வினோத வழக்கு: பேரப்பிள்ளை தராவிட்டால் ரூ. 5 கோடி இழப்பீடு

வினோத வழக்கு: பேரப்பிள்ளை தராவிட்டால் ரூ. 5 கோடி இழப்பீடு

1 mins read

திரு­ம­ண­மாகி ஆறு ஆண்­டு­கள் ஆகி­விட்ட நிலை­யில் தங்­க­­ளு­டைய மகன் இன்­னும் குழந்தை பெற்­றுக்­கொள்­ள­வில்லை என்­ப­தற்­காக உத்­த­ராகண்ட் மாநி­லத்­தைச் சேர்ந்த தம்­ப­தி­யர் திரு சஞ்­சீவ் மற்­றும் திரு­வாட்டி சாதனா பிர­சாத், அந்த மகன் மீதும் மரு­ம­கள் மீதும் இழப்­பீடு கோரி வழக்கு தொடுத்­துள்­ள­னர்.

மகன் வெளி­நாடு சென்று படிக்­க­வும் அமெ­ரிக்­கா­வில் விமானி ஆவ­தற்­குப் பயிற்சி எடுக்­க­வும் நிறை­யப் பணம் செலவு செய்­த­தா­க­வும் இப்­போது பொரு­ளா­தார நெருக்­க­டி­யில் தாங்கள் மிக­வும் சிர­மப்­ப­டு­வ­தா­க­வும் அந்த மூத்த தம்­பதி கூறி­யுள்­ள­னர்.

அத்­து­டன் வங்­கிக் கடன் பெற்று வீடு ஒன்­றும் கட்­டி­யுள்­ள­னர். ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல், சொகுசு கார், வெளி­நாட்­டில் மகன் மரு­ம­க­ளின் தேனி­லவு என மக­னின் ஆடம்­ப­ரத் திரு­ம­ணத்­திற்­கான செல­வு­க­ளை­யும் அவர்­கள் ஏற்­றி­ருந்­த­னர்.

இத­னால், சேமிப்பே இல்லை என்ற நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­னர் அந்­தத் தம்­ப­தி­யர்.

திரு­ம­ண­மான மகன், குழந்தை பெற்­றுக்­கொள்­வ­தைப் பற்­றியோ பெற்­றோ­ரைப் பற்­றியோ கவ­லைப்­ப­ட­வில்லை.

"ஒரு பேரப்­பிள்ளை இருந்­தால் எங்­க­ளுக்கு ஆறு­த­லாக இருக்­கும்," என்று கூறு­கின்­ற­னர்.

எனவே, இன்­னும் ஒரு வரு­டத்­தில் பேரக்­கு­ழந்தை பெற்­றுத் தரா­விட்­டால், மகன் 2.5 கோடி, மரு­ம­கள் 2.5 கோடி­யாக மொத்­தம் ரூ.5 கோடி (S$900,000) இழப்­பீடு தர­வேண்­டும் என்று அந்­தத் தம்­பதி தங்­க­ளின் மனு­வில் கோரி­யுள்­ள­னர்.