சமய நல்லிணக்கத்தை பாதிக்கும் கருத்து; நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட முன்னாள் விரிவுரையாளர்

சமய நல்லிணக்கத்தை பாதிக்கும் கருத்து; நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட முன்னாள் விரிவுரையாளர்

2 mins read
cf604038-bb14-4199-a6f2-314d9bb13d32
ஆர்ச்சர்ட் ரோட்டில் தேவ் பர்கேஷிடம் (இடம்) இனவாதக் கருத்துகளை டான் தெரிவித்த தாகக் கூறப்படுகிறது. கோப்புப் படம்: தேவ் பர்கேஷ் ஃபேஸ்புக் -
multi-img1 of 2

நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் முன்­னாள் விரி­வு­ரை­யா­ளர் ஒரு­வர், சமய, இன உணர்­வு­களை புண்­ப­டுத்­தும் விதத்­தில் ேபசி­ய­தற்­காக நேற்று நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்பட்­டார்.

திரு டான் பூன் லீ மீது இன உணர்வை புண்­ப­டுத்­தி­ய­தா­க­வும் சமய நல்­லி­ணக்­கத்தை பாதிக்­கும் வகை­யில் கருத்­து­க­ளைத் தெரி­வித்­த­தா­க­வும் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி ஆச்­சர்ட் ரோட்­டில் உள்ள ஆங்­கு­லியா பூங்­கா­வில் 26 வயது தேவ் பர்­கேஷை எதிர்­கொண்­ட­போது அவர் அத்­த­கைய கருத்­து­களை தெரி­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. சிங்­கப்­பூ­ர­ரான இந்­திய-பிலிப்­பீனோ தம்­ப­திக்­குப் பிறந்த பர்­கேஷ், அப்­போது தனது சீனக் காத­லி­யு­டன் இருந்­தார்.

"சரி, நீ இந்­தி­யா­வி­லி­ருந்து வர­வில்லை. நீ சிங்­கப்­பூ­ரில் தங்­கு­வது குறித்­தும் எனக்­குப் பிரச்­சினை இல்லை. உனக்கு எதி­ராக எந்த எண்­ண­மும் இல்லை. ஆனால் சீனப் பெண்­களை நீ ஈர்க்க விரும்­பி­னால் அது சீனர்­க­ளுக்­குப் பிடிக்­காது," என்று தேவ் பர்­கே­ஷி­டம் டான் கூறி­ய­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன.

"நீ உன்­னு­டைய சம­யத்­தைப் பற்றி பெரு­மைப்­ப­டு­வ­தாக இருந்­தால் ஓர் இந்­தி­ய­ரையே நீ திரு மணம் ெசய்து கொள்ள வேண்­டும்," என்­றும் டான் சொல்லி யிருக்­கி­றார்.

சிங்­கப்­பூர் சீன-தாய்­லாந்து பெற்­றோ­ருக்­குப் பிறந்த தேவ் பர்ேக­ஷின் காதலி, அந்­தச் சம்­ப­வத்தை படம் பிடித்து சமூக ஊட­கத்­தில் பதி­வேற்­றி­னார்.

இதை­ய­டுத்து பல்­வேறு விமர் சனங்­கள் எழுந்­தன. டானும் பணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார். சிங்­கப்­பூ­ர­ரான டான், 2017 ஜூலை 28ஆம் ேததி நீ ஆன் பல­து­றைத் தொழில்­கல்­லூ­ரி­யில் நடந்த விரி­வு­ரை­யின்­போ­தும் இஸ்­லா­மிய சம­யம் தொடர்­பில் புண்­ப­டுத்­தும் விதத்­தில் கருத்து­க­ளைத் தெரி­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

2020 ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்த இணை­யக் கலந்­து­ரை­யா­ட­லி­லும் கேள்­வி­க­ளுக்கு அவர் சமய உணர்வை பாதிக்­கும் வகை­யில் பதில்­க­ளைத் தந்­த­தா­கச் சொல்­லப் படு­கிறது.

ஆபா­சப் படங்­களை வைத்­தி­ருந்­தது உட்­பட பல்­வேறு ஒழுங்­கீன நடத்­தை­க­ளுக்­கா­க­வும் அவரை நீ ஆன் பல­து­றைத் தொழில்­கல்­லூரி பணி­யி­லி­ருந்து நீக்­கி­யது.

மொத்­தம் நான்கு குற்­றச்­சாட்டு களை எதிர்­நோக்­கும் டானை 5,000 வெள்ளி பிணை­யில் விடு­விக்க நீதி­மன்­றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. ஜூன் 24ஆம் தேதி அவர் மீண்­டும் நீதி­மன்ற விசா­ர­ணைக்கு வர வேண்­டும்.

சமய உணர்­வு­களை புண்­ப­டுத்­தும் வகை­யில் கருத்­து­க­ளைத் ெதரி வித்­தால் சட்­டப்­படி மூன்று ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.