கல்விக்காக ஓடி நிதி திரட்டிய அமைச்சர்

கல்விக்காக ஓடி நிதி திரட்டிய அமைச்சர்

2 mins read
2592611d-d254-463e-924e-bd166666dd0c
'தாறுமாறு ரன்னர்ஸ்' குழுவின் கல்வி நிதித்திரட்டு ஓட்டத்தில் அமைச்சர் சண்முகம் (இடமிருந்து 2வது). படம்: யுவரராஜா ராமகிருஷ்ணன் -

கி. ஜனார்த்­த­னன்

சிங்­கப்­பூர் இந்­திய மாண­வர்­க­ளின் கல்­விக்­கு நிதி திரட்டுவதற்காக ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஓட்ட நிகழ்ச்­சி­யில் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் கலந்­து­கொண்டு ஊக்குவித்தார்.

கேளிக்கை ஓட்­டக் குழு­வான 'தாறு­மாறு ரன்­னர்ஸ்' ஏற்­பாடு செய்த ஓட்­டத்­தின்­மூ­லம் நிதி திரட்­டும் நிகழ்ச்­சி­யில் அமைச்­சர் சண்­மு­க­மும் செம்­ப­வாங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்­ரம் நாய­ரும் நேற்று கலந்­து­கொண்டு 1.85 கி.மீ. தொலைவு ஓடி­னர்.

நேற்று முன்­தி­னம் இரவு 10 மணிக்­குத் தொடங்­கிய இந்த ஓட்ட நிகழ்வு, 26 மணி நேரத்­திற்­குப் பின் நேற்று இரவு 10 மணிக்கு நிறை­வ­டைந்­தது. ஒரு மணி நேரத்­திற்­குப் பத்­துப் பேர், 1.65 கி.மீ. தொலைவு என்ற கணக்­கில் இந்த ஓட்­டம் இடம்­பெற்­றது.

"ஆரோக்­கி­ய­மாக மூப்­ப­டை­த­லுக்கு நல்ல எடுத்­துக்­காட்­டா­கத் திக­ழும் தாறு­மாறு குழு­வி­ன­ருக்கு ஆத­ரவு தரவே இங்கு வந்­துள்­ளேன்," என்­றார் திரு சண்­மு­கம்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வாழ்­நாள் அதி­க­ரித்து வந்­தா­லும் 60 வயது முதல் பல­ரும் சிறு­நீ­ர­கச் செய­லி­ழப்பு, நினை­வாற்­றல் இழப்பு போன்ற பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வ­தா­க அவர் குறிப்பிட்டார்.

"இத்­த­கைய நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்டு அடிக்­கடி மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­வது நல்ல வாழ்க்­கை­முறை அல்ல," என்று திரு சண்­மு­கம் சொன்­னார்.

இந்­நி­கழ்­வு­மூ­லம் $30,000 திரட்ட நோக்­கம் கொண்­டி­ருந்த நிலை­யில், $60,000 திரட்­டப்­பட்­டது. இத்­தொகை சிங்­கப்­பூர் இந்­தி­யர் கல்வி அறக்­கட்­ட­ளைக்கு வழங்­கப்­படும்.

தேவை­யுள்ள மாண­வர்­க­ளுக்கு உப­கா­ரச்­சம்­ப­ளங்­களும் கடன் உத­வி­யும் அளித்து, சிங்­கப்­பூர் இந்­தி­யர் கல்வி அறக்­கட்­டளை உதவி வரு­கிறது.

"இதுபோன்ற முயற்சி­கள் சமு­தா­யத்தை விரைந்து முன்­னேற்­றும்," என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.

"அமைச்­சர் சண்­மு­கம் உடற்­ப­யிற்­சி­யில் கவ­னம் செலுத்தி வரு­வது பல­ருக்­கும் தெரி­யும். அவர் இந்த நிகழ்ச்சி­யில் கலந்­து­கொள்­வ­தால் ஆரோக்­கிய வாழ்க்­கை­முறை எவ்­வ­ளவு முக்­கி­யம் என்­பதை மக்­க­ளுக்கு எடுத்­துச்சொல்ல ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்­துள்­ளது," என்றார் 'தாறு­மாறு ரன்­னர்ஸ்' குழு­வின் நிறு­வ­னர் ரமேஷ் தர்­ம­ராஜா, 45.

இந்­தி­யச் சமூ­கத்­தி­ன­ரி­டையே மார­டைப்பு, நீரி­ழிவு போன்ற பாதிப்­பு­கள் இருக்­கும் சூழ­லில், இத்­த­கைய குழுக்­கள் காலத்­தின் தேவைக்­குத் தக்க பதி­லைத் தரு­வ­தாக திரு விக்­ரம் நாயர் தமிழ் முர­சி­டம் சொன்னார்.

முன்­னர் தனி­யாக ஓடி­ய­தா­க­வும் இப்­போது சக நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து ஓட முடி­வ­தா­க­வும் கூறி­னார் கடந்த ஒன்­றரை ஆண்­டாக 'தாறு­மாறு ரன்­னர்ஸ்' குழு­வில் இடம்­பெற்­றுள்ள சட்ட நிறு­வன அதி­காரி மோகன் சோமு, 56.