாய வழி­களில் கடும் தாக்­கு­தலைத் தொடர்ந்து நடத்தி வரு­வ­தா­க­வும் அதை உக்­ரேன் படை மூர்க்­க­மாக எதிர்த்து வரு­வ­தா­க­வும் நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன.

அந்த நக­ரில் இருக்­கும் மிக முக்­கி­ய­மான அசோவ்ஸ்­டால் என்ற எஃகு ஆலை இன்­ன­மும் உக்­ரேனிய படை­யி­ன­ரின் முழு கட்டுப்­பாட்­டில் இருப்­ப­தாக நேற்று அங்கு உள்ள தள­பதி ஒரு­வர் பேட்­டி­யில் கூறி­னார்.

அந்த ஆலைக்­குள்­தான் ஆயி­ரக்­க­ணக்­கான படை­வீ­ரர்­களும் குடி­மக்­களும் பாது­காப்­பாக இருந்து வரு­கி­றார்­கள் என்று உக்­ரே­னிய அதி­ப­ரின் ஆலோ­ச­க­ரான மைகி­யாலோ போடோ­லி­யாக் கூறி­னார்.

இவ்­வே­ளை­யில், மரி­ய­போல் நக­ரின் சூழ்­நிலை அறிந்து தான் மிகவும் கவலை அடைந்­துள்­ள­தாக அனைத்­து­லக செஞ்­சி­லு­வைச் சங்­கம் நேற்றுத் தெரி­வித்­தது.

ரஷ்யா தொடர்ந்து கடு­மை­யான தாக்­கு­தலை நடத்தி வரு­வ­தால், அந்த நக­ரில் காய­ம­டைந்து கிடக்கும் நூற்­றுக்­க­ணக்­கான மக்­களை எட்ட முடி­ய­வில்லை என்று அது கூறி­யது.