ஜூன் மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூர் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தால், சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் என்று கருதப்படும் லாரன்ஸ் வோங் துணைப் பிரதமராக பதவி உயர்வு அளிக்கப்படக்கூடும்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான பணிகள் நடைபெற்று வரு
வதாகக் குறிப்பிட்ட திரு லீ, தாம் மேற்கொள்ள இருக்கும் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பின்னர் அதற்கான அறிவிப்பு வெளி
யிடப்படலாம் என்றார்.
வருங்கால ஆசியா தொடர்பான அனைத்துலக மாநாடு மே 26, 27 தேதிகளில் ஜப்பான் தலை
நகர் தோக்கியோவில் நடைபெறஉள்ளது.
நிக்கே வர்த்தக ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்துள்ள மாநாடு, 'பிரிந்திருக்கும் உலகில் மறுவரையறை செய்யப்பட்ட ஆசியான் பங்கு' என்னும் தலைப்பில் அரங்கேறுகிறது. மாநாட்டு நிகழ்வுகள் இணையத்திலும் நேரலையாக இடம்பெற உள்ளன.
பிரதமர் லீ இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்கிறார்.
ஆசியான்-அமெரிக்கா சிறப்பு உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற திரு லீ, நேற்று வாஷிங்டனி
லிருந்து புறப்பட்டார். முன்னதாக, சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அமைச்சரவை நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை அப்போது பிரதமரிடம் செய்தியாளர்கள் வினவினர்.
அதற்குப் பதிலளித்த அவர், "அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் முடிந்த பின்னர், அதாவது ஜூன் மாதத் தொடக்கத்தில் அதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட இயலும் என்று நம்புகிறேன்," என்றார்.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், கடந்த மாதம் சிங்கப்பூரின் நான்காம் தலைமுறை அணியின் தலைவராகப் பெயர் குறிப்பிடப்பட்டார்.
"இதன்மூலம் நாட்டின் அடுத்த பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு திரு வோங்கிற்கு கிடைக்கக்கூடும்.
சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் 2025ஆம் ஆண்டு நடைபெற வேண்டியது. அந்தத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியை திரு வோங் வழிநடத்துவாரா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என திரு லீ கூறியிருந்தார்.

