காவல்துறை கூடுதல் உதவி, ஆதரவு

காவல்துறை கூடுதல் உதவி, ஆதரவு

3 mins read

பாலியல் குற்றம், குடும்ப வன்முறையால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரைப் பாதுகாக்க நடவடிக்கை

பாலி­யல் குற்­றங்­கள் மற்­றும் குடும்ப வன்­மு­றை­யால் எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­வர்­க­ளை­யும் உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் எண்­ணம் கொண்­ட­வர்­க­ளை­யும் பாது­காக்க காவல்­துறை அதிக நட­வ­டிக்­கை­கள் எடுக்­கும்.

பாலி­யல் குற்­றங்­கள் மற்­றும் குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கையாள்­வ­தில் முழு­மை­யான, பாதிக்­கப்­பட்டோரை மைய­மா­கக் கொண்ட அணுகு­முறை­யும் அதில் அடங்­கும்.

'இத­ய­பூர்­வ­மான காவல் பணி­யும் நமது பங்­கா­ளி­க­ளு­டன் சேர்ந்து உயிர்­க­ளி­டத்­தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தும்' எனும் கருப்­பொ­ரு­ளு­டன் கூடிய காவல்­துறை பணித்­திட்­டக் கருத்­த­ரங்கு நேற்று இடம்­பெற்­றது.

குற்­றங்­க­ளைத் தடுப்­ப­தும் கண்­ட­றி­வ­தும் தனது குறிக்­கோள் என்­ற­போ­தும், குற்றவியல் நடத்­தை­களைத் தூண்­டும் கார­ணி­கள் பன்­மு­கத்­தன்மை கொண்­டவை என்­ப­தை­யும் சட்ட அம­லாக்­கத்­தை­யும் தாண்டி தலை­யீடு தேவை என்­ப­தை­யும் அறிந்­துள்­ள­தாக ஓர் அறிக்கை வழி­யா­கக் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கத்­தின் முன்­னரே பதிவு­செய்­யப்­பட்ட உரை கருத்­த­ரங்­கின்­போது ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

பாலி­யல் குற்­றங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர் சண்­மு­கம், குடும்ப வன்­மு­றை­யைச் சமா­ளிக்­க­வும் காவல்­துறை அதிக நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என்­று சொன்­னார்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு விசா­ரித்த குடும்ப வன்­மு­றைப் புகார்­க­ளின் எண்­ணிக்கை 13% கூடி­யது. அதாவது, 2019ல் 1,310ஆக இருந்த அப்புகார்­க­ளின் எண்­ணிக்கை, 2020ல் 1,480ஆக உயர்ந்­தது.

எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­பு உள்­ளோ­ருக்கு உதவ, சமூக சேவை அமைப்­பு­க­ளு­டன் காவல்­துறை இணைந்து பணி­யாற்றும் என்று திரு சண்­மு­கம் தெரிவித்தார்.

எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­பு உள்­ளோ­ரைப் பாது­காக்க, பங்­கா­ளித்­து­வம், பயிற்சி, வளங்­களை மறு­சீ­ர­மைத்­தல் ஆகிய மூன்று முக்­கிய நட­வ­டிக்­கை­களை காவல்­துறை தொடங்­கும் என்று அமைச்­சர் சண்­மு­கம் குறிப்­பிட்­டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் இருந்து, உயிர்­மாய்ப்பு எண்­ணம் கொண்­ட­வர்­க­ளுக்­குப் பரா­மரிப்­பும் ஆத­ர­வும் வழங்­கும் நோக்­கில், முன்­னோடி முயற்­சி­யாக மன­ந­லக் கழ­கத்­து­டன் இணைந்து காவல்­துறை ஒரு நெருக்­க­டி­கால உத­விக் குழுவை அமைத்­துள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு 400 உயிர்­மாய்ப்­புச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்த நிலை­யில், 2020ல் அந்த எண்­ணிக்கை 13% கூடி, 452ஆகப் பதி­வா­னது.

2012ஆம் ஆண்­டில் இ­ருந்து இதுவே ஆக அதிக எண்­ணிக்கை.

நெருக்­க­டி­கால உத­விக் குழு­விற்கு இது­நாள்­வரை 2,000க்கும் மேற்பட்ட அழைப்­பு­கள் வந்­துள்­ளன. அவர்­களில் பெரும்­பா­லா­னோர் அடுத்­த­கட்ட மதிப்­பீட்­டிற்­காக உட­ன­டி­யாக மன­நலக் கழ­கத்­திற்கு அழைக்­கப்­பட்­டனர்.

அடுத்­த­தாக, பயிற்­சி­யி­லும் காவல்­துறை அதி­கக் கவ­னம் செலுத்­த­வுள்­ளது. பாலி­யல் குற்­றங்கள் மற்றும் குடும்ப வன்­முறை­யால் பாதிக்­கப்­ப­டு­வோர்க்கு அதிக ஆத­ரவு வழங்­கும் வித­மாக 202ஆம் ஆண்­டில் பாலி­யல் குற்­றம் மற்­றும் குடும்ப வன்­மு­றைத் தள­பத்­தி­யம் அமைக்­கப்­படும். அத்­து­டன், குடும்ப வன்­மு­றை­யைக் கையாள்­வ­தற்­கென்றே ஒரு தனிக் குழு­வும் ஏற்­ப­டுத்­தப்­படும்.

"குடும்ப வன்­மு­றைக்­கான அறி­கு­றி­களை உண­ர­வும் பாதிக்­கப்­படு­வோர்க்­குச் சிறந்த முறை­யில் உத­வ­வும் காவல்­துறை அதி­கா­ரி­கள் 'குடும்ப வன்­முறை உணர்­தி­றன் பயிற்சி' பெறு­வர். அத்­து­டன், பாலி­யல் குற்­றத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களைக் கண்­ணி­ய­மா­க­வும் மரி­யா­தை­யு­ட­னும் நடத்த காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­படும்," என்று திரு சண்­மு­கம் தெரி­வித்­தார்.

வளங்­களை மறு­சீ­ர­மைப்­ப­தன்­மூ­லம், காவல்­து­றை­யில் புகார் அளித்தபின், பாலி­யல் குற்­றங்­களால் பாதிக்­கப்­பட்­டோர் தட­ய­வி­யல் மருத்­து­வப் பரி­சோ­த­னை­கள், நேர்­கா­ணல்­க­ளின்­போது ரக­சி­ய­மா­க­வும் சௌக­ரி­ய­மா­க­வும் இருப்­ப­தாக உணர்­வர். அவர்­களுக்கென தனிப் பரா­ம­ரிப்­பி­டத்­தைக் கொண்­டி­ருக்­கும் வகை­யில் காவல்­துறை கேன்­டன்­மென்ட் வளா­கத்­தில் உள்ள 'ஒன்­சேஃப்' நிலை­யம் மறு­வ­டி­வ­மைக்­கப்­பட்டு வரு­கிறது.