மயங்கி விழும்வரை மூச்சடைக்கும் சவால்: பத்து வயது சிறுமி மரணம்; டிக்டாக் மீது வழக்கு

மயங்கி விழும்வரை மூச்சடைக்கும் சவால்: பத்து வயது சிறுமி மரணம்; டிக்டாக் மீது வழக்கு

2 mins read
74aabd58-4d6b-46f6-8bff-3a3f80d9b3e1
நைலா ஆண்டர்சன் என்ற இந்த 10 வயது சிறுமிக்கு மருத்துவ மனையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் ஐந்து நாள்கள் சிகிச்சை அளிக்கப் பட்டது. ஆனால் பலனில்லை படம்: தவைனா ஆண்டர்சன்/ஃபேஸ்புக் -

அமெ­ரிக்­கா­வில் இணைய சவால் விளை­யாட்டு ஒன்­றில் பங்­கெ­டுத்த நைலா ஆண்­டர்­சன் என்ற 10 வயது சிறுமி மர­ண­ம­டைந்­து விட்டதை அடுத்து 'டிக்­டாக்' செயலி மீது வழக்குத் தொடுக்­கப்­பட்டு இருக்­கிறது.

அந்த விளை­யாட்­டில் கலந்­து­கொள்­ப­வர்­கள் மயக்­கம் வரும் வரை மூச்­சு­வி­டாதபடி கழுத்தை நெரித்துக்கொள்ள வேண்­டும்.

மூன்று மொழி­களில் வல்­லமை பெற்ற அறி­வு­மிக்க சிறு­மி­யான நைலா, அமெ­ரிக்­கா­வில் ஃபிலடெல்­ஃபியா நக­ரில் உள்ள வீட்­டில் படுக்கை அறை­யில் டிசம்­பர் 7ஆம் தேதி சுய­நி­னை­வின்றிக் கிடந்­த­தாக மத்­திய நீதி­மன்­றத்­தில் மே 12ல் தாக்­க­லான புகார் மனு­வில் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

சிறு­மிக்கு மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டும் பல­னில்லை. 'பிளாக்­அ­வுட் சேலஞ்ச்' எனப்­படும் டிக்­டாக் சவால் போட்டி அந்த 10 வயது சிறு­மியைக் கவர்ந்து ஈர்க்­கும் வகை­யில் இடம்­பெற்று இருந்­தது. இத­னால் அந்­தச் சிறுமி இறந்­துவிட்­டார் என்று புகார் தெரி­விக்­கிறது.

இந்த வழக்­கில் டிக்­டாக்­கின் தாய் நிறு­வ­ன­மான 'பைட்­டான்ஸ்' என்ற நிறு­வ­ன­மும் பிர­தி­வா­தி­யாகச் சேர்க்­கப்­பட்டு இருக்­கிறது.

என்­றா­லும் இந்த வழக்கு பற்றி கருத்து எதை­யும் தெரி­விக்க விரும்­ப­வில்லை என்று அந்த நிறு­வனத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

பிளாக்­அ­வுட் சேலஞ்ச் போட்­டி­யில் கலந்­து­கொண்ட இதர நான்கு சிறார்­களும் மர­ண­ம­டைந்து இருப்­பதாக அந்­தப் புகார் அறிக்கை தெரி­விக்­கிறது.

டிக்டாக் சவால் போட்­டி­யில் கலந்து­கொள்­ப­வர்­கள் கால­ணியைக் கட்­டும் கயிறு போன்ற வீட்­டில் உள்ள பொருள்­களைப் பயன்­ப­டுத்தி கழுத்தை இறுக்­கிக் கொள்­கி­றார்­கள்.

தங்­க­ளுக்கு மயக்­கம் வரும் வரை ஒரு சில விநா­டி­க­ளுக்கு அவ்­வாறு செய்­கி­றார்­கள். இந்­தச் சவால் சில நேரங்­களில் மர­ணத்­தில் முடிந்­து­வி­டு­கிறது.

இவ்­வே­ளை­யில், தன்­னு­டைய மக­ளின் மர­ணம் பற்றி செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய தவைனா ஆண்­டர்­சன், இந்­தச் சவால் போட்டி மேலும் பல சிறார்­க­ளைக் கொன்று­விட்­டது என்­பது தனக்கு தெரி­ய­வந்திருப்­ப­தா­கக் கூறி­னார்.

இந்த ஆபத்­தான விளை­யாட்டு கள் முடி­வுக்கு வர­வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.