ராஜீவ் காந்தி கொலையாளி பேரறிவாளனை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்தது

ராஜீவ் காந்தி கொலையாளி பேரறிவாளனை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்தது

2 mins read
248414ee-a65d-4e4c-8bff-43f9746039dc
பேரறிவாளன், உச்ச நீதிமன்றம் பிணை அனுமதித்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் தன் தாயார், ஆதரவாளர்களுடன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், எங்கள் பக்கம் இருந்த நியாயம்தான் எங்களுக்கு வலிமை கொடுத்தது. என் உறவுகளின் பாசம்தான் என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது என்றார். படம்: தமிழக ஊடகம் -

இந்­தி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்தி கொலை குற்­ற­வாளியான பேர­றி­வா­ளன், 31 ஆண்டு­க­ளுக்­குப் பிறகு நேற்று விடு­தலை செய்­யப்­பட்­டார்.

இந்­தி­யா­வின் உச்ச நீதி­மன்­றம் தன்­னு­டைய 142வது பிரி­வைப் பயன்­ப­டுத்தி பேர­றி­வா­ளனை, 51, விடு­தலை செய்­தது. ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழ்­நாட்­டில் ஸ்ரீபெரும்­பு­த்தூ­ரில் கொலை செய்­யப்­பட்­டார்.

அதன் தொடர்­பில் 1991ல் பேரறி­வா­ளன் உள்­ளிட்ட பல­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர். மொத்­தம் 26 பேருக்கு 1998 ஜன­வரி 28ஆம் தேதி தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அந்­தத் தண்­ட­னையை எதிர்த்து மேல்முறை­யீடு செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து சாந்­தன், முரு­கன், பேரறி­வா­ளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்­டும் தூக்­குத் தண்­டனை உறு­தி­ப­டுத்­தப்­பட்­டது.பிறகு 2000ஆம் ஆண்­டில் நளினி­யின் தூக்­குத் தண்­டனை ஆயுள் தண்­ட­னை­யா­கக் குறைக்­கப்­பட்­டது.

தொடர்ந்து இடம்­பெற்ற சட்ட, அர­சி­யல் பிரச்­சி­னை­களை அடுத்து 2014ல் சாந்­தன், முரு­கன், பேர­றி­வா­ளன் ஆகி­யோ­ரின் தூக்­குத் தண்­டனை ரத்து செய்­யப்­பட்­டது.

நெடுங்­கா­ல­மாக சிறை­யில் இருந்­து­வ­ரும் பேர­றி­வா­ளன், முருகன், சாந்­தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்­சந்­தி­ரன், ஜெய­கு­மார் ஆகிய ஏழு பேரை­யும் விடு­விக்­கும் அதி­கா­ரம் மாநில அர­சி­டமே இருப்­ப­தாக ஐந்து நீதி­ப­தி­கள் அடங்­கிய ஒரு குழு தீர்ப்­ப­ளித்­தது.

இந்த நிலை­யில், அவர்­களை விடு­விக்க முடிவு செய்த தமி­ழக அரசு அதை அனு­ம­திக்­கும்­படி மத்­திய அர­சுக்குக் கடி­தம் எழு­தி­யது.

ஆனால் அந்த முடிவை மாநில ஆளு­நரே செய்­ய­லாம் என்று உச்ச நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளிக்க, தமி­ழக அரசு ஏழு பேரை­யும் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யும்­படி ஆளு­ந­ருக்­குப் பரிந்­து­ரைத்­தது.

ஆனால், ஆளு­நர் எந்த முடிவையும் எடுக்­கா­த­தால் உச்ச நீதி­மன்­றம் தன்­ சிறப்பு அதி­காரத்தைப் பயன்­ப­டுத்தி பேர­றி வாளனை விடு­வித்துவிட்டது.

உச்ச நீதி­மன்ற உத்­த­ரவைத் தொடர்ந்து திருப்­பத்­தூர் மாவட்­டம் ஜோலார்­பேட்­டை­யில் நேற்று செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பேர­றி­வா­ளன், நல்­ல­வர்­கள் வாழ வேண்­டும் என்­பதே இயற்­கை­யின் நியதி என்றார்.

பேர­றி­வா­ள­னின் தந்­தை­யான குயில்­தா­சன், தன்­ புதல்­வர் விடு­விக்­கப்­பட்டு இருப்­பதை அறிந்து தான் பெரு­ம­கிழ்ச்சி அடை­வ­தா­கக் கூறி­னார்.

பேர­றி­வா­ளன் விடு­த­லைக்­காக அரும்­பா­டு­பட்டு வந்த அவ­ரின் தாயார் அற்­பு­தம்­மாள், தன் மக­னின் விடு­த­லைக்­காக 31 ஆண்டு காலம் போரா­டி­ய­தா­க­வும் விடு­தலைக்குக் குரல்­கொ­டுத்த அனை­வருக்­கும் தான் நன்றி கூறு­வ­தா­க­வும் கண்­ணீர் மல்க குறிப்­பிட்­டார்.

அதே­போல அவ­ரின் ஆத­ர­வா­ளர்­களும் அரசியல்வாதிகளும் மகிழ்ச்சி தெரி­வித்­த­னர். பேர­றி­வாளன் விடு­தலை­யாகி இருப்­பதை அடுத்து இதர ஆறு பேரும் விரை­வில் விடு­விக்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.