வடகொரியா: 1.2 மி. பேருக்குத் தொற்று அச்சம்; 50 பேர் பலி

வடகொரியா: 1.2 மி. பேருக்குத் தொற்று அச்சம்; 50 பேர் பலி

2 mins read
a41eb7b7-206e-4e16-b45d-90d71f6871d1
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பியோங்யாங் நகரில் இருக்கும் மருந்துக் கடை ஒன்றைப் பார்வையிட்டார். இந்தப் படம் மே 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

வட­கொ­ரி­யா­வில் கிட்டத்தட்ட 1.2 மில்­லி­யன் மக்­கள் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்டு இரு­க்கி­றார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டு­ள்­ளது.

அவர்­க­ளுக்கு கொரோனா தொற்று இருக்­குமோ என்ற அச்­சம் கிளம்பி இருக்­கிறது.

இது­வ­ரை­ 50 பேர் மாண்­டு­விட்­ட­னர். ஆனால் அவர்­களில் எத்­தனை பேருக்கு கொவிட் தொற்று இருந்­தது என்று தெரி­ய­வில்லை.

வட­கொ­ரி­யா­வின் அர­சாங்க ஊட­கம் இந்­தத் தக­வல்­களை வெளி­யிட்டு இருக்­கிறது.

இவ்­வே­ளை­யில், வட­கொரி­யத் தலை­வர் கிம் ஜோங் உன், நாட்டின் சுகாதார அதி­கா­ரி­களைக் கடு­மை­யா­கச் சாடி­னார். அதோடு பொது மக்களுக்கு மருந்தை விநி­யோ­கிக்­கும்­படி அவர் ராணு­வத்­திற்கு உத்­த­ர­விட்டார்.

வட­கொ­ரி­யா­வில் கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை வச­தி­கள் அவ்­வ­ள­வாக இல்லை. ஆகை­யால் ஒரு சில­ருக்கு மட்­டுமே தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்டுள்­ளது.

போதிய அள­வுக்­குத் தடுப்­பூசி மருந்தும் இல்லை. சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வளங்களும் சரி­யில்லை.

ஆகை­யால், கொரோனா தொற்­றுக்கு அந்த நாடு எளி­தில் ஆளா­கக்­கூ­டிய வாய்ப்­பு­கள் அதி­கம் என்று கூறப்­ப­டு­கிறது.

வட­கொ­ரி­யா­வில் நாட­ளா­விய முடக்­கம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதி­பர் திரு கிம் சென்ற வார முடி­வில் உச்ச ஆட்­சிக் குழுக் கூட்­டத்தை அவ­ச­ர­மா­கக் கூட்டினார். அவர், தேசிய மருந்து வளங்­களில் இருந்து பொது­மக்­க­ளுக்கு மருந்­து­கள் சரி­யாக விநி­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை என்று அதி­கா­ரி­களைக் குறை­கூ­றி­னார்.

மிக­வும் பலம் வாய்ந்த ராணு­வத்­தின் மருத்­து­வப் பிரி­வுக்கு உட­ன­டி­யாக அவர் உத்­த­ரவு பிறப்­பித்­தார்.

பியோங்­யாங் நக­ரில் பொது­மக்­களுக்கு மருந்­து­களை விநி­யோ­கித்து நிலை­மையை உட­ன­டி­யா­கச் சீர்­செய்­யும்­படி ராணு­வத்­துக்குத் திரு கிம் உத்­த­ர­விட்­டார் என்று அர­சாங்க ஊட­கம் தெரி­வித்­தது.

வட­கொ­ரியா தன் நாட்­டில் கொரோனா கிரு­மி ­தொற்றி இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டுள்ளதாக முதன்­மு­த­லாக சென்ற வாரம் தெரி­வித்­தது. இருந்­தா­லும் அந்த நாட்­டில் கொஞ்ச கால­மா­கவே தொற்று இருந்து வந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று வல்­லு­நர்­கள் நம்­பு­கி­றார்­கள்.

அதி­பர் கிம் அதிகபட்ச அவ­ச­ர­கால கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களை அமல்­ப­டுத்தி இருக்­கிறார்.

பொரு­ளி­யல் முடக்­க­மும் வேலை­யி­டங்­களில் கூடு­வோர் எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தும் அத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் அடங்­கும்.

வட­கொ­ரி­யா­வுக்கு ஆஸ்ட்­ரா­ஸெனகா தடுப்­பூசி மருந்­தை­யும் சீன தயா­ரிப்பு தடுப்­பூசி மருந்­து­களை­யும் கொடுக்க 2021ல் அனைத்­து­லக சமூ­கம் முன்­வந்­தது.

ஆனால் தன்­ எல்­லை­களை மூடி அதன்­மூ­லம் கொரோ­னாவைக் கட்டுப்­ப­டுத்­தி­விட்­ட­தாக 2020 தொடக்­கத்­தில் வட­கொ­ரியா தெரி­வித்­தது. தென்­கொ­ரியா, சீனா­வு­டன் வட­கொ­ரியா எல்­லை­க­ளைக் கொண்­டி­ருக்­கிறது.

சீனா­வில் ஓமிக்­ரான் தொற்று இப்­போது அதி­க­ரித்து இருக்­கிறது. வட­கொ­ரியா கேட்­டுக்­கொண்­டால் எவ்­வ­ளவு உதவி வேண்­டு­மா­னா­லும் செய்ய தயார் என்று தென்­கொ­ரியா தெரி­வித்து இருக்­கிறது.

இத­னி­டையே, நாட்­டில் கொவிட்-19 பர­வு­வதை மாபெ­ரும் பேரி­டர் என்று அதி­பர் கிம் சனிக்­கி­ழமை குறிப்­பிட்­டார்.

வட­கொ­ரியா உரு­வா­னது முதல் இந்த அள­வுக்குப் படு­மோ­ச­மான ஒரு பேரி­டர் இடம்­பெற்­ற­தில்லை என்று அதி­பர் கூறி­ய­தாக கேசிஎன்ஏ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

தொற்று கார­ண­மாக வட­கொரி­யா­வில் உணவு உற்­பத்­தி­யும் பாதிக்­கப்­ப­ட­லாம் என்ற அச்­ச­மும் நில­வு­கிறது.