நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்தியாவில் மின்வெட்டு

நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்தியாவில் மின்வெட்டு

2 mins read
152f6db6-73dc-40a9-8e98-18c1eb288ade
மின்வெட்டை எதிர்த்து இந்தியாவின் பஞ்சாப் மாநில மின்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங் வீட்டிற்கு முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். படம்: ஏஎஃப்பி -

இந்­தி­யாவை வாட்­டி­­வ­ரும் வெயி­லால் மின்­சா­ரத் தேவை அதி­க­ரித்­துள்­ளது. இந்­நி­லை­யில், நிலக்­கரி பற்­றாக்­கு­றை­யால் அனல்­மின் நிலை­யங்­களில் மின்­னுற்­பத்தி தடை­பட்டு, டெல்லி, பஞ்­சாப், உத்­தரப் பிர­தே­சம், ஜார்க்­கண்ட் உள்­ளிட்ட பல மாநி­லங்­கள் மின்­வெட்­டால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

நிலை­மையை மதிப்­பீடு செய்ய அவ­ச­ரக் கூட்­டத்­தைக் கூட்­டிய டெல்லி மின்துறை அமைச்­சர் சத்­யேந்­தர் ஜெயின், தலை­ந­க­ருக்கு மின்­வி­நி­யோ­கம் செய்­யும் அனல்­மின் நிலை­யங்­க­ளி­டம் போதிய நிலக்­கரி கையி­ருப்பு இருப்­பதை உறு­தி­செய்­யு­மாறு மத்­திய அரசுக்குக் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

"இரு முக்­கிய மின்­நி­லை­யங்­களில் இருந்து மின்­வி­நி­யோ­கம் தடை­பட்­டுள்­ள­தால் மெட்ரோ ரயில், அரசு மருத்­து­வ­ம­னை­கள் உள்­ளிட்ட முக்கிய சேவைகளுக்கு நாள் முழுதும் மின்­சா­ரம் வழங்க முடி­யா­மல் போக­லாம்," என்று டெல்லி அர­சு எச்சரித்துள்ளது.

வெயி­லின் உக்­கி­ரம் அதி­க­மாக இருப்­ப­தால் பஞ்­சாப் மாநி­லத்­தில் கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­தைக் காட்­டி­லும் இப்­போது மின்­தேவை 40% கூடி­யுள்­ள­தாக அம்­மா­நி­லத்­தின் மின்துறை அமைச்­சர் ஹர்­ப­ஜன் சிங் குறிப்­பிட்­டுள்­ளார். மற்ற மாநிலங்­களும் இதே பிரச்சினையை எதிர்­கொண்டு வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் கடந்த 38 ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு நடப்பு ஏப்­ர­லில் மின்­தேவை அதி­க­ரித்­துள்­ளது. அங்கு இம்­மாத முற்­பா­தி­யில் 1.4% மின்­பற்­றாக்­குறை நில­வி­யது. இவ்­வி­கி­தம் ஆந்­திரா, மகா­ராஷ்­டிரா, குஜ­ராத், பஞ்­சாப், ஜார்க்­கண்ட், ஹரி­யானா ஆகிய மாநி­லங்­களில் 3% முதல் 8.7% வரை இருந்­தது.

பாலை­வன மாநி­ல­மான ராஜஸ்­தா­னில் நக­ர்ப்­பு­றங்­களில் ஒரு மணி நேர­மும் கிரா­மப்­பு­றங்­களில் மூன்று மணி நேர­மும் மின்­சார வி­நி­யோ­கம் துண்­டிக்­கப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, நாட்­டி­லுள்ள அனல்­மின் நிலை­யங்­க­ளுக்கு நிலக்­க­ரியை விரைந்து கொண்டு செல்ல ஏது­வாக கடந்த சில வாரங்­க­ளாக 16 விரைவு, பய­ணி­கள் ரயில்­களை இந்­திய ரயில்வே ரத்து செய்­துள்­ளது. அவ்­வ­கை­யில், அடுத்த மாதம் 24ஆம் தேதி­வரை மொத்­தம் 670 பய­ணி­கள் ரயில் சேவை­கள் ரத்து செய்­யப்­படு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் நிலக்­க­ரி­யைப் பயன்­ப­டுத்­தியே 70% மின்­சா­ரம் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிறது.