ஆணையம்: பொருளியல் வாய்ப்புகளை உக்ரேன் போர் சேதப்படுத்தியதே தவிர தடம்புரளச் செய்யவில்லை வளர்ச்சி கணித்தபடியே 3-5%

ஆணையம்: பொருளியல் வாய்ப்புகளை உக்ரேன் போர் சேதப்படுத்தியதே தவிர தடம்புரளச் செய்யவில்லை வளர்ச்சி கணித்தபடியே 3-5%

2 mins read

உக்­ரேன் போர் கார­ண­மாக சிங்கப்­பூ­ரின் வளர்ச்சி வாய்ப்­பு­கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. என்­றாலும் அவை தடம்­பு­ரண்­டு­வி­ட­வில்லை என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் தெரி­வித்துள்ளது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை சிங்­கப்­பூர் அதி­க­ள­வில் அகற்றி இருப்­ப­தால் உள்­ளூர் பொரு­ளி­யல் சூடு­பி­டிக்­கும் என்­ப­தை­யும் அது சுட்­டிக்­காட்டி உள்­ளது.

இவற்றை எல்­லாம் வைத்துப் பார்க்­கை­யில் இந்த ஆண்­டின் சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் வளர்ச்சி 3% முதல் 5% வரைப்­பட்­ட­தாக இருக்­கும் என்று தான் கணித்­திருப்­ப­தில் இப்­போ­தைக்கு மாற்­ற­மில்லை என்று ஆணை­யம் தெரி­வித்து இருக்­கிறது.

உக்­ரேன் போர் கார­ண­மாக மேற்­கொண்­டும் இடை­யூ­று­கள் ஏற்­ப­டா­மல் இருந்­தால் அல்லது கொவிட்-19 தொற்று மோச­மான அள­வுக்குத் தலை­யெ­டுக்­கா­மல் இருந்­தால் இந்த அள­வுக்கு வளர்ச்சி சாத்­தி­யம் என்று ஆணையம் குறிப்­பிட்டு உள்­ளது.

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் 2021ல் 7.6% வளர்ந்தது. இந்த ஆண்­டின் வளர்ச்சி மித­மா­ன­தாக இருக்­கும் என்று கணிக்­கப்­பட்டுள்ளது.

இருந்­தா­லும்கூட இந்த ஆண்டு வளர்ச்சி தொடர்ந்­தாற்­போல் இரண்­டாண்­டு­களில் இடம்­பெ­றக்­கூ­டிய ஏறு­முக நில­வ­ர­மாகவே இருக்­கும் என்று ஆணை­யத்­தின் பொருளியல் மறு­ப­ரி­சீலனை அறிக்கை தெரி­விக்­கிறது.

ஆண்டுக்கு இரண்டு முறை பரந்த அளவில் பொருளியலை மறுபரிசீலனை செய்து ஆணையம் அறிக்கையை வெளியிடும்.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­எடுத்து இருப்­ப­தன் கார­ண­மாக உணவு தானி­யங்­கள், எண்­ணெய், எரி­வாயு, தொழில்­துறை உலோ­கங்­கள் போன்ற பொருள்­க­ளின் விநி­யோ­கம் தடை­பட்டுள்ளது.

இவற்­றின் விளை­வாக உல­கம் முழு­வ­தும் விலை­வாசி கூடி இருக்­கிறது என்­பதை ஆணை­யம் அறிக்கையில் குறிப்­பிட்­டது.

ரஷ்யா, உக்­ரேன் போர் கார­ண­மாக பொருள் சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்­பில் ஏற்­பட்ட இடை­யூறு­களால் இந்த ஆண்­டின் எஞ்­சிய பகு­திக்­கான வளர்ச்சி வாய்ப்­பு­களில் நிச்­ச­ய­மில்­லாத ஒரு சூழல் நில­வு­கிறது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக உலக விநி­யோ­கக் கட்­ட­மைப்­பில் ஏற்­பட்ட கோளா­று­கள் முற்றி­லும் சரி­செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவே உக்­ரேன்-ரஷ்யா பிரச்சி­னை­க­ளின் பாதிப்­பு­கள் இடம்­பெ­றத் தொடங்­கி­விட்­டன.

விநி­யோகக் கோளா­று­கள் கார­ண­மாக ஏற்­பட்டு இருக்­கும் விலை­யேற்­றம் உண்­மை­யான வரு­மா­னத்தைப் பாதித்­து­விட்­டது.

அத­னால் சரக்­கு­க­ளுக்­கும் சேவை­க­ளுக்­கு­மான தேவை­களுக்கு அழுத்­தம் ஏற்­படும். முத­லீட்டுப் புழக்­க­மும் பாதிக்­கப்­படும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் 10 ஆண்டு காலத்­திற்கு இல்­லாத அள­வுக்கு கடந்த மார்ச் மாதம் பண­வீக்­கம் அதி­கரித்­தது. இதன் கார­ண­மாக இந்த ஆணை­யம் இந்த மாதத் தொடக்­கத்­தில் தன்­னு­டைய நாண­யக் கொள்­கையை இறுக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது.

இருந்­தா­லும்­கூட பொரு­ளி­யல் வளர்ச்சி 3% முதல் 5% வரை இருக்­கும் என்று ஆணை­யம் நம்­பு­கிறது. இந்த அள­வுக்கு வளர்ச்சி இருக்­கும் என்று வர்த்­தக, தொழில் அமைச்சு கணித்து உள்­ளது.

மொத்­த­மா­கப் பார்க்­கை­யில், சிங்­கப்­பூ­ரின் முக்­கிய வர்த்­தக பங்­காளி நாடு­களில் இடம்­பெ­றக்­கூ­டிய பொரு­ளி­யல் வளர்ச்சி தடம் புரண்­டு­வி­டாது என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. முன்­னே­றிய நாடு­களில் பொருள்­க­ளுக்­கும் சேவை­க­ளுக்­கும் தேவை தொடர்ந்து வலு­வாக இருந்து வரும் என்­றும் ஆணை­யம் தெரிவித்து உள்­ளது.