உணவு, மின்சாரம், எரிவாயுக் கட்டணம் வரும் ஆண்டிலும் அதிகரிக்கும் நிலை

உணவு, மின்சாரம், எரிவாயுக் கட்டணம் வரும் ஆண்டிலும் அதிகரிக்கும் நிலை

2 mins read
94bbfc49-03fe-4f3a-8cb8-d1c076781264
உலகளவில் உணவுப் பொருள்கள் விலை கூடி உள்ளது. இதனால் உள்ளூரில் உணவுப் பொருள்களின் விலை கூடும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரில் உணவு, மின்­சா­ரம், எரி­வாயு செலவு இந்த ஆண்­டுக்கு அப்­பா­லும் தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் பொருளியல் மறு­ப­ரி­சீ­லனை ஒன்­றின் மூலம் இது தெரி­ய­வ­ரு­கிறது. உலக அள­வில் எரி­வாயுச் செலவு அதி­க­ரித்து இருக்­கிறது.

இதன் கார­ண­மாக எண்­ணெய் தொடர்­பான பொருள்­க­ளின் விலை­கூடி உள்ளது என்­பதை ஆணை­யம் சுட்­டிக்­காட்­டி­யது.

மொத்­த­மா­கப் பார்க்­கை­யில் எரி­பொ­ருள், மின்­சா­ரம், எரி­வாயு, சமைக்­கப்­ப­டாத உண­வுப்­பொ­ருள்­கள் ஆகி­ய­வற்­றின் விலை­கள் உள்ளூ­ரில் ஏற்­றம் காணும்.

இதன்­ வி­ளை­வாக போக்­கு­வரத்து, உணவு சேவை­கள் ஆகி­ய­வற்­றுக்­கான செலவும் கூடும் என்று ஆணை­யம் தெரி­வித்துள்­ளது.

ரஷ்யா-உக்­ரேன் போர் கார­ண­மாக உலக உண­வுப்­பொ­ருள்­க­ளின் விலை­யில் கணி­ச­மான அள­வுக்கு தாக்­கம் ஏற்­பட்டுள்ளது. அந்த இரண்டு நாடு­களும் உணவு தானி­யங்­க­ளை­யும் சமை­யல் எண்­ணெய்­யை­யும் உல­க­ள­வில் அதி­க­மாக ஏற்­று­மதி செய்­யும் நாடு­கள் என்­பதை ஆணையம் சுட்­டி­யது.

சுத்­தி­க­ரிக்­கப்­ப­டாத எண்­ணெய், இயற்கை எரி­வாயு ஆகி­ய­வற்­றின் விலை இந்த ஆண்­டில் இது­வ­ரை­யில் முறையே, 33% மற்­றும் 80% கூடி இருக்­கிறது. கோதுமை விலை 43% அதி­க­ரித்து இருக்­கிறது.

இத­னி­டையே, சீனா போன்ற இதர பெரிய உணவு தானிய உற்­பத்தி நாடு­களில் பரு­வ­நி­லை­யும் சரி­யில்லை. இவற்­றின் கார­ண­மாக அடுத்த ஆண்­டி­லும் உணவு தானி­யங்­கள் விநி­யோ­கத்­தில் பற்­றாக்­குறை இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்தச் சூழலில் விலங்குகளுக்கு கிடைக்கக்கூடிய உணவுப்பொருள் களின் விலை கூடும். இதன் விளை வாக இறைச்சி, பால் விலை உலகளவில் அதிகரிக்கும்.

உலக உண­வுப்­பொ­ருள்­கள் விலை அதி­க­ரித்து இருப்­ப­தால் அவற்றை இறக்­கு­மதி செய்ய சிங்­கப்­பூ­ருக்கு ஆகும் செல­வும் கூடும். இத­னால் இங்கு உண­வுப்­பொ­ருள்­களின் விலை அதி­க­ரிக்­கும்.

இருந்­தா­லும் கொஞ்ச காலத்­திற்கு இந்த அதி­க­ரிப்பு படிப்­ப­டி­யாக இருக்­கும் என்­றும் உலக நில­வ­ரத்­தை­விட இங்கு இது மித­மா­ன­தாக இருக்­கும் என்­றும் ஆணை­யம் குறிப்­பிட்டுள்ளது.

மூலா­தார பண­வீக்­கம் பத்து ஆண்டு­களில் இல்­லாத அள­வுக்கு மார்ச் மாதம் அதி­க­மாக இருந்­தது. இந்த ஆண்­டின் முதல் மூன்று மாதங்­களில் ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் அதி­க­மா­கக் கூடி­யது.

மூலா­தார பண­வீக்­கத்­தில் ஏற்­பட்ட அதி­க­ரிப்­பில் மூன்­றில் ஒரு பங்­கிற்கு மின்­சா­ரம், எரி­வாயு, உணவுப்­ பொருள்களின் விலை அதி­க­ரிப்பே கார­ணம் என்­று ஆணை­யம் குறிப்பிட்டுள்ளது.