மாபெரும் 5வது விமான முனையம் தயாராகிறது

மாபெரும் 5வது விமான முனையம் தயாராகிறது

3 mins read
600f6748-7c48-4ec2-84b1-dfea5316d3f9
நேற்று இரண்டு நாள் விமானத் துறை உச்சநிலை மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர் எஸ். ஈஸ்வரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் விமானத் துறையில் எதிர்பாராத அதிவேக வளர்ச்சி

சிங்­கப்­பூர் விமா­னத் துறை, கொவிட்-19 தொற்­றுக்­குப் பிந்­திய காலக்­கட்­டத்­தில் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட அதி­வே­கத்­தில் மீண்டு வரு­வ­தால் அதன் ஆற்­றலை பெருக்­கும் வகை­யில் சாங்கி விமான நிலை­யத்­தின் 5வது முனை­யம் தயார்­ப­டுத்­தப் படு­கிறது.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த அந்த முனை­யத்­தின் கட்­டு­மா­னப் பணி­கள் மீண்­டும் தொடங்­கப்­படும் என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

இதன் தொடர்­பில் பேசிய ேபாக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், மாபெ­ரும் முனை­யத்­திற்­கான திட்­டங்­க­ளைத் தொடர அர­சாங்­கம் தயா­ராக இருக்­கிறது என்று குறிப்­பிட்­டார்.

தற்­போ­தைய மற்­றும் எதிர்­பார்க்­கப்­படும் உத்­தேச விமா­னத் துறை­யின் வளர்ச்சி உத்­வே­கம் அளிப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

அடுத்த பத்து ஆண்­டு­களில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை யின் வளர்ச்சி இரண்டு மடங்­காக அதி கரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதற்கு ஏற்ப ஐந்­தா­வது முனை­யம் 2030களின் மத்­தி­யில் தயா­ரா­கி­வி­டும். இரண்டு அல்­லது மூன்று ஆண்­டு­களில் அதன் கட்­டு­மா­னப் பணி­கள் தொடங்­கப்­படும்.

கடந்த 2020 மே மாதத்­தில் 5வது முனை­யத்­தின் கட்­டு­மா­னப் பணி­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டன.

கொவிட்-19 சவாலை முத­லில் சமா­ளித்­தாக வேண்­டும். அதன் பிறகு விமா­னப் பய­ணத்­திற்­கான தேவையை நன்கு புரிந்­து­கொண்டு கட்­டு­மா­னப் பணி­கள் மீண்­டும் தொடங்­கு­வது குறித்து முடிவு செய்­ய­லாம் என்று அர­சாங்­கம் அப்­போது கூறி­யி­ருந்­தது.

இந்த இைடப்­பட்ட காலத்­தில் 5வது முனை­யத்­தின் வடி­வ­மைப்பு காலத்­திற்கு ஏற்ப மாற்­றி­ய­மைக்­கப்­பட்­ட­தாக சாங்கி விமா­னத் துறை உச்­ச­நிலை மாநாட்­டில் பேசிய அமைச்­சர் ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

வடி­வ­மைப்பு தொடர்ந்து சீர் படுத்­தப்­பட்டு புதுப்­பிக்­கப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

சேண்ட்ஸ் கண்­காட்சி, மாநாட்டு மண்­ட­பத்­தில் நேற்று தொடங்­கிய மாநாடு இரண்டு நாட்­கள் நடை­பெ­றும்.

இதில் பங்­கேற்­கும் விமா­னத் துறை­யைச் சேர்ந்த 300க்கும் மேற்­பட்ட தலை­வர்­கள் அத்­து­றை­யின் எதிர்­கால வளர்ச்சி பற்றி ஆலோ­சிக்­க­வி­ருக்­கின்­ற­னர்.

அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்து சங்­கத்­தின் தலை­மைச் செய­லா­ளர் வில் வால்ஷ், அனைத்­து­லக சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து நிறு­வன மன்­றத் தலை­வர் சால்­வ­டோர் சயிக்­கி­யா­டானோ ஆகி­யோர் இந்த மாநாட் டில் பங்­கேற்­கும் முக்­கிய பிர முகர்­கள் சிலர்.

கடந்த மார்ச் மாதத்­தில் கொவிட்-19க்கு முந்­தைய நிலை­யு­டன் ஒப்­பி­டும்­போது இவ்­வட்­டார விமா­னப் பய­ணங்­க­ளுக்­கான தேவை 17 விழுக்­காடு மட்­டுமே கூடி­யது. ஆசிய-பசி­பிக் வட்­டா­ரத்­தில் சீனா, ஹாங்­காங், ஜப்­பான் உள்­ளிட்ட முக்­கிய சந்­தை­கள் இன்­ன­மும் மூடப்­பட்­டுள்­ளன.

இருந்­தா­லும் இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஊக்­க­மூட்­டும் வகை­யில் அதி­க­ரித்­துள்­ளது.

அனைத்துலக விமானப் போக்குவரத்து மீட்சியடைந்து 2023ல் கொவிட்-19க்கு முந்தைய நிலையை எட்டும் என்று திரு வால்ஷ் கணித்துள்ளார். இது, முன்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட ஓராண்டு முன்னதாகும்.

கடந்த மாதம் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை கொவிட்-19க்கு முந்தைய நிலையில் 40 விழுக் காட்டை தாண்டியது. இவ்வாண்டு இறுதிக்குள் அது 50 விழுக் காட்டைத் தொட வேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்கா கும்.

"அடுத்து வரும் மாதங்களில் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் விமானப் போக்குவரவு மேலும் வேகமெடுக்கும். இதர விமான நிலையங்களுக்கும் இந்த வளர்ச்சி விரிவடையும்," என்று அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.