தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதல் விரக்தி: மூன்று மாடி குடியிருப்பைக் கொளுத்திவிட்டு ஏழு பேரைக் கொன்ற காதலன்; பலர் காயம், ஏராள சேதம்

2 mins read
9a7c7710-9b77-4a15-a111-c7585b6d3fa9
எரிந்து நாசமான மூன்று மாடிக் குடியிருப்புக் கட்டடம். (மேல் வரிசை இடமிருந்து) அகான்ஷ்கா, ஆஷிஷ் ரத்தோர், தேவேந்திர சால்வே, (கீழ் வரிசை இடமிருந்து) கௌரவ் பவார், ஈஷ்வர் சிங், நீத்து, சமீர் சிங் ஆகிய இந்த ஏழு பேரும் மாண்டவர்கள். படங்கள்: இந்திய ஊடகங்கள் -
multi-img1 of 3

இந்­தி­யா­வின் மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­தில் காதல் விரக்­தி­யில் ஓர் ஆட­வர் மூன்று மாடி குடியிருப்பைக் கொளுத்­தி­விட்­டார். அந்தக் கட்டடத்தில் இருந்த வீடு­கள் நாச­மா­ன­தில் ஏழு பேர் மாண்­டு­விட்­ட­னர்.

ஒன்­பது பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள் என்று காவல்­துறை தெரி­வித்­தது. இதன் தொடர்­பில் சஞ்சய் தீக்­‌ஷித், 27, என்­ப­வர் கைதானார்.

அவர் காவல்துறையிடம் இருந்து தப்பி ஓடி­ய­போது இந்­தூர் நக­ரின் லோக­மண்டி என்ற பகு­தி­யில் தரை­யில் வழுக்கி விழுந்து காய­ ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் அவர் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாகவும் இந்­தூர் நகர காவல்­துறை தெரி­வித்­தது.

அந்­தச் சந்­தே­கப்­பேர்­வழி மீது பல குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அது கூறி­யது. இந்­தூர் நக­ரில் விஜய் நகர் என்ற பகு­தி­யில் உள்ள மூன்று மாடி கட்­ட­டத்­தில் ஒரு வீட்­டில் குடி­யி­ருந்த பெண்ணை அந்த ஆட­வர் காத­லித்­தார்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் உள்ள ஜான்சி என்ற நக­ரைச் சேர்ந்த தீக்­‌ஷித்தை அந்தப் பெண் நிரா­க­ரித்­து­விட்­டார்.

அவ­ருக்­கும் அந்­தப் பெண்­ணுக்­கும் இடை­யில் ரூ.10,000 தொடர்­பில் பிரச்­சினை ஏற்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதை­ய­டுத்து அந்­தப் பெண்­ணுக்­கும் வேறு ஒரு­வ­ருக்­கும் திரு­ம­ணம் நிச்­ச­ய­மாகி இருந்­தது.

இதை அறிந்த தீக்­‌ஷித் கடும் கோப­மடைந்து அந்தக் கட்டடத்தின் கீழ் பகுதி­யில் மின்இணைப்புப் பெட்­டிக்கு அருகே நிறுத்­தப்­பட்டு இருந்த அந்­தப் பெண்­ணின் மோட்­டார்சைக்­கிளைக் கொளுத்­தி­விட்­டார்.

அங்­கி­ருந்த பல வாக­னங்­களும் தீப்­பிடித்து எரிந்து கடை­சி­யில் முழுக் கட்­டடமே நாச­மா­கி­விட்­ட­தா­க­வும் பல வீடு­களில் குடி­ இருந்­த­வர்­கள் வெளி­யேற முடி­யா­மல் போன­தால் ஏழு பேர் கருகி மாண்டு­விட்­ட­தா­க­வும் இதர ஒன்பது பேர் மருத்து­வ­ ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறினர்.

குற்­ற­வா­ளியைப் பிரத்­தி­யே­கப் படச்­சா­த­னம் மூலம் காவல்­துறை அதி­கா­ரி­கள் அடை­யா­ளம் கண்­ட­னர்.

அதே கட்டடத்தில் ஒரு வீட்­டில் ஆறு மாத காலம் தீக்­‌ஷித் குடி­யி­ருந்து பிறகு வெளி­யா­கி­விட்­டார். காவல்­து­றை­யி­டம் இருந்து தப்­பியபோது காயமடைந்த சஞ்சய் சிகிச்சை பெற்று வருகிறார்.