ரஷ்யா எச்சரிக்கை: எவரும் தலையிடக்கூடாது

ரஷ்யா எச்சரிக்கை: எவரும் தலையிடக்கூடாது

2 mins read
dd05fc32-fb43-43b4-8c70-0d1b77917967
ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் நேற்று உக்ரேன் தலைநகருக்கு அருகே உள்ள ஒரு நகருக்குச் சென்றார். அங்கு பேசிய அவர் ரஷ்ய தாக்கு தல்களைக் குறை கூறினார். படம்: ஏஎஃப்பி -

உக்­ரே­னியப் போரில் எவரா­வது தலையிட்­டால் ரஷ்­யா­வின் தாக்கு­தல்­கள் மின்­னல் வேகத்­தில் அதி­க­ரிக்­கும் என்று அந்த நாட்டின் அதி­பர் புட்டின் எச்­ச­ரித்­தார். உக்­ரே­னுக்கு ஆயு­தங்­களை அனுப்­பு­வதை அமெ­ரிக்கா நிறுத்த வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

பெரிய அள­வில் மேற்­கத்­திய நாடு­கள் ஆயு­தங்­களை அனுப்பு­வதால் உக்­ரேன் பிரச்­சினை விஸ்­வ­ரூ­பம் எடுப்­ப­தாக அதிபர் கூறி­னார். பிரிட்டனையும் அவர் கண்டித்தார்.

செயின்ட் பீட்­டர்ஸ்­பர்க்­கில் ரஷ்ய நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­டம் பேசிய புட்­டின், ரஷ்­யாவை துண்டு துண்­டா­கச் சித­ற­டிக்க மேற்­கத்­திய நாடு­கள் விரும்­பு­வ­தா­கக் கூறி­னார். ரஷ்­யா­வு­டன் உக்­ரே­னை மோதச் செய்து அந்த நாடு­கள் வேடிக்கை பார்ப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"உக்­ரேன் பிரச்­சி­னை­களில் வெளி­யார் எவரா­வது தலை­யிட விரும்­பி­னால், அப்­படி செய்து அவர்­கள் ரஷ்­யா­வுக்கு மிரட்­டல் விடுத்­தால் அது ஏற்­றுக்­கொள்ளத்தக்­க­தல்ல.

"பதி­லடி மின்­னல் வேகத்­தில் இடம்­பெ­றும் என்­பதை அத்­த­கை­யோர் புரிந்­து­கொள்ள வேண்டும்," என்று புட்­டின் தெரி­வித்­தார். காணொளி மூலம் அதி­பர் ஆற்றிய உரையை ரஷ்ய ஊடகம் வெளி­யிட்­டது.

"எங்­க­ளி­டம் எல்லா வளங்­களும் இருக்­கின்­றன. மிரட்­ட­வில்லை. தேவைப்­படும் பட்­சத்­தில் அவற்றை நாங்­கள் பயன்­ப­டுத்­து­வோம். இதை ஒவ்­வொ­ரு­வ­ரும் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்­பதே எங்­கள் விருப்­பம்," என்­றாரவர்.

உக்­ரேனை ரஷ்யா பிப்­ர­வரி 23ஆம் தேதி ஆக்­கி­ர­மிக்­கத் தொடங்­கி­யது. உக்­ரே­னில் பல நகர்­களும் ஊர்­களும் குப்­பை­கூ­ள­மா­கி­விட்­டன. 5 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மக்­கள் வெளி­நா­டு­களுக்கு ஓடி­விட்­டார்­கள்.

உக்­ரே­னில் படை­யெடுத்த ரஷ்யா மீது மேற்­கத்­திய நாடு­களும் ஆசிய நாடு­களும் பொரு­ளி­யல் தடை­களை விதித்து இருக்­கின்­றன. மேற்கு நாடு­கள் உக்­ரே­னுக்கு ஆயு­தங்­களை அனுப்பி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், உக்­ரே­னின் கிழக்­குப் பகு­தி­யில் கடும் தாக்­கு­தலை ரஷ்யா மேற்­கொண்டு வரு­வ­தாக நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன.

பல்­கேரியா, போலந்து நாடு­கள் பணம் தர­வில்லை என்­ப­தால் அந்த நாடு­க­ளுக்கு எரி­வாயு விநி­யோ­கத்தை நிறுத்­தி­விட்­ட­தாக ரஷ்யா அறி­வித்­தது.

இருந்­தா­லும் அதி­பர் புட்­டின் கோரி­ய­படி ஐரோப்­பாவை சேர்ந்த நான்கு எரி­வாயு கொள்­மு­தல் நிறு­வனங்­கள் ஏற்­கெ­னவே ரஷ்ய நாண­யத்­தில் பணத்தைக் கொடுத்­து­விட்­ட­தாக 'காஸ்­பு­ரோம் பிஜே­எஸ்சி' என்ற ரஷ்­யா­வின் மாபெ­ரும் எரி­வாயு நிறு­வ­னத்­திற்கு அணுக்­க­மான ஒரு­வர் கூறி­னார்.

இந்­நி­லை­யில், ஐரோப்­பிய நாடு­களுக்கு எரிவாயு விநி­யோ­கத்தைத் துண்டித்­து­விடுவதாக ரஷ்யா பூச்சாண்டி காட்­டு­கிறது என்று பிரஸ்சல்ஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகள் குறை­கூ­றின. ஐரோப்பா மாற்று வழி­களைக் காண வேண்டும் என்­று உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி வலி­யு­றுத்­தி­னார்.